திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து தினமலர் நாளிதழ்


பள்ளி வகுப்பறைகள் எப்படி அமைந்தால் கற்கும் திறன் அதிகரிக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக அலசும் நூல். வகுப்பறையில் சிறுவர், சிறுமியரை பொம்மையாகப் பாவிக்கக் கூடாது என உறுதிபட தெரிவிக்கிறது. கற்பிக்கும்போது வகுப்பறையில் பெற்ற அனுபவத்தைச் சுவைபட எடுத்துரைக்கிறது. சுயமாக ஆர்வத்தை ஏற்படுத்துவதன் வழியாக ஏற்படும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. சிந்திப்பதில் சுதந்திர மனப்பான்மை உருவாக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. வகுப்பறையை புதிய கோணத்தில் அணுகி, கற்போருக்கு உகந்த இடமாக மாற்ற ஆலோசனைகள் தரும் நூல். - மதி
-
தினமலர் நாளிதழ்
05/10/2025

 

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!