Posts

Showing posts from 2026

இந்த நூல் என்னை என் மாணவர்கள் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது : பா.விமலாதேவி, ஆசிரியர்

Image
உண்மையிலேயே இப்புத்தகத்தின் நூலாசிரியர் அவர்களுக்கு ரொம்ப தைரியம்தான். ஏனெனில் இத்தனை உண்மைகளை நறுக்குத் தெறித்தார் போல் பட்டென பதிவு செய்வதற்கு ஒரு மனோதிடம் வேண்டும். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.. சரி, தப்பாக போன அந்த ஜட்ஜ்மெண்ட் என்ன என்று பார்க்கலாம் வாங்க. முதலில் அந்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்று சொல்வது யார் என்று நினைக்கின்றீர்கள். ஒரு சில கட்டுரைகளில் மாணவன் சில கட்டுரைகளில் ஆசிரியர் சில கட்டுரைகளில் பொதுமக்களின் பொது புத்தி என எடுத்துக் கொள்கிறேன் நான். மொத்தத்தில் இந்த தீர்ப்பானது தவறு என்று உயர் அதிகாரிகளையும் , கல்வி நடைமுறைகளையும் அதனை வகுப்பறையில் பரிசோதிக்கும் ஆசிரியர்களையும் சுட்டுகிறது. கணிதமும் அறிவியலும் கசப்பென வாழ்ந்த ஒரு மாணவன் இரண்டையும் கற்கண்டாய் கையில் எடுத்து ஆசிரியராக உருமாறியபோது அவருள் எழும்பிய வினாக்களின் தொகுப்பு இக்கட்டுரைகள் எனலாம். வாசிக்கும்போது இவையெல்லாம் உண்மை நிகழ்வுகள் என்று தான் எடுத்துக் கொள்ள முடிந்தது. தன்னைவிட மேல்மட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு இளம் பணியாளருக்கும் மூத்த பணியாளர்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக எப்படி அவர...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் : இந்துமதி ஆசிரியர்

Image
கற்பிக்கச் செல்லும் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது. சின்னச்சின்ன கட்டுரைகளில் பெரியபெரிய சிந்தனைகளைத் தூவிச் செல்கிறார் ஆசிரியர். 25 கட்டுரைகளும் மிகமிகச் சிறியவை. ஆனால் அவை ஒவ்வொன்றும் நம் ஆசிரியச் சமுதாயத்தைச் செதுக்கும் உளிகள். ஆசிரியர்களாகிய நாம் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களையும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்குத் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத இடைப்பட்ட மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட மாணவனான ‘சரவணன்’ பற்றிக் கூறுகிறது ‘உனக்குரிய இடம் எங்கே…?’ என்னும் கட்டுரை. ‘இம்மாணவனுக்கு வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட தரவில்லையே’ என வருத்தப்படுகிறார். இது முற்றிலும் உண்மையாகவே தோன்றியது. கணக்கு வாத்தியார் என்றாலே சிரிக்காத முகம்…ஐந்தாம் வகுப்பில் வட்டம் ஒழுங்காக வரையாததால் முதுகில் போட்ட அடி… அன்றைக்குக் கணக்குப் பாடத்திற்குப் பயந்து மேல்நிலை வகுப்பில் கணக்குப் பாடம் இல்லா பிரிவில் சேர்ந்து படித்தது பற்றி, ‘கணக்கு இனிக்கும்’ என்னும் கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை அப்படியே என் பள்ளி வாழ்வை நினைவூட்ட...

மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் : விமலாதேவி, ஆசிரியர்

Image
ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களது படைப்பை சமீப காலங்களில் வாசித்து அவருடைய அன்பான அரவணைப்பில் மாணவர்களோடு மாணவர்களாக நானும் லயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். பொதுவாகவே தொடக்கக் கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் அதில் நிரப்பப்படும் பணியிடங்களானது பெரும்பாலும் பெண் ஆசிரியர்களையே முன்னுரிமைப்படுத்துவர். காரணம், பெண் ஆசிரியர்கள் தான் தாய்மை உள்ளத்தோடும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு கரிசனையோடும் செயலாற்றும் பக்குவம் கொண்டிருப்பர் என்பதால் தான். இருப்பினும் ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் பொழுது அவர்கள் அவ்விடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால் இப்படி ஒரு ஆசிரியர் மாணவர்களோடு மாணவர்களாக கலந்து பேசி மகிழ்ந்து உறவாடி விளையாடி களியாடிக் கொண்டிருப்பதை ஆசிரியரின் எழுத்துக்களில் தான் அறிய முடிந்தது. இந்த புத்தகத்திற்கான தலைப்பு ஆசிரியர் “மாணவரின் மனசு” என்று வைத்திருப்பது, உண்மையில் மாணவர் மனசு என்று ஒரு திட்டமானது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் செயல்படுகிறதை மையப்படுத்தி தான். ஒரு சிவப்பு வண்ண பெட்டி ஒன்று மாணவர் மனசு என்று எழுதி பள்ளிக்கூடங்க...

ரெடி... ஆக்சன்.......

Image
நேற்று முன்தினம் பாண்டா பிளான் என்றொரு ஜாக்கிசான் படம் பார்த்தேன். இருபது வருடங்கள் கழித்து ஜாக்கிசான் படம் ஒன்றை முழுமையாக பார்த்தேன். ஆசிரியர் பணிக்கு வரும் முன்பு திராட்சை தோட்ட தொழிலாளியாக சில காலம் வேலை செய்து கொண்டிருந்த போது சிவச்சந்திரன் உள்ளிட்ட சக வயது நண்பர்களுடன் அருகில் உள்ள காமயகவுண்டன் பட்டி , சுருளிபட்டி கிராமங்களில் உள்ள திரையரங்குகளில் ஜாக்கிசான், புருஸ்லீ, ஜெட்லீ படங்கள் பார்த்து விட்டு சாவகாசமாக பேசிக்கொண்டு, இரவில் நடந்து வீடு வந்து சேர்வோம்.. மற்ற படங்களை விட ஜாக்கிசான் படம் என்றால் சண்டைக்கு சண்டை, சிரிப்புக்கு சிரிப்பு, விறுவிறுப்பு இருக்கும்.. அப்படியான எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தையும் பார்த்தேன்.. ஆனால் இந்த படம் வேறு மாதிரியான அனுபவமாக இருந்தது.. படத்தில் ஜாக்கி ஒரு திரைப்பட நடிகராகவே வருகிறார். உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பாண்டா கரடி குட்டி பிறக்கிறது. அதை தத்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி கலந்து கொள்கிறார். இன்னொரு புறம் ஒரு பெரிய பணக்கார குடும்பத்துக்கு அந்த பாண்டா குட்டி தேவைப்படுகிறது. தன் மகளுக்காக அதை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட தயாராக இர...

அழகோ அழகு : மாணவர் மனசு நூல் குறித்து பா.இந்துமதி, ஆசிரியர்

Image
இப்புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இவ்வாசிரிய எழுத்தாளரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கும், அவரின் குழந்தை மனசுக்கும் என் மனம் அடிமையாகிவிட்டது என்றே கூறலாம். இவரிடம் படிக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் என ஆசிரியரான எனக்கே அவர்மீது பொறாமை கொள்ள வைத்தது. குழந்தைகளோடு குழந்தைகளாக வாழும் உலகம் இனிமையானது. கள்ளம் கபடம் இல்லாதது. உண்மையானது. அவர்கள் உலகத்திற்குள் சென்று, அவர்களை அரவணைத்து அவர்களோடு அவர்களாக, அவர் பாடம் நடத்தும் முறை பற்றி விவரிக்கும் 16 கட்டுரைகளும் அழகோ அழகு. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரு தெய்வம் போல. அவர்களுக்கு ஆசிரியரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். அலாதி பிரியம். சார், உங்க ஊர் எது சார்? எனக் கேட்பதும், உங்க ஊரைக் கண்டுபிடிச்சிட்டேன் சார். உங்கத் தெருவைக் கண்டுபிடிச்சிட்டேன் சார், என்று பள்ளி மாணவர்கள் கூறும்பொழுது, “சார் வீட்ல புதுசா ஒன்னும் இல்ல… சார் பெருமையா சொல்லிக் கொள்கிற அளவுக்கு சரித்திர முக்கியத்துவம் இல்லாத வீடு தான். அதுவும் நம்ம வீடு மாதிரி அதுவும் ஒரு சாதாரண வீடுதான்னு புரிஞ்சுக்குவான். ஆனா, அந்தக் குட்ட...

மாணவர் மனசு நூல் குறித்து ஆசிரியர் யாழரசி பதிவு

Image
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாணவர் மனசு பெட்டி குறித்த கட்டுரையாக இருக்குமென எண்ணி வாசிக்க ஆரம்பித்தப்பிறகே புரிந்தது அது மாணவர்-ஆசிரியர் மனசென.. குட்டி குட்டியான உரையாடல், நிகழ்வுகள் அனைத்தும் தொகுப்பாக 16 கதைகள் அல்ல அல்ல 16 மனசுகள். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு ஊருக்கு போறீனா சொல்லிட்டு போகமாட்டீயா?? ஏன் சார் நீங்களும் கூட வருவீங்களா? முதல் கதையிலே.. கூடவே சுத்திட்டு இருந்தியேடா செவ்வாழ மொமண்ட்.. You Brutus.. அந்த பால்வாடி டிக்கட்ஸ் தான் வாழ்றாய்ங்யா.. தேனீ சுந்தர் அவர்களின் வகுப்பறையில் ஒரு ஓரத்திலிருந்து பார்த்தது போல் இருந்தது.. தேனி சுந்தர் அவர்களின் வரிகள் அருகிலிருந்து கதை கேட்பது போல் அனுபவம். உங்கள் அனுபவங்களில் எனக்கும் சில உண்டு. வகுப்பு தோழன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என நிற்கும் போது, இனி சரியாக இருப்பான் டீச்சர் என வக்காலத்து செய்து, அவனை சரியாக வீட்டுப்பாடம் எழுதி வருவதை உறுதி செய்கின்றனர். ஒன்றாம் வகுப்பு குட்டி குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் டப்பா ஓபன் பண்ணி தரும்போது நீங்க ஒன்னு எடுத்துகோங்க என்ற அன்புக்கு நானெல்லாம் என்றுமே அடிமைதான் அதுகள அதட்டி திட்ட மனசு வரமாட்டுது. அதன...

குழந்தைமை போற்றுதும் நூல் குறித்து ஆசிரியர் சுமதி, நெல்லை

Image
ஆசிரியர் தன் வீட்டு குழந்தைகளான டார்வின் மற்றும் புகழ்மதியின் இயல்பான உரையாடல்களை சுவாரசியமான 20 சிறு கட்டுரைகளாக்கி வெளியிட்டுள்ளார். கருவுற்ற பெண்கள் சுந்தரகாண்டம் படித்தால் நல்ல குழந்தை பிறக்கும் என்பது போல தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ,நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன. குழந்தைமை போற்றுதும் போன்ற புத்தகங்களை வாசிக்கலாம்... இது மனதை மகிழ்வித்து தயார்படுத்தும்... குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்ட நாட்களில் இவருடைய புத்தகங்களை பார்த்தாலே குற்றவுணர்வு ஏற்படுத்தும்.. மழலைச் சொல் கேட்டோம். ஐ.சுமதி, ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி, செட்டிகுளம்.

நட்சத்திரக் குழந்தை நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
நன்றி : கனவு ஆசிரியர் மாத இதழ் பிப்ரவரி, 2026

சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் : சீனி சந்திரசேகரன்

Image
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என கையொப்பமிட்டு நூலாசிரியரால் அனுப்பப்பட்ட புத்தகம்.  சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் இது நூலில் இருந்து.. பாடம் நடத்துச் செல்லும் பொழுது கோபத்தை வாசலில் நிற்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்குள்ளே செல்லுங்கள். நிறைய சிரிங்க! உடம்புக்கு நல்லது! உங்க மனசுக்கும் நல்லது. வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டிய அடங்கி இருப்பதும் தான் எதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா? ஒரு பக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பதில் நியாயமா?  படம் எழுப்பும் கேள்வி. அடிக்கடி கேட்பதால் மட்டுமே அறதப்பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற எண்ண்ம் எந்த அளவிற்கு தவறான ஒன்று என்பதை விளக்கும் மாணவர்கள் சொல்லும் புரியாத வார்த்தைகள்.. இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசாணை விதிமுறை தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை. கல்வியாளர்களிடம் இருக்கிறது. கல்வி சார்ந்த நூல்களில் இர...

உனக்குள் புதிய ஆசிரியன் - இந்து தமிழ் திசை நாளிதழ்

Image
ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் வழக்கமாக வருவது போல அனுஸ்ரீ என்கிற குழந்தை அன்றும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறாள். தாமதமாக வந்ததற்கு ரெண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டேன். ஒரு விபத்தில் சிக்கி அனுஸ்ரீயின் அப்பாவும் தாத்தாவும் மருத்துவமனையில் இருக்கிற செய்தி நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது. காரணம் விலகல்.. ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி... - இப்படியான தொடர் சுயபரிசோதனைக்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர். இவர் எழுதி பிரபல இதழ்களில் வெளியான கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்.. தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் அனைத்துப் பரிமாணங்களையும் உற்றுக் கவனித்து பல்வேறு கோணங்களில் அலசும் இந்நூலை ஆசிரியர்கள் வாசித்தால், அவர்களும் புதிய ஆசிரியனாக உதித்தெழுவது திண்ணம்.. - இந்து தமிழ் திசை நாளிதழ் ஜன.13.2026

குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்

Image
குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல். நூலிலிருந்து.. அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும். பேய் சாமி எல்லாமே சும்மாச்சும் தான் பாப்பா.. வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு... அம்மாச்சி வீட்டுக்கு போய் எழுத போறேன்னு சொல்லி ஸ்லேடும் நோட்டும் எடுத்து ஒரு பையில  போட்டு கொண்டு போயிட்டாங்க இரண்டு மணி வாக்குல வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துச்சு கட்டம் போட்டு  எழுதி இருந்தது எழுதியது அம்மா.. எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை.. இத இத இத இதெல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈஸியா சொல்றாங்க டீச்சர் எழுதற எங்களுக்கு தானே கையெல்லாம் வலிக்குது குழந்தை டார்வின் கவலை... குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர். வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான். அதிகாரிகள் விசிட் வருவதைப் பற...

சுந்தரின் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கரெக்ட்.... : கவிஞர் இதயநிலவன்

Image
வணக்கம் தோழர்களே, சரியான ஜட்ஜ்மெண்டில் எழுதப்பட்டிருக்கும் உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்கிற கட்டுரை நூல். முதலில் இந்த தலைப்பிற்குள் எழுத வேண்டும் என்று முடிவு செய்த தோழர் ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .... தான் பணி செய்கிற துறையில் நிகழ்கிற செயல்பாடுகளை துணிச்சலான வார்த்தைகளோடு எழுதியிருக்கிறார் .... கல்வி என்பது இன்றைய காலகட்டத்தில் பணம் ஈட்டும் ஒரு ஏடிஎம் மிஷினை போல மாணவர்களை தயார் படுத்தும் அவல நிலை நிகழ்வதை ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை தொகுதி சொல்லி முடிக்கிறது.. முதல் கட்டுரையில் தொடங்கி ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் விடயங்கள் மாணவர்களுக்கு, மாணவர்களின் சிந்தனைக்கு, மாணவர்களின் வாழ்க்கை முறைக்கு மாணவர்களின் உடல் மற்றும் மனநிலையை இரண்டாம் பட்சமாக கருதும் ஒரு கல்விச் சூழல் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் தைரியமாக சொல்லிக் காட்டுகிறார். ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி மட்டுமல்ல ஒரு பாதுகாப்பான பணி என்பதையும், நமக்கு இணையாக, அல்லது அதற்கும் மேல் ஆசிரியர் படிப்பை படித்துவிட்டு அன்றாடம் காட்சிகளாக இருக்கும் பல ...