மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை எளிதாக்குவது எளிதல்ல : பா.விமலா தேவி, ஆசிரியர்
தமிழக அரசின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நுழைந்து சில பொழுதுகள் வாழ்ந்த நினைவு இந்த திட்டமிடாத வகுப்பறைகள். திட்டமிட்டு செயல்படுத்தப்படும் பாடத்திட்டம் , கால அட்டவணை , தேர்வு முறை என்பதை தாண்டி கண்டிப்பில்லாமல் ஒரு ஆசிரியர் அரவணைப்போடு குழந்தைகளை ஒரு சுதந்திரமான போக்கில் தன் முனைப்பில் அனுமதித்திருப்பதை ஒவ்வொரு பக்கங்களிலும் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரை தான் இன்று மாணவர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை மாணவர் வசம் எளிதாக்குவது எளிதல்ல. இங்கு ஆசிரியர் தேனி சுந்தர் அவர்கள் தன்னை ஒரு ஆசிரியராக பாவிக்காமல் மாணவனாகவே பாவித்து அவர்களோடு பல செயல்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது தொடக்கநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்படும் பெண் ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடிந்த செயல்களை, ஆண்பால் ஆசிரியர்களும் செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கி இருக்கிறார். மாநில பயிற்சியாளர் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை வழங்கியிருப்பதில் “துணிச்சலுக்கு பாராட்டு” என்று இந்நூலின் ஆசிரியருக்கு வாழ்த்து கூறி பாராட்டி இருப்பதை போல, ஒரு ஆசிரியர் கற்றலை பாடப் புத்தகங்களோ...