Posts

Showing posts with the label உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார்

இந்த நூல் என்னை என் மாணவர்கள் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது : பா.விமலாதேவி, ஆசிரியர்

Image
உண்மையிலேயே இப்புத்தகத்தின் நூலாசிரியர் அவர்களுக்கு ரொம்ப தைரியம்தான். ஏனெனில் இத்தனை உண்மைகளை நறுக்குத் தெறித்தார் போல் பட்டென பதிவு செய்வதற்கு ஒரு மனோதிடம் வேண்டும். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.. சரி, தப்பாக போன அந்த ஜட்ஜ்மெண்ட் என்ன என்று பார்க்கலாம் வாங்க. முதலில் அந்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்று சொல்வது யார் என்று நினைக்கின்றீர்கள். ஒரு சில கட்டுரைகளில் மாணவன் சில கட்டுரைகளில் ஆசிரியர் சில கட்டுரைகளில் பொதுமக்களின் பொது புத்தி என எடுத்துக் கொள்கிறேன் நான். மொத்தத்தில் இந்த தீர்ப்பானது தவறு என்று உயர் அதிகாரிகளையும் , கல்வி நடைமுறைகளையும் அதனை வகுப்பறையில் பரிசோதிக்கும் ஆசிரியர்களையும் சுட்டுகிறது. கணிதமும் அறிவியலும் கசப்பென வாழ்ந்த ஒரு மாணவன் இரண்டையும் கற்கண்டாய் கையில் எடுத்து ஆசிரியராக உருமாறியபோது அவருள் எழும்பிய வினாக்களின் தொகுப்பு இக்கட்டுரைகள் எனலாம். வாசிக்கும்போது இவையெல்லாம் உண்மை நிகழ்வுகள் என்று தான் எடுத்துக் கொள்ள முடிந்தது. தன்னைவிட மேல்மட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு இளம் பணியாளருக்கும் மூத்த பணியாளர்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக எப்படி அவர...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் : இந்துமதி ஆசிரியர்

Image
கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது. சின்னச்சின்ன கட்டுரைகளில் பெரியபெரிய சிந்தனைகளைத் தூவிச் செல்கிறார் ஆசிரியர். 25 கட்டுரைகளும் மிகமிகச் சிறியவை. ஆனால் அவை ஒவ்வொன்றும் நம் ஆசிரியச் சமுதாயத்தைச் செதுக்கும் உளிகள். ஆசிரியர்களாகிய நாம் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களையும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்குத் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத இடைப்பட்ட மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட மாணவனான ‘சரவணன்’ பற்றிக் கூறுகிறது ‘உனக்குரிய இடம் எங்கே…?’ என்னும் கட்டுரை. ‘இம்மாணவனுக்கு வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட தரவில்லையே’ என வருத்தப்படுகிறார். இது முற்றிலும் உண்மையாகவே தோன்றியது. கணக்கு வாத்தியார் என்றாலே சிரிக்காத முகம்…ஐந்தாம் வகுப்பில் வட்டம் ஒழுங்காக வரையாததால் முதுகில் போட்ட அடி… அன்றைக்குக் கணக்குப் பாடத்திற்குப் பயந்து மேல்நிலை வகுப்பில் கணக்குப் பாடம் இல்லா பிரிவில் சேர்ந்து படித்தது பற்றி, ‘கணக்கு இனிக்கும்’ என்னும் கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை அப்படியே என் பள்ளி வாழ்வை நினைவூட்ட...

சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் : சீனி சந்திரசேகரன்

Image
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என கையொப்பமிட்டு நூலாசிரியரால் அனுப்பப்பட்ட புத்தகம்.  சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் இது நூலில் இருந்து.. பாடம் நடத்துச் செல்லும் பொழுது கோபத்தை வாசலில் நிற்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்குள்ளே செல்லுங்கள். நிறைய சிரிங்க! உடம்புக்கு நல்லது! உங்க மனசுக்கும் நல்லது. வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டிய அடங்கி இருப்பதும் தான் எதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா? ஒரு பக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பதில் நியாயமா?  படம் எழுப்பும் கேள்வி. அடிக்கடி கேட்பதால் மட்டுமே அறதப்பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற எண்ண்ம் எந்த அளவிற்கு தவறான ஒன்று என்பதை விளக்கும் மாணவர்கள் சொல்லும் புரியாத வார்த்தைகள்.. இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசாணை விதிமுறை தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை. கல்வியாளர்களிடம் இருக்கிறது. கல்வி சார்ந்த நூல்களில் இர...

உனக்குள் புதிய ஆசிரியன் - இந்து தமிழ் திசை நாளிதழ்

Image
ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் வழக்கமாக வருவது போல அனுஸ்ரீ என்கிற குழந்தை அன்றும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறாள். தாமதமாக வந்ததற்கு ரெண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டேன். ஒரு விபத்தில் சிக்கி அனுஸ்ரீயின் அப்பாவும் தாத்தாவும் மருத்துவமனையில் இருக்கிற செய்தி நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது. காரணம் விலகல்.. ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி... - இப்படியான தொடர் சுயபரிசோதனைக்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர். இவர் எழுதி பிரபல இதழ்களில் வெளியான கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்.. தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் அனைத்துப் பரிமாணங்களையும் உற்றுக் கவனித்து பல்வேறு கோணங்களில் அலசும் இந்நூலை ஆசிரியர்கள் வாசித்தால், அவர்களும் புதிய ஆசிரியனாக உதித்தெழுவது திண்ணம்.. - இந்து தமிழ் திசை நாளிதழ் ஜன.13.2026

சுந்தரின் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கரெக்ட்.... : கவிஞர் இதயநிலவன்

Image
வணக்கம் தோழர்களே, சரியான ஜட்ஜ்மெண்டில் எழுதப்பட்டிருக்கும் உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்கிற கட்டுரை நூல். முதலில் இந்த தலைப்பிற்குள் எழுத வேண்டும் என்று முடிவு செய்த தோழர் ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .... தான் பணி செய்கிற துறையில் நிகழ்கிற செயல்பாடுகளை துணிச்சலான வார்த்தைகளோடு எழுதியிருக்கிறார் .... கல்வி என்பது இன்றைய காலகட்டத்தில் பணம் ஈட்டும் ஒரு ஏடிஎம் மிஷினை போல மாணவர்களை தயார் படுத்தும் அவல நிலை நிகழ்வதை ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை தொகுதி சொல்லி முடிக்கிறது.. முதல் கட்டுரையில் தொடங்கி ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் விடயங்கள் மாணவர்களுக்கு, மாணவர்களின் சிந்தனைக்கு, மாணவர்களின் வாழ்க்கை முறைக்கு மாணவர்களின் உடல் மற்றும் மனநிலையை இரண்டாம் பட்சமாக கருதும் ஒரு கல்விச் சூழல் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் தைரியமாக சொல்லிக் காட்டுகிறார். ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி மட்டுமல்ல ஒரு பாதுகாப்பான பணி என்பதையும், நமக்கு இணையாக, அல்லது அதற்கும் மேல் ஆசிரியர் படிப்பை படித்துவிட்டு அன்றாடம் காட்சிகளாக இருக்கும் பல ...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
  குழந்தைகளின் கண்களுக்கு ஊரையும் உலகத்தையும் காட்டுவதோடு இன்னொரு பக்கம் உள்ள உலகத்து ஜன்னலையும் திறந்து காட்டச் செய்கிறது இந்தப் புத்தகம். வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் ஏற்பட்ட உரையாடலையும் அனுபவங்களையும் தன் பாணியில் 25 தலைப்புகளில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். - கனவு ஆசிரியர் மாத இதழ் அக்டோபர், 2025

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

Image
தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்! திட்டமிடாத வகுப்பறைகள்.. மாணவர் மனசு.. உங்க ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்.. தேனி சுந்தர் இதுவரை படைத்துள்ள நவரத்தினங்களில் மிகவும் முக்கியமான தொகுப்புகள் தற்போது வெளிவந்துள்ள மேலே சொன்ன மூன்று தொகுப்புகள். தேனி சுந்தர் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பண்பாட்டு தளத்தில் செயல்பாட்டாளர் (Teacher is a cultural activist) என்று பாவ்லோ ஃபிராயரே கூறுவர். ஆசிரியருக்கான இந்த வரையறை தேனி சுந்தருக்கு பொருந்தும். கெட்ட வார்த்தையா? கேட்ட வார்த்தையா? குற்றவாளி கூண்டில் நம் அனைவரையும் நிறுத்தும் "திட்டமிடாத வகுப்பறைகள்". இது போன்ற ஏராளமான கேள்விகளை "மாணவர் மனசு" மற்றும் "உங்கள் ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்" எழுப்புகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை பகிர்வதன் மூலம் தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்கிறார் தேனி சுந்தர். இதை படிப்பவர் ஒரு குழந்தையின் மனநிலையை உணர முடியும். உணர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதே போன்ற நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்டால், ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு பூந்தோட்டம்தான். ஒவ்வொரு மாணவரும் பட்டாம்பூச்சிதான்....

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : நூல் வாசிப்பு அனுபவம் : ஆசிரியர் ஐ.சுமதி

Image
புத்தகத்தின் அட்டை படத்தையும் தலைப்பையும் பார்க்கும் போது உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..  நூல்   ரொம்ப polite மாதிரி தான் தெரியும்.. ஆனா அப்படி இல்ல... நம்முடைய அந்த ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு.. கட்டுரைகள்  எல்லாமே ரௌத்திரம்..! உனக்குரிய இடம் எங்கே?,  விடுங்க சார்.. திட்டாதீங்க சார்.. படிக்க வைக்கவா? எதார்த்தத்தை விவாதிக்க வைக்கவா?, மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும் ?,  கைய கட்டு ..வாய பொத்து ..,  கேள்வியா கேட்கிற கேள்வி?, எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு ? - இப்படியான இந்நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.  தலைப்புகளில் பல கேள்விகள்... இந்த கேள்விகளில் மாணவன் ஆசிரியரை நோக்கி கேட்கும் கேள்விகள் மட்டுமல்ல,  ஆசிரியர் அதிகாரியை நோக்கி கேட்கும் கேள்விகளும் அடங்கும்.. கணக்கும் இனிக்கும் என்ற கட்டுரையில் கணக்கு ஆசிரியர் என்றாலே " ஏன் கோபம்? சிடுசிடுப்பு? சிரிச்சா என்ன? (கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போய் பார்த்தால் நம் கணித ஆசிரியர் எல்லாருமே கொஞ்சம் உர்ன்னு தான் இருந்துருக்காங்க🤔) "சிரிக்கத் தெரியாத மனிதர்களைப் பார்த்தால் சிரிக்க தோன்றும் எனக்கு " என்கிற கவிஞர்...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
 

ஒரு புதிய ஆசிரியனின் எழுத்து: "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." நூல் குறித்து எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன்

Image
சுந்தரின் பத்தாவது நூலை வாசிக்கிறேன். வழக்கம் போல தலைப்பிலேயே ஜொலிக்கிறார் சுந்தர். "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." பேச்சு வாக்கில் இருக்கிறது தலைப்பு. சின்னப் பையன் ரேப்பரில் சிலேட்டோடு நிற்கிறான். அவன் முழியே அர்த்தம் சேர்க்கிறது. அவன் கேள்வி கேட்கும் பையன்; பகடி செய்யும் பையன். வாத்தியாரை, பள்ளிக் கூடத்தை, அதிகாரத்தை, சமூகத்தை, அரசை என யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியொரு பையனாகவும் ஆசிரியராகவும் அமைப்பாளராகவும் இருந்து வந்த சுந்தர் எழுதிய நூல் இது. இதுவரையிலான சுந்தரின் புத்தகங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வீடு- மகன், மகளோடு ஒரு அப்பாவாக சுந்தர் உரையாடியவை. இரண்டாவது பள்ளிக்கூடம் - மாணவர்களோடு ஒரு ஆசிரியராக சுந்தரின் அனுபவங்கள். இந்த நூலும் இரண்டாம் வகைதான். ஆனால் வகுப்பறையோடு நிற்கவில்லை. அதற்கு வெளியிலும் இயங்குகிறது. ஒரு கலவையான அனுபவத்தைத் தருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்தை களமாகக் கொண்டு சில கட்டுரைகள் இருக்கின்றன. இதுவரை நான் எழுத்தில் வாசிக்காத பகுதியிது. பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி வந்து நிற்கும் ஓர் ஆசிரியரை போய் சாகச் சொல்கிறா...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - நூல் குறித்து மதுரை அமுதா செல்வி, எழுத்தாளர்

Image
தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்ற கட்டுரை தொகுப்பு மொத்தம் 25 கல்விசார் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் குழந்தைகளுக்காக பேசும் தேனி சுந்தர் அவர்களை வளர்ந்த குழந்தையாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் குழந்தையின் வலியை அவர்களின் தேவையை அவர்களைத் தவிர வேறு யாரும் கச்சிதமாக எடுத்துச் சொல்ல முடியாது என்ற கருத்தியலில் மிகுந்த நம்பிக்கை உடையவள் நான்.  இந்த ஒட்டுமொத்த கட்டுரை தொகுப்பில் அவர் குழந்தைகளுக்காக மிக வீரியத்துடனும் கூர்மையுடனும் கேள்விகளை முன் வைக்கிறார். மாணவர்களை தோல்வியுறச் செய்யும் ஆசிரிய மனோபாவத்தை மிக நேர்மையாக பதிவு செய்கிறார். இவனுக்கு எங்க வகுப்பறையில் ஒரு இன்ச் இடம் கூட யாரும் தரவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு வாசிப்போரையும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறித்து அவர் பேசியது மிக சிறப்பு. ஆசிரியர்கள் புரிந்து கொண்ட நிலையில் இருந்து குழந்தைகளுக்கு கற்பிக்காமல் குழந்தைகள் ஒரு கணக்கையோ கருத்தையோ எவ்வாறு புரிந்து கொள்கிறார்களோ அந்த புரிதல் நிலை...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் நூலறிமுகம் : புத்தகம் பேசுது இதழில் பேரா.மோகனா அவர்கள்

Image
  கட்டுரையை வாசிப்பதற்கான லிங்க்.. ‘வாசிப்பு வித்தாக மனதில் விழும்.. மலராக உலகுள் முகிழ்க்கும்..’ வணக்கம் நண்பர்களே! தேனி சுந்தர், அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தவர் கல்விக் குழுவில் இருந்து பணியாற்றியவர். புது விழுதின் ஆசிரியராக இருந்தவர். இப்போது, ஆசிரியர்களின் கருத்துகளை பதிவிடும், குரல்களை ஒலிக்கும் ‘புதிய ஆசிரியன்’ மாத இதழின் துணை ஆசிரியர்.; கல்வியாளர்; பள்ளிக் குழந்தைகளின் சொந்தக்காரர்;.மாணவர்கள் நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர்.;கல்வி சார்பாக கருத்துகளை, குரலொலியை தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’, ‘புதிய ஆசிரியன்’ மற்றும் ‘வண்ணக் கதிர்’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வருபவர். பணியிடமும் வசிப்பிடமும் கம்பம் தான். அவருடைய புத்தகங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவைதான். யாராவது ‘டுஜக் டுஜக்’ என்று ஒரு புத்தகத்திற்கு பெயர் வைப்பார்களா! துணிந்து வைத்திருக்கிறார்.. அந்தப் புத்தகமும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த புத்தகம் ‘சீமையில் இல்லாத புத்தகம்’ என்னடா இப்படி ஒரு பேரு என்று நினைத்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.. அடுத்து ...

பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! : உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்பத் தப்பு சார் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்

Image
பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! கஸ்தூரி ரெங்கன் கமிட்டி தயாரித்த தேசியக் கல்விக் கொள்கை வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்ட்டது. குழந்தைமைப் பருவத்தின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிக்கை வரையறுத்துள்ள சில கோட்பாடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்பதை சாதாரண வாசகன் கூட புரிந்துகொள்ள முடியும். ஆறு வயதுக்குள் குழந்தைகள் 85 விழுக்காடு மூளைவளர்ச்சி பெறுகிறார்கள் (பக்கம் 19) என்று கண்டுபிடித்திருக்கிறது அறிக்கை. இது இயற்கையியல் பரிமாணக் கோட்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. எந்த அறிவியல் ஞானத்தின் வழியாக இந்த “உண்மை” கண்டுபிடிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆரியக் குழந்தைகள் அந்த இலக்கை எட்டி இருக்க முடியும். அதுவும் கூட முழுமையானது அல்ல. ஏனென்றால் குருகுலக் கல்வி கற்பிக்கப் பட்ட காலத்திலேயே ஒரேவிதமான ஞானத்தைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கான சில கிராமியக் கதைகள் உண்டு. வாழ்வியல் சூழலும் அனுபவமும்தான் மூளைவளர்ச்சிக்கான கிரியா ஊக்கிகள். இதை கல்வியாளர் தேனிசுந்தர் இந்தப் புத்தகத்தில் மி...

"உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" : எம்.ஜே.பிரபாகர் அவர்களின் வாசிப்பு அனுபவம்..

Image
"சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு பிடிக்காத பாடம் கணக்கு" கணக்கு பாடம் படிக்கக்கூடாது என்ற நிலையில் பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தவர், பிளஸ் டூ முடித்தவுடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியில் சேருகிறார். 19 வயதில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்குகிறார். பயிலும் மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் போது ஆசிரியருக்கு கடுகடுப்பும் கோபமும் ஏற்படுகிறது. அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட போது புதியபாதை தோன்றுகிறது. ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை, துவக்க நிலை வகுப்புகளில் கற்புக்கும் போது மிகவும் அன்புடன் கற்பிக்க வேண்டும் என்று என்பதை புரிந்து கொள்கிறார். அறிவியல் கருத்தரங்கில் கற்றுக்கொண்ட சிறு சிறு பயிற்சிகள் மூலம் கணக்குகளை மாணவர்களுக்கு எளிய வகையில் கற்பித்து புரிய வைக்கிறார். மாணவர்கள் கணக்கை புரிந்து கொண்டார்கள் என்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார். கணக்கு பாடம் நடத்தும் போது மாணவர்களை ஒருபோதும் விரட்டுவதும், மிரட்டுவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். தொடர்ந்து மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை இனிக்கும் பாடமாக மாற்றுகிறார். அவரது அனுபவத்தை மற்றவர்களுக...