Posts

Showing posts from December, 2025

மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை எளிதாக்குவது எளிதல்ல : பா.விமலா தேவி, ஆசிரியர்

Image
தமிழக அரசின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நுழைந்து சில பொழுதுகள் வாழ்ந்த நினைவு இந்த திட்டமிடாத வகுப்பறைகள். திட்டமிட்டு செயல்படுத்தப்படும் பாடத்திட்டம் , கால அட்டவணை , தேர்வு முறை என்பதை தாண்டி கண்டிப்பில்லாமல் ஒரு ஆசிரியர் அரவணைப்போடு குழந்தைகளை ஒரு சுதந்திரமான போக்கில் தன் முனைப்பில் அனுமதித்திருப்பதை ஒவ்வொரு பக்கங்களிலும் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரை தான் இன்று மாணவர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை மாணவர் வசம் எளிதாக்குவது எளிதல்ல. இங்கு ஆசிரியர் தேனி சுந்தர் அவர்கள் தன்னை ஒரு ஆசிரியராக பாவிக்காமல் மாணவனாகவே பாவித்து அவர்களோடு பல செயல்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது தொடக்கநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்படும் பெண் ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடிந்த செயல்களை, ஆண்பால் ஆசிரியர்களும் செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கி இருக்கிறார். மாநில பயிற்சியாளர் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை வழங்கியிருப்பதில் “துணிச்சலுக்கு பாராட்டு” என்று இந்நூலின் ஆசிரியருக்கு வாழ்த்து கூறி பாராட்டி இருப்பதை போல, ஒரு ஆசிரியர் கற்றலை பாடப் புத்தகங்களோ...

மனக்கஷ்டமா இருக்கும்போது இந்த நூலை வாசிங்க.. : ரமேஷ் ராஜா

Image
குழந்தைகளோடு பேசுவதென்பது நம் மனதை இலகுவாக மாற்றிவிடும்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை கவனமாக கையாள வேண்டிய அழுத்தத்தை மீறி,அவர்களோடு உரையாடும் வாய்ப்பு அவர்களின் பணியின் சுவாரசியத்தை கூட்டிவிடுகிறது. அப்படியான ஒரு ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த 'ஓங்கூட்டு டூணா'. நூலின் ஆசிரியர் பெயர் தேனி சுந்தர். பள்ளி ஆசிரியர்,அறிவியல் மற்றும் கல்வி செயற்பாட்டாளர். 'டுஜக் டுஜக்- ஒரு அப்பாவின் டைரி ', ' சீமையில் இல்லாத புத்தகம் ' ஆகிய நூல்களின் ஆசிரியர். தன் வகுப்பறையில் மாணவர்களோடு நடந்த சுவாசியமான வகுப்பறை நிகழ்வுகளை நூலாக்கியிருக்கிறார்.குழந்தைகள் எதிர்பாராத நேரங்களில் நம்மை நமக்கு உணர்த்தி விடுவார்கள். அப்படியான நிகழ்வுகள் அதிகம் நடக்கிற இடம் பள்ளி.அதுவும் ஆரம்பப்பள்ளிகள் இவ்வாறான நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.மாணவர்களுக்கிடையான சண்டைகள்,ஆசிரியருடனான பிரச்சனை,ஆசிரியரின் பிரச்சனை, மாணவர்களின் வீட்டுப் பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றையும் போற போக்குல அடித்து விளாசிவிடுவார்கள் குழந்தைகள். நூலில் ஒவ்வொரு நிகழ்விற்கும் வரையப்பட்ட ஓவியங்கள் சிறப்பு.வரைந...