உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..
அன்று எங்கள் பள்ளியில் கம்பம் பகுதியில் பிரபலமான கண் மருத்துவமனை ஒன்றின் சார்பில் கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.. வழக்கம்போல ஊசி போடத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்குள் ஒரே கலவரம்.. அழுகையால் பள்ளியே அல்லோல கல்லோலப் பட்டது. சார்.. எனக்கு காய்ச்சல் இல்ல சார்.. கழுத்தக்கூட தொட்டுப்பாருங்க சார்.. இருமல் போயிருச்சு சார்.. மூக்கு ஒழுகல சார்.. ஊசிக்குப் பயந்த குட்டீஸ்கள் ஒரே கலாட்டா.. ஒருவழியாக ஊசிபோட வரல. கண் செக்கப் தான்னு சொல்லி சமாதானப் படுத்தி ஒவ்வொரு வகுப்பாக அனுப்பினோம். அடுத்து என்னுடைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒவ்வொருத்தராக அழைக்கப்பட்டனர். போர்டில் 1.. 2.. 3.. என 9 வரையிலான எண்கள் பல அளவுகளில் எழுதப்பட்டு மாணவர்களைப் பத்து அடி தூரத்தில் நிறுத்தி கேட்கும் எண்களைச் சரியாகச் சொல்கின்றனரா எனப் பரிசோதனை செய்யப்பட்டனர். சரியாகச் சொல்லி விட்டால் கண்பார்வையில் ஒரு பிரச்சனையுமில்லை.. பெரும்பாலான மாணவர்கள் சரியாகச் சொல்லிவிட்ட மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் நானும் என்னோடு பணிபுரியும் சக நண்பரும் ஒரு மாணவனின் வருகைக்காக காத...