Posts

Showing posts with the label திட்டமிடாத வகுப்பறைகள்

மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை எளிதாக்குவது எளிதல்ல : பா.விமலா தேவி, ஆசிரியர்

Image
தமிழக அரசின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நுழைந்து சில பொழுதுகள் வாழ்ந்த நினைவு இந்த திட்டமிடாத வகுப்பறைகள். திட்டமிட்டு செயல்படுத்தப்படும் பாடத்திட்டம் , கால அட்டவணை , தேர்வு முறை என்பதை தாண்டி கண்டிப்பில்லாமல் ஒரு ஆசிரியர் அரவணைப்போடு குழந்தைகளை ஒரு சுதந்திரமான போக்கில் தன் முனைப்பில் அனுமதித்திருப்பதை ஒவ்வொரு பக்கங்களிலும் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரை தான் இன்று மாணவர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை மாணவர் வசம் எளிதாக்குவது எளிதல்ல. இங்கு ஆசிரியர் தேனி சுந்தர் அவர்கள் தன்னை ஒரு ஆசிரியராக பாவிக்காமல் மாணவனாகவே பாவித்து அவர்களோடு பல செயல்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது தொடக்கநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்படும் பெண் ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடிந்த செயல்களை, ஆண்பால் ஆசிரியர்களும் செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கி இருக்கிறார். மாநில பயிற்சியாளர் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை வழங்கியிருப்பதில் “துணிச்சலுக்கு பாராட்டு” என்று இந்நூலின் ஆசிரியருக்கு வாழ்த்து கூறி பாராட்டி இருப்பதை போல, ஒரு ஆசிரியர் கற்றலை பாடப் புத்தகங்களோ...

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

Image
தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்! திட்டமிடாத வகுப்பறைகள்.. மாணவர் மனசு.. உங்க ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்.. தேனி சுந்தர் இதுவரை படைத்துள்ள நவரத்தினங்களில் மிகவும் முக்கியமான தொகுப்புகள் தற்போது வெளிவந்துள்ள மேலே சொன்ன மூன்று தொகுப்புகள். தேனி சுந்தர் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பண்பாட்டு தளத்தில் செயல்பாட்டாளர் (Teacher is a cultural activist) என்று பாவ்லோ ஃபிராயரே கூறுவர். ஆசிரியருக்கான இந்த வரையறை தேனி சுந்தருக்கு பொருந்தும். கெட்ட வார்த்தையா? கேட்ட வார்த்தையா? குற்றவாளி கூண்டில் நம் அனைவரையும் நிறுத்தும் "திட்டமிடாத வகுப்பறைகள்". இது போன்ற ஏராளமான கேள்விகளை "மாணவர் மனசு" மற்றும் "உங்கள் ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்" எழுப்புகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை பகிர்வதன் மூலம் தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்கிறார் தேனி சுந்தர். இதை படிப்பவர் ஒரு குழந்தையின் மனநிலையை உணர முடியும். உணர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதே போன்ற நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்டால், ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு பூந்தோட்டம்தான். ஒவ்வொரு மாணவரும் பட்டாம்பூச்சிதான்....

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
பள்ளி வகுப்பறைகள் எப்படி அமைந்தால் கற்கும் திறன் அதிகரிக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக அலசும் நூல். வகுப்பறையில் சிறுவர், சிறுமியரை பொம்மையாகப் பாவிக்கக் கூடாது என உறுதிபட தெரிவிக்கிறது. கற்பிக்கும்போது வகுப்பறையில் பெற்ற அனுபவத்தைச் சுவைபட எடுத்துரைக்கிறது. சுயமாக ஆர்வத்தை ஏற்படுத்துவதன் வழியாக ஏற்படும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. சிந்திப்பதில் சுதந்திர மனப்பான்மை உருவாக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. வகுப்பறையை புதிய கோணத்தில் அணுகி, கற்போருக்கு உகந்த இடமாக மாற்ற ஆலோசனைகள் தரும் நூல். - மதி - தினமலர் நாளிதழ் 05/10/2025  

திட்டமிடாத வகுப்பறைகள்.. நூல் குறித்து சீனி சந்திரசேகரன், செங்கல்பட்டு

Image
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம் : திட்டமிடாத வகுப்பறைகள்.. _ தேனி சுந்தர் வகுப்பறை குழந்தைகளுக்கானது என்பதையும், அங்கே என்ன நடக்க வேண்டும்? என்பதை குழந்தைகளே தீர்மானிக்கிறார்கள் என்பதையும், நூல் படிப்பது போன்று நாம் பாடத்தை நடத்த முடியாது என்பதையும், பல்வேறு வகுப்பறை நிகழ்வுகள் மூலம் சொல்லும் நூல் இது. நூலிலிருந்து... ரொம்ப சுத்தமா இருக்கணும். நீட்டா இருக்கணும். பள்ளிக்கூடம் போயிட்டு திரும்ப வர வரைக்கும் ஆடைகள் அழுக்காகாமல் இருக்கணும், என்ற கருத்து மாறணும். கறை நல்லது. அழுக்கு நல்லது. திறந்த வெளியில் கற்றல் ரொம்ப நல்லது. வருடம் எல்லாம் வகுப்பறையில் பொருத்தமற்ற போட்டிகளை வைத்து குழந்தைகளை நாம் தோற்கடிக்கிறோம். வருடத்தில் ஒரு நாள் அவனுக்காக போட்டி நடக்கும்போது அவன் வெற்றிவாகை சூடி கதாநாயகன் ஆகிறான். சிறந்த கல்வி, வருகை, விளையாட்டு, எல்லாம் முக்கியம்தான். அவை எல்லாவற்றையும் விட முக்கியம் ஒழுக்கம், பொது வெளியில் நேர்மையாக நடந்து கொள்வது. குழந்தைகளோடு பழகும் போது நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். முடியாதவர்கள், முயற்சி செய்யாதவர்கள், மூக்கு உடைபடுவது நிச்சயம். குழந்தை...

திட்டமிடாத வகுப்பறைகள் : வாசிப்பு அனுபவம் - வாலண்டினா பிரான்சிஸ்

Image
மாணவர் மனசு என்ற புத்தகம்தான் நான் வாசித்த தேனி சுந்தர் அவர்களின் முதல் நூல். அந்நூலில் வகுப்பறையில் குழந்தைகளுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அப்படியே எழுதியிருந்தார். அந்நூலில் சில கட்டுரைகளை வாசிக்கும் போது சிரிப்பு அடக்கமுடியவில்லை. அந்த அனுபவம்தான் இந்நூலைப் படிக்கத் தூண்டியது. இந்நூலிலும் குழந்தைகளுக்கான வகுப்பறை எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் உள்ளது. குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதைவிட அவர்களுக்குப் பிடித்தமானதை செய்ய விடும்போதுதான் குழந்தைகள் இயல்பாகக் கற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தை ஒவ்வொரு அனுபவக் கட்டுரையிலும் பார்க்க முடிகிறது. இவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் டோட்டாசான் புத்தகத்தில் வரும் கோபயாக்ஷி என்ற தலைமை ஆசிரியர்தான் நினைவுக்கு வருகிறார்.! குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் அக்கறையும் ஒவ்வொரு கட்டுரை வாசிப்பிலும் அறிய முடிந்தது. சும்மா இரு.. என்பதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்காத விஷயம்.அவர்கள் விருப்பப்படி கற்றல் அமைந்துவிட்டால் கற்றல் ஒரு சுமையாக இர...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் விவாதக் கூட்டம் : பெரம்பலூர் மேக்நாட் அறிவியல் மன்றம்

Image
அனைவருக்கும் வணக்கம். பெரம்பலூர், மேக்நாட் அறிவியல் மன்றத்தின் 4வது நூல் விவாதம் 16.08.2025 அன்று நடைபெற்றது. தேனி சுந்தர் அவர்கள் எழுதிய 'திட்டமிடாத வகுப்பறைகள்' என்ற நூல் கூட்டு வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. நூல் உள்ளடக்கமும் விவாதமும் - கருத்துத் தொகுப்பு: இந்நூலின் ஆசிரியர், பள்ளி ஆசிரியராக தம் சொந்த வகுப்பறை அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலின் உள்ளடக்கமானது முன் தொடக்க கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான வகுப்பறை சூழலில் திட்டமிடாத செயல்பாட்டு அனுபவமே ஆனாலும் கூட அவ்வனுபவத்தின் வழியாக நாம் பெறும் கோட்பாட்டுத்தன்மையை விரிவாக மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வரை பயன்படுத்த முடியும். குழந்தைமை நிறைந்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மனிதத் தன்மையுடனும் அனுசரணையாகவும் நெருங்கிய நட்பினராகவும் நடந்துகொள்ள வேண்டும். வழக்கமான திட்டமிட்ட வகுப்பறை நோக்கில் அல்லாது திட்டமிடாத செயல்பாடுகளிலும் மாணவர்களின் அறிவை உள் தூண்டுதலுடன் மிகச் சிறந்த ...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து கனவு ஆசிரியர் மாத இதழில்..

Image
குழந்தைகள் உலகை மிக நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகவும் இருக்கிறது. குழந்தைகளைக் கண்டுபிடிக்க குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகம் உங்களது குழந்தைமை கால நினைவுகளைக் கொண்டுவந்து முன்னிறுத்தும். பள்ளி வகுப்பில் நிகழ்ந்த நினைவுத் தொகுப்புகளின் அனுபவப் பகிர்வே இந்நூல். - பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளிவரும் கனவு ஆசிரியர் மாத இதழ் ஆகஸ்ட், 2025

திட்டமிடாத வகுப்பறைகள் வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
ஒரு வகுப்பறைக்குள் ஆசிரியர் எப்படி திட்டமிடாமல் செல்ல முடியும் ? பிளான் ஏ /பி/ சி என குறைந்தது மூன்றாவது இருந்தால் தான் ஒரு நாளை திறம்பட கொண்டு செல்ல முடியும். திட்டமிடாத வகுப்பறையை எப்படி திட்டமிடுவது? என்ற கேள்வியோடு வாசித்த புத்தகம். தேனி சுந்தர் எனும் இடைநிலை ஆசிரியரால் எழுதப்பட்ட புத்தகம். தேனினும்  இனிய வகுப்பறை செயல்பாடுகளால் (அனுபவங்களால்) நிரம்பி உள்ளது. திட்டமிடாத வகுப்பறையில் மாணவர்கள் விளையாடுகிறார்கள், விளையாட்டில் ஆசிரியரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் கற்றும் கொடுக்கிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது ஒட்டிக் கொள்ளும் புன்னகை... புத்தகத்தை முடிக்கும் வரை மறையாது அதிகரிக்கும்...!   புத்தகத்தில் வரும் மாணவர்கள் அனைவரும் கவிதைகளே ! களிமண் கொடுத்து உருவம் செய்து வரச் சொன்னால் அணுகுண்டு செய்து வந்த பால்வாடி மிதுன்...அந்த அணுகுண்டில் இரு இலைகளுடன் கூடிய ஒரு காம்பை செறுகி, அதை  குட்டி செடியாக்கிய மயூரி ... கலைத் திருவிழாவில் பல குரல் போட்டியில் எல்லோரும் நாய் பூனை ஆடு என குரல் எழுப்பும்போது, சதீஷ் என்றாலே சேட்டை என...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
நன்றி : புதிய ஆசிரியன்  

திட்டமிடாத வகுப்பறைகள் குறித்து கவிஞர் விஜயராஜ் காந்தி

Image
மாணவர் மைய வகுப்பறை என்பது பல நேரங்களில் திட்டமிடாத ஒரு வகுப்பறை எப்படி இருக்குமோ அதை கண் முன் கொண்டு வந்து சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு வகுப்பறையை நாம் கண்டிருக்கலாம், கண்டும் காணாது சென்றிருக்கலாம், அல்லது காணாமலே விட்டு இருக்கலாம். இங்கு திட்டமிடாத வகுப்பறைகள் எப்படி இருக்கும் என்பதனை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் தேனி சுந்தர் அவர்கள். தான் முதலில் பணியாற்றிய பள்ளிகளில் உள்ளவற்றை தவிர்த்து தற்பொழுது பணியாற்றும் பள்ளியில் எங்கனம் திட்டமிடாத வகுப்பறைகள் இருந்தன என்பதனை தேனி சுந்தர் எழுத்தில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. கலைப் பண்பாட்டுத் திருவிழா தொடக்கப் பள்ளியில் என்ன மாறலை உண்டு பண்ணும் என்ற கேள்வியை நடத்துவதற்கு முன் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்வது உண்டு. அந்த கேள்விகளுக்கு பதிலாக சேட்டைகள் செய்யும் மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஒரு நல்வாய்ப்பாக கலைப் பண்பாட்டுத் திருவிழாவை பயன்படுத்தினர். இதனை திட்டமிடாத வகுப்பரையில் தான் காண முடியும். மாறுவேட போட்டி, பல குரல் போட்டி, காகித கூழ், களிமண் போன்றவற்றில் பொருட்களை செய்து கொண்டு வரும் போட...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்

Image
கற்றுக் கற்பிப்பதா..? கற்பித்துக் கற்பதா..? - ஓர் அழகிய உரையாடல்... ”மக்களிடம் போ:; மக்களிடம் கற்றுக் கொண்டு மீண்டும் அதை மக்களுக்கே கற்றுக் கொடு.” என்பது அரசியல் யதார்த்தவாதத்தின் முக்கியப் பாடக்குறிப்பு. இந்தத் தத்துவ அடித்தளத்தைக் கல்விப் புலத்தில் செயல்படுத்தும் முறையைத் தனது சிந்தனை ஆற்றலாலும் செய்முறைக் கற்றலாலும் குழந்தைகளுடனான உரையாடலாலும் அமல்படுத்தும் தாத்பரியத்தை நிறுவியிருக்கிறார் குழந்தமைக் கவனிப்பாளரான தேனிசுந்தர். பள்ளிக்கூடம் என்பது படித்தறிந்த ஆசிரியர்களளால் இளங்குழந்தைகளை சமூக மனிதர்களாக வடிவமைக்கும் இடம். படிப்பிக்கும் ஆசிரியர்களைப் போலவோ அவர்களைத் தாண்டியுமோ குழந்தைகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உளவியல் திட்டத்தை மையமாகக் கொண்டு இயங்குகி\ன்றன பள்ளிகள். கற்றறிந்த அறிஞர்களால் வடிவமைக்கப் பட்ட பாடத்திட்டம் குழந்தைகளுக்குள் புகுத்தப் படுகிறது. 1835ல் ஆங்கிலக் கல்வியாளர் மெக்காலே வடிவமைத்த கல்வித் திட்டம் இன்றளவும் போதிக்கப் பட்டுக்ம்கொண்டிருக்கிறது. அவ்வப்போது பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப் பட்டாலும் அடிப்படை ஒன்றுதான். கல்வி என்பது மனப்பாடம் செய்து ஒப்பிக்க...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து இரா.சத்யா, தேவாரம்

Image
நம் பள்ளிப் பருவம் முதல் இன்று வரை குழந்தைக் கவிஞர் என்றாலே அழ வள்ளியப்பா என்ற பெயர் தான் ஆசிரியரான பின்பும் மனதில் முதன்மையாக வந்து நிற்கும். அதுபோல குழந்தைகளுக்கான படைப்புகளை அளித்த நமது முன்னத்தி ஏர்களைப் பின்னுக்குத் தள்ளி சிறார் இலக்கியஉலகில் புதுமைப் படைப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் எங்கள் தேனி சுந்தர் சார் அவர்களின் சமீபத்திய நூலான திட்டமிடாத வகுப்பறைகள் பற்றிய என் பார்வையிலான மனப்பதிவுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விரும்பி வந்துள்ளேன். அதிக நூல்களை வாசிப்பவரே சிறந்த படிப்பாளி என்ற பொதுவான கூற்று ஒன்று உண்டு. அந்த வகையில் பார்த்தால் தொடக்க நிலை முதல் வளரிளம் பருவம் வரை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு சிறந்த ஆசிரியரே உலகின் மிகச் சிறந்த படிப்பாளி என்று கூறலாம். ஏனென்றால் குழந்தைகளை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு அவரது குழந்தைகளே அனுதினமும் சுவாரஸ்யமான அனுபவங்களைத் தரும் ஆசான்களாக விளங்குகின்றனர் என்பது கண்கூடு . அதற்கான அத்தாட்சியாகவே சமீப காலங்களில் தேனி சுந்தர் அவர்கள் படைப்பில் வெளிவந்துள்ள சிறார் இலக்கிய நூல்கள் அனைத்தையுமே கூற முடியும். ஒரு திரைப்படம் பார்க்கலாம் எ...