ரெடி... ஆக்சன்.......
நேற்று முன்தினம் பாண்டா பிளான் என்றொரு ஜாக்கிசான் படம் பார்த்தேன். இருபது வருடங்கள் கழித்து ஜாக்கிசான் படம் ஒன்றை முழுமையாக பார்த்தேன். ஆசிரியர் பணிக்கு வரும் முன்பு திராட்சை தோட்ட தொழிலாளியாக சில காலம் வேலை செய்து கொண்டிருந்த போது சிவச்சந்திரன் உள்ளிட்ட சக வயது நண்பர்களுடன் அருகில் உள்ள காமயகவுண்டன் பட்டி , சுருளிபட்டி கிராமங்களில் உள்ள திரையரங்குகளில் ஜாக்கிசான், புருஸ்லீ, ஜெட்லீ படங்கள் பார்த்து விட்டு சாவகாசமாக பேசிக்கொண்டு, இரவில் நடந்து வீடு வந்து சேர்வோம்.. மற்ற படங்களை விட ஜாக்கிசான் படம் என்றால் சண்டைக்கு சண்டை, சிரிப்புக்கு சிரிப்பு, விறுவிறுப்பு இருக்கும்.. அப்படியான எதிர்பார்ப்பில் தான் இந்த படத்தையும் பார்த்தேன்.. ஆனால் இந்த படம் வேறு மாதிரியான அனுபவமாக இருந்தது.. படத்தில் ஜாக்கி ஒரு திரைப்பட நடிகராகவே வருகிறார். உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பாண்டா கரடி குட்டி பிறக்கிறது. அதை தத்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி கலந்து கொள்கிறார். இன்னொரு புறம் ஒரு பெரிய பணக்கார குடும்பத்துக்கு அந்த பாண்டா குட்டி தேவைப்படுகிறது. தன் மகளுக்காக அதை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட தயாராக இர...