Posts

Showing posts from May, 2026

மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் : விமலாதேவி, ஆசிரியர்

Image
ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களது படைப்பை சமீப காலங்களில் வாசித்து அவருடைய அன்பான அரவணைப்பில் மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். பொதுவாகவே தொடக்கக் கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் அதில் நிரப்பப்படும் பணியிடங்களானது பெரும்பாலும் பெண் ஆசிரியர்களையே முன்னுரிமைப்படுத்துவர். காரணம், பெண் ஆசிரியர்கள் தான் தாய்மை உள்ளத்தோடும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு கரிசனையோடும் செயலாற்றும் பக்குவம் கொண்டிருப்பர் என்பதால் தான். இருப்பினும் ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் பொழுது அவர்கள் அவ்விடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால் இப்படி ஒரு ஆசிரியர் மாணவர்களோடு மாணவர்களாக கலந்து பேசி மகிழ்ந்து உறவாடி விளையாடி களியாடிக் கொண்டிருப்பதை ஆசிரியரின் எழுத்துக்களில் தான் அறிய முடிந்தது. இந்த புத்தகத்திற்கான தலைப்பு ஆசிரியர் “மாணவரின் மனசு” என்று வைத்திருப்பது, உண்மையில் மாணவர் மனசு என்று ஒரு திட்டமானது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் செயல்படுகிறதை மையப்படுத்தி தான். ஒரு சிவப்பு வண்ண பெட்டி ஒன்று மாணவர் மனசு என்று எழுதி பள்ளிக்கூடங்க...

ரெடி... ஆக்சன்.......

Image
நேற்று முன்தினம் பாண்டா பிளான் என்றொரு ஜாக்கிசான் படம் பார்த்தேன். இருபது வருடங்கள் கழித்து ஜாக்கிசான் படம் ஒன்றை முழுமையாக பார்த்தேன். ஆசிரியர் பணிக்கு வரும் முன்பு திராட்சை தோட்ட தொழிலாளியாக சில காலம் வேலை செய்து கொண்டிருந்த போது சிவச்சந்திரன் உள்ளிட்ட சக வயது நண்பர்களுடன் அருகில் உள்ள காமயகவுண்டன் பட்டி , சுருளிபட்டி கிராமங்களில் உள்ள திரையரங்குகளில் ஜாக்கிசான், புருஸ்லீ, ஜெட்லீ படங்கள் பார்த்து விட்டு சாவகாசமாக பேசிக்கொண்டு, இரவில் நடந்து வீடு வந்து சேர்வோம்.. மற்ற படங்களை விட ஜாக்கிசான் படம் என்றால் சண்டைக்கு சண்டை, சிரிப்புக்கு சிரிப்பு, விறுவிறுப்பு இருக்கும்.. அப்படியான எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தையும் பார்த்தேன்.. ஆனால் இந்த படம் வேறு மாதிரியான அனுபவமாக இருந்தது.. படத்தில் ஜாக்கி ஒரு திரைப்பட நடிகராகவே வருகிறார். உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பாண்டா கரடி குட்டி பிறக்கிறது. அதை தத்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி கலந்து கொள்கிறார். இன்னொரு புறம் ஒரு பெரிய பணக்கார குடும்பத்துக்கு அந்த பாண்டா குட்டி தேவைப்படுகிறது. தன் மகளுக்காக அதை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட தயாராக இர...

அழகோ அழகு : மாணவர் மனசு நூல் குறித்து பா.இந்துமதி, ஆசிரியர்

Image
இப்புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இவ்வாசிரிய எழுத்தாளரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கும், அவரின் குழந்தை மனசுக்கும் என் மனம் அடிமையாகிவிட்டது என்றே கூறலாம். இவரிடம் படிக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் என ஆசிரியரான எனக்கே அவர்மீது பொறாமை கொள்ள வைத்தது. குழந்தைகளோடு குழந்தைகளாக வாழும் உலகம் இனிமையானது. கள்ளம் கபடம் இல்லாதது. உண்மையானது. அவர்கள் உலகத்திற்குள் சென்று, அவர்களை அரவணைத்து அவர்களோடு அவர்களாக, அவர் பாடம் நடத்தும் முறை பற்றி விவரிக்கும் 16 கட்டுரைகளும் அழகோ அழகு. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரு தெய்வம் போல. அவர்களுக்கு ஆசிரியரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். அலாதி பிரியம். சார், உங்க ஊர் எது சார்? எனக் கேட்பதும், உங்க ஊரைக் கண்டுபிடிச்சிட்டேன் சார். உங்கத் தெருவைக் கண்டுபிடிச்சிட்டேன் சார், என்று பள்ளி மாணவர்கள் கூறும்பொழுது, “சார் வீட்ல புதுசா ஒன்னும் இல்ல… சார் பெருமையா சொல்லிக் கொள்கிற அளவுக்கு சரித்திர முக்கியத்துவம் இல்லாத வீடு தான். அதுவும் நம்ம வீடு மாதிரி அதுவும் ஒரு சாதாரண வீடுதான்னு புரிஞ்சுக்குவான். ஆனா, அந்தக் குட்ட...