Posts

Showing posts with the label சீமையில் இல்லாத புத்தகம்

சீமையில் இல்லாத புத்தகம் குறித்து ஆசிரியர் தி.தாஜ்தீன்

Image
தேனி மாவட்டம் எனும் பெயரை கேள்விப்பட்டதும் கண்ணுக்கு விருந்து, மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், குன்றுகள். பச்சைப்பசேல் எனப்பரந்து விரிந்த அழகிய இடங்கள், எண்ணிலடங்கா தேனி மாவட்டம், தமிழகத்தின் பொக்கிஷம், இயற்கை அழகின் தோட்டம், எப்போதும் மனதை கொள்ளை கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.  தேனிக்கு மற்றொரு பெருமை சேர்க்கும் விதமாக கல்விப் பணியில் எழுத்து ஆற்றலில் சிறப்பாக பங்காற்றி வருகிறார் தேனி சுந்தர் (Theni Sundar). தேனி சுந்தர் (Theni Sundar) அவர்கள் டுஜக் டுஜக், எதிர்பாராத பரிசு, மாணவர் மனசு, ஓங்கூட்டு டூனா, தேசிய கல்விக் கொள்கை, மற்றும் “சீமையில் இல்லாத புத்தகம்” போன்ற புத்தகங்களை எழுதி உள்ளார்கள். இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகளின் வாசிப்பு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. குறிப்பாக என்னைக் கவர்ந்த நூல் “ சீமையில் இல்லாத புத்தகம் ” (Seemaiyil Illatha Puthagam). இந்த புத்தகம் , குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவர்களது கற்பனை உலகை விரிவுபடுத்துவதிலும் சிறப்பாக பங்காற்றும் சக்தி கொண்டது. ஒரு அப்பா, இரு குழந்தைகள், ஒர...

சீமையில் இல்லாத புத்தகம் - வாசிப்பு அனுபவம் : கண்ணன்

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர்  தோழர் கண்ணன் அவர்களின் முகநூல் பின்னூட்டம்... சுந்தர் தோழர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. மேலும் பல புத்தகங்கள் தங்கள் மூலம் வரவும் பல பரிசுகள், பட்டங்களை பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..  தங்களின் சீமையில்லா புத்தகத்தை இன்று (7.4.2023) டெல்லி ஏப்.5 போராட்டத்திற்கு சென்று விட்டு ரயில் பயணத்தில் படித்தேன்.. எனது பேத்தி துளிர்விகா என்னிடம் கைபேசியில் தனது மழலை மொழியில் "த்தா சப்டியா?" என கேட்டு அசத்தியதை போல, உங்கள் குழந்தைகள் பேச்சு மழலை மொழி.. தமிழ் வார்த்தைகளை படிக்க படிக்க மிக சோர்வை கூட எனது மூளை தாங்கிக் கொண்டு புத்துணர்ச்சியுடன் படித்து முடித்து விட்டேன் தோழர்.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்.. - கண்ணன் 

சீமையில் இல்லாத புத்தகம் – நூல் குறித்து து.பா.பரமேஸ்வரி

Image
மனிதன் மொழியை இயற்கையிடமிருந்து கற்றான். பறவைகளின் கிறீச்சல்கள் பூச்சிகளின் ரீங்காரங்கள் காற்றின் அசைவு இலைகளின் இசைவுமழையின் ஓசை இடியின் மொழி அருவியின் சலசலப்பு என மொழிகளின் ஜீவிதம் இப்புவியில் தோன்றும் முன்னம் மனித உணர்வின் வெளிப்பாடுகளும் பரஸ்பர அறிவுறுத்தல்களும் இப்பேரண்ட படைப்புகளின் வழியே உதயமானது. தொடர்ந்து சப்த லயங்களும் குரல் ஓசைகளும் நாவின் சுழல்களும் மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சாதனங்களாகத் திகழ்ந்தன. சுற்றுச்சூழலின் வகைமைக்கேற்ப தட்பவெப்ப மாறுதலுக்கேற்ப மனிதக் குழுக்களின் ஒன்றிணைந்த பரிபாஷ சௌகரியங்கள் ஆங்காங்கே கவரப்பட்ட பல்லுயிர்களின் பரிபாலனங்களை உள்வாங்கியும் என மொழிகளின் ஜனனம் என்பது மனிதகுல பரிணாமத்தின் பரிமாண வளர்ச்சி, மொழி உற்பத்தியான வரலாறு. அதே போல் ஒரு குழந்தை தனக்கான மொழியை முதன்முதலில் யாரிடம் கற்கிறது என்று ஆராய்ந்தால் படைப்பின் இயற்கை வழியாக என்பது ஒருபுறமிருந்தாலும், பிற உயிர்களுக்கு தன்னியல்பாக வெளிப்படும் குரலதிர்வு அவற்றின் தாய்வழி மொழி மனித குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை ஆதலால் தேவையின் பொருட்டு தமது அழுகையில் வெளிப்படுத்துவதும், நிறைமையை தமது பொ...

கனிமங்கள் நிறைந்து ததும்பும் சுரங்கம்! : தேனி சீருடையான்

Image
சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம். உரையாடலுடன் கூடிய கேள்வியும் பதிலுமாய் நூறு பக்கத்துக்கும் மேல் நீள்வதால் இதைப் புதினம் என்று சொல்லலாமா? அப்படியும் சொல்ல முடியும். ஒவ்வொரு குழந்தையும் நோக்கமின்றி உரையாடுகின்றன. அறிவியல், உளவியல், அரசியல் என உள்ளடக்கக் கூறுகள் கலந்தும் கலைந்தும் கிடப்பதால் இது புதினம் இல்லை என்று சிலர் வாதிடுவர். ஆக, இது “சீமையில இல்லாத புத்தகம்” என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. உலகின் வேறு எந்த மொழியிலும் இம்மாதிரியான புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததே ஒரு புரட்சிச் சிந்தனைதான். இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரங்கள் மூன்று; டார்வின், புகழ்மதி, கீர்த்தி. அப்பா துணைப் பாத்திரமாய் வந்து போவார். அண்ணல் காந்தியடிகள் தனது சுய சரிதையில் குழந்தைக் கல்விபற்றி இப்படிக் கூறுவார். “குழந்தைகளுக்கு முதலில் கோடு போடவும் புள்ளி வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அது ஓவியமாய் மாறி மனசில் படியும்; அதுதான் முதல் கல்வி.” “அறுபது பக்க புஸ...

சீமையில் இல்லாத புத்தகம் : இரா.செந்தில்குமார்

Image
தேனி சுந்தர் அவர்களின் முந்தைய படைப்பான டுஜக் டுஜக் நூலின் பரந்துபட்ட வரவேற்பை தொடர்ந்து அதே வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது, சீமையில் இல்லாத புத்தகம். வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் பக்கமாக வசீகரிக்கும் அருமையான நூல். குழந்தைகளின் பேச்சு மொழியை பதிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்காகவே அவரை பாராட்டலாம். எல்லார் வீட்டிலும் குழந்தைகள் பேசுகிறார்கள் ஆனால் நாம் அவர்களின் பேச்சை கவனிக்கிறோமா என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்தவுடன் உடனே கடக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும்… ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளின் உலகத்தால் விரிகிறது…. அதில் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போதே பரவசமாகிறது….உடன் பயணித்தால் நம்மை வேறு மனிதர்களாக குழந்தைகள் மாற்றி விடுவார்கள் போலும். சீக்கிரமாக தீர கூடாது என மெதுவாக மெதுவாகவே வாசித்தேன்…. வாசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. உடனே வாசித்து கடக்கவும் முடியவில்லை… ஒரு சுகமான அனுபவம்.! கேள்விகளால் துளைத்தெடுக்கும் டார்வின்களுக்கு நாம் அளிக்கும் பதிலில் தான் அடங்கியுள்ளது குழந்தைகளின் வளர்ச்சி.. ஓரிடத்தில் டாடா ஸ்கை பற்றி டார்வின் ஒரு க...

சீமையிலே இல்லாத புத்தகம்தான் : பேரா.சோ.மோகனா

Image
வணக்கம் நண்பர்களே.. 06.10.22 அன்று விடியற்காலை ரயில் பயணம் மற்றும் காலை, பேருந்து பயணத்தின் போது, தேனி சுந்தரின் சீமையிலே இல்லாத புத்தகம் படித்தேன். ஒரே மூச்சில் 112 பக்கத்தையும், அணிந்துரையிலிருந்து, அவர் உரை வரை 9௦ நிமிடத்தில் படித்தாகிவிட்டது. என்ன சின்ன சின்ன கவிதை வரிகள் தான், எனவே படிக்க எளிதாகவும், விரைவாகவும் முடிந்தது, ஆனால் சீமையில் இல்லாத புத்தகம் படு சூப்பராக இருந்தது. ஆனால் வழக்கம்போல பல பணிகளால் அதனைப் பற்றிய பதிவு எழுத தாமதமாகிவிட்டது. நெசமாகவே இது சீமையிலே இல்லாத புத்தகம்தான். குழந்தைகளின் மழலை மொழியை பொதுவாக யாரும் பதிவு செய்வதில்லை. மழலை மொழிகளையே பதிவு செய்து இலக்கியம் ஆகிவிட்டார் தோழர் தேனி சுந்தர். படா கில்லாடி தான் இவர். கொஞ்சமும் கற்பனை கலக்காமல், அதற்கான அவசியமே இல்லாமல், நெசமான மழலை மொழியை பேசி மனதை கவர்தல் என்றால், வாழ்க்கை மொழியை குடும்ப மொழியை இலக்கியமாக்கிய முதல் மனிதர் இவராகத்தான் இருக்க முடியும். வாழ்த்துக்கள் மகனே… “வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்.” மேலும் சுந்தர் மகன் டார்வினின் கை ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. ஒரு சிறு பையனா இதனைப் போட்டான் என்று ...

சீமையிலே இல்லாத புத்தகம் வாங்கி படிங்க : அமுதா செல்வி

Image
ஒரு வழியா “சீமையிலே இல்லாத புத்தகம்” வந்து சேர்ந்து விட்டது. கையில் கிடைத்ததும் வாசிக்க தொடங்கி விட்டேன். அட்டை படமே அட்டகாசமா இருக்கு. திருப்பி பார்த்தால் ஆசிரியர் குறிப்பு அதைவிட பிரமாதம். ஆஹா….. நிச்சயமா இது “சீமையில இல்லாத புத்தகம்” தான்.. இப்படி ஒரு ஆசிரியர் குறிப்பு இதுவரை நான் பார்த்ததில்லை. என்னமோ தெரியாது… சிலரிடம் காரணமே இல்லாமல் ஒருவித உணர்வு நெருக்கம் ஏற்படும். உடனே ‘முறை’ சொல்லி கூப்பிட தோணும். ச. தமிழ்ச்செல்வன் அண்ணனை பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு உணர்வு தோன்றும். அப்பா வயதுகாரர் என்றாலும் அண்ணன் என்று கூப்பிட கூப்பிட இனிப்பா இருக்கும். அது போன்றதொரு நெருக்கம் எனக்கு புகழ்மதியோடு ஏற்பட்டுள்ளது. “மருமகளே” என்று தாடையை பிடித்து கொஞ்ச தோன்றும் நெருக்கம். நான் அவளை நேரில் பார்த்ததே இல்லை. எனக்கும் அவளுக்குமான உரையாடல்கள் அத்தனையும் டுஜக் டுஜக் புத்தகமும் அதனை தொடர்ந்து வரும் வாட்ஸ் அப் செய்திகளும் மட்டுமே. இரண்டு மூன்று நாள் தகவல் இல்லை என்றால் கூட எங்கே போய்ட்டீங்க என்று கேட்க தோணும். நேற்று புத்தகம் கையில் கிடைத்ததும் அவளையே நேரில் பார்த்த மகிழ்ச்சி. ஒவ்வொரு பக்கம் படித்...