Posts

Showing posts with the label நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன

குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்

Image
குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல். நூலிலிருந்து.. அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும். பேய் சாமி எல்லாமே சும்மாச்சும் தான் பாப்பா.. வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு... அம்மாச்சி வீட்டுக்கு போய் எழுத போறேன்னு சொல்லி ஸ்லேடும் நோட்டும் எடுத்து ஒரு பையில  போட்டு கொண்டு போயிட்டாங்க இரண்டு மணி வாக்குல வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துச்சு கட்டம் போட்டு  எழுதி இருந்தது எழுதியது அம்மா.. எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை.. இத இத இத இதெல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈஸியா சொல்றாங்க டீச்சர் எழுதற எங்களுக்கு தானே கையெல்லாம் வலிக்குது குழந்தை டார்வின் கவலை... குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர். வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான். அதிகாரிகள் விசிட் வருவதைப் பற...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
இந்தச் சமூகம் அறியாத பருவத்தில் குழந்தைகள் மனதில் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் வலிந்து புகுத்தி விடுகிறது. இதனால் மதம், சாதி, சடங்கு, சம்பிரதாயம் போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் வாயிலாக அவர்களிடம் அது படிந்து விடுகிறது. அதைத் தவிர்த்து சுயம், சுயமரியாதை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நூல் வலியுறுத்திக் கூறுகிறது.  - கனவு ஆசிரியர் இதழ் செப்டம்பர், 2025

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : இந்து தமிழ் நாளிதழ் பதிவு

Image
என்னுடைய நூல்கள், புதிய இலக்கிய வடிவம் கொண்டவை என சான்றளித்துள்ள தமிழ் இந்து நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. இந்து தமிழ் நாளிதழ் பதிவு : மாயா பஜார்

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : பெ.விஜயராஜ் காந்தி

Image
தேனி சுந்தர் எழுதிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன என்ற நூல் கிடைக்கப்பெற்றேன். நூலில் புகழ்மதி மற்றும் டார்வின் இருவருடன் நாம் பேசி பழகி உறவாடி மகிழ்ந்தது போல் ஒரு உணர்வு. ரோட்டில் கிடக்கும் எலுமிச்சம்பழம் மூலமாக பேய், சாமி இரண்டும் சும்மாச்சுக்கும் என்பதை புகழ்மதி எவ்வளவு அருமையாக எடுத்துரைக்கிறாள். அபாரம். (பக்கம் 22) விலங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற வாக்கியத்தை புரிந்து கொள்வதற்கு குழந்தைகள் தயாராக இருக்கிறார்களா என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய அறிவை புகுத்துகிறோம் என்ற பெயரில் எதையாவது சொல்ல அவர்கள் ஏப்பா நீயுமா குரங்கா இருந்த என்ற கேள்வி உடனடியாக நம்மை நோக்கி வரும். ஜாக்கிரதையாக நாம் பதில் சொல்ல வேண்டும். சிறு வயது குழந்தைகள் பெற்றவர்களின் பேச்சை கேட்பதில்லை என்று யார் சொல்வது... நம்மைப் போலவே அவர்கள். ஆம். செல்லை வச்சிருந்தா நாம் உடனடியாக கடைக்கு கிளம்புவோமா... (பக்கம் 60). எல்லா நட்சத்திரங்களும் நம்மளவே பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று குழந்தைகள் சொல்லும்பொழுது நாம் குழந்தையின் வாயைப் பார்ப்போம். இது இயல்பு. ஆனால் குழந்தையாக நாம் மாறும்பொழுது அனைத்த...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : நூல் குறித்து ஐயா குழ.கதிரேசன் அவர்கள்

Image
அன்பு நண்பருக்கு வணக்கம். தாங்கள் அன்புடன் அனுப்பிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன நூல் கிடைத்தது, படித்து மகிழ்ந்தேன்.  தாங்கள் குழந்தைகளோடு குழந்தையாகி, அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து, அவர்கள் மழலை மொழியில் உதிர்க்கும் அற்புதமான, கள்ளங்கபடற்ற கவிதை வரிகளை, உரையாடலை அப்படியே படம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, குழந்தைகளின் உரையாடலுக்குச் சிறந்த வடிவம் தந்துள்ளது பாராட்டுக்குரியது. குழந்தைகளுக்காகவே, குழந்தை இலக்கியத்துக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு விட்டீர்கள் என்பதே உண்மை. புதுப்புது சிந்தனைகள், புதுப்புது வடிவங்கள் தங்களை அடையாளப் படுத்துகின்றன. தங்கள் குழந்தைகளின் கற்பனைத்திறன் அபாரம். ஏ.டி.எம்.மில் யாருமில்லாத நேரத்தில் அவசரமாகப் பணம் எடுத்தும் வரும்போது “என்னப்பா, களவாண்ட்டு வந்து விட்டாயா?” என்று கேட்ட பொழுது, அதை எங்கள் வீட்டுக் குழந்தையாகப் பாவித்து வீட்டில் எல்லாருமே சிரித்து விட்டோம். தாங்களும் அதன் இயல்பான, நகைச்சுவையான கேள்வியை, மிக அழகாக அனைவரும் உணரும் படி உரையாடலைப் படம் பிடித்துள்ளது அதைவிடச் சிறப்பாகும். குழந்தைகளின் கேள்விக்குப் பொறுமையாகப் பதில...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : நூல் குறித்து மதுரை அமுதா செல்வி

Image
குழந்தைகளின் எதார்த்த உலகத்திற்குள் ஒரு சிறு பிள்ளையைப் போல் நுழைந்து அவர்களுடன் அமர்ந்து அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்கி கலந்துரையாடல்களை கவனித்து அவற்றின் மீது எந்த விசாரணையும் செய்யாமல் மிக நேர்மையாக நிகழ்த்திய உரையாடல்கள் தோழர் தேனி சுந்தர் அவர்களை புது இலக்கிய வகைமையை உருவாக்கச் செய்திருக்கிறது. அந்த வகையில் தோழரின் அத்துணை படைப்புகளும் இலக்கிய வானில் நட்சத்திரங்களாய் மின்னுகின்றன. அவருடைய நூல்களை சுடச்சுட வாசிப்பதில் எனக்கு எப்போதுமே அலாதி பிரியம் உண்டு.  அவருடைய படைப்புகளின் வழியே சந்திக்கும் குழந்தைகளில் எனக்கு மிக நெருக்கமானவள் மருமகள் புகழ்மதி. அவளை வாசிக்கும் போதெல்லாம் மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்றாய் பொங்கி எழும். புத்தகத்தை மூடி வைக்கும் போது "அச்சச்சோ அதுக்குள்ள போயிட்டாளே" என்ற வருத்தம் வரும். முதல் வேலையாக பேருந்து ஏறிச் சென்று புகழ்மதியை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழும்பும். அடுத்தடுத்த தொடர்ந்து வரக்கூடிய வேலைகளின் ஆக்கிரமிப்பு அந்த ஆசையை மட்டுப்படுத்திவிடும். ஆனால் அவளைப் பிரிந்த வருத்தம் கலைந்து போவதற்குள் புதிதாய் அடுத்த புத்தகத்தை நம் கைகளி...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : வாசிப்பனுபவம் : இரா.சத்யா, தேவாரம்

Image
இந்த நட்சத்திரங்கள் எட்டிப் பார்ப்பதற்கு குறுகிய காலமே ஆனாலும் என் பார்வைக்குத் தட்டுப்பட சற்று தாமதமாகித் தான் விட்டது. சர்வதேச தன்மை கொண்ட இலக்கியம் என்ற பாராட்டுதலும் நம்ம வீட்டு நட்சத்திரங்கள் என்று கொண்டாடப்படுகிற போற்றுதலும் குழந்தைமை எனும் அற்புத உலகின் சாவிகள் என்ற அடையாளப்படுத்துதலும் நூலின் முகப்பை அலங்கரித்து கௌரவிக்கின்றன. இதற்கு மேல் புதிதாக என்ன சொல்ல வேண்டி இருக்கிறது என்றொரு எண்ணம் தான் எனக்குத் தோன்றியது. புகழ்மதியின் ஆசிரிய தோரணையும் கற்பித்தலும் காணக் கிடைக்கப் பெற்ற அருணா மிகவும் கொடுத்து வைத்தவர்.  நம் குழந்தைகளின் பெயர்கள் வேறாக இருந்தாலும் செல்லப் பெயர்களால் அழைக்கும் போது அதுவே அவர்களது  நிரந்தரப் பெயராக மாறிவிடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. புகழ்மதியும் நான்கு பெயர்களால் தான் அழைக்கப் படுவதை சொல்லிக் கர்வப்பட்டுக் கொள்ளும் தருணம் மிகவும் அழகியது. விளையாட வந்த சர்வினை படிக்கவும் எழுதவும் சொல்லிக் கற்பிக்கும் பாப்பாவின் அனுசரணையான அணுகுமுறை நிச்சயம் போற்றுதலுக்குரியது. அது கண்டிப்பாக அவரது தந்தையிடம் இருந்தே அவர் பெற்றிருக்கலாம் என்பது என் அனுமானம்....

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : குழந்தைகளை முன்னிறுத்தும் படைப்பு : தேனி சீருடையான்

Image
கலைத்தாட்டியம் மிக்க வாழ்க்கையின் மறுபதிப்புதான் இலக்கியம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அது உண்மையும் கூட. நாரை என்ற பறவை மூலம் தன் மனைவிக்குத் தூது விடுகிறான் ஒரு தமிழ்ப் புலவன். “கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழுவி” குளிரும் பசியும் தாங்க முடியாமல் நான் இங்கு சுருண்டு கிடக்கிறேன் என்று போய்ச் சொல் என்கிறான். செம்மண்ணில் மழைநீர் கலந்து விட்டால் எப்படிப் பிரிக்க முடியாதோ (செம்புலப் பெயல் நீர் போல) அன்பு கலந்த காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று காதலுக்குப் புது விளக்கம் அளிக்கிறது தமிழ்ப் புலவனின் ஆய்வு மனம். அதாவது வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தை அப்படியே சொல்லாமல் ஆய்வு செய்து, அதே நேரத்தில் வாழ்க்கை மற்றும் உளவியல் இயக்கக் கூறுகள் சிதைந்து விடாமல் மொழியின் வழியாக வெளிப்பாடு செய்வதே இலக்கியம் என்று சொல்லலாம். குழந்தையுடனான உரையாடல் என்பது குழந்தைகளின் இயல்பான பேச்சை உள்வாங்கி, அதற்குள் படிந்து கிடக்கும் நுட்பக் கோடுகளை வரிவடிவம் ஆக்கும் திறன் ஒருசில படைப்பாளிகளுக்கு மட்டுமே கைவரக் கூடியது. அவர்களில் மிகவும் முக்கியமானவர் தேனி சுந்தர். இவர் எழுதி...

"நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" நூல் விமர்சனம் : தேவி நாச்சியப்பன்

Image
"நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" நூலில் தேனி சுந்தர் அவர்கள், குழந்தைகளை உற்று நோக்கி வழங்கிய செய்தியும் படங்களும் அருமை. கவிதை வடிவில் அமைந்த உரைநடை நூல் எனக் கருதுகிறேன். சங்கப் பாடல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, திருக்குறள் போன்றவற்றிலும் காப்பியங்களில் சூளாமணி, நள வெண்பா போன்றவற்றிலும் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழிலும் குழந்தையைப் பற்றிய பாடல்கள் உண்டு. குழந்தையின் செயல்களை, "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு" "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்ப்பட  விதிர்ந்தும்..." என எழுதி உள்ளனர். இவற்றைப் போல் இது இக்கால மொழியில் குழந்தைகள் பற்றி எழுதப்பட்ட இலக்கியமாகவே தோன்றுகிறது.  குழந்தைகளுக்காக எழுதப்படும் இலக்கியம் அவர்கள் வயதுக்கேற்றதாக, புரிந்து கொள்ள எளிதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக அமைகிறது. வயதுக்கேற்றது என்று பார்க்கையில், இது மிகச் சிறிய குழந்தைகள் நாளும் செய்யும் செயல்களின் வருணனையாகவே அமைந்துள்ளது. அந்த வயதுடைய குழந்தைகள் படித்துப் புரிந்து கொள்ள இயலாது. மேலும் ...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புத்தக அறிமுகம் : சித்ரா டீச்சர்

Image
அனைவருக்கும் வணக்கம். ‘தயவுசெய்து இந்த புகழ் பாப்பாவ மட்டும் எனக்கு கொடுத்திடுங்க’.. இதைத் தவிர வேறென்ன வேண்டும்?!!!.. மரியாதைக்குரிய தேனி சுந்தர் அவர்களின் ‘நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன’ (Natchathirangal Eatti Paarkinrana) இந்த புத்தகத்தில் அப்பாவும் மகளும் வாழ்ந்திருக்கிறார்கள்.. பின் எப்படி அந்த நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்காமல் இருக்கும்?.. குழந்தை இலக்கியங்கள் என்று நான் படித்ததெல்லாம் ஒருவேளை குழந்தை இலக்கியங்கள் இல்லை போலும் என்று தோன்றுகிறது எனக்கு.. இவருடைய மகளுக்கும் இவருக்குமான உரையாடல்கள் தான் குழந்தை இலக்கியமாய் மலர்ந்து கொண்டிருக்கின்றன.. நான் தோழருடைய முந்தைய புத்தகத்தை வாசிக்கும் போதே எழுதியிருந்தேன்.. குழந்தைகளுடனான உரையாடல்களை முதலில் எல்லோராலும் ரசிக்க முடியாது. அப்படியே ரசித்தாலும் யாரும் அதை தொகுக்க முன்வர மாட்டார்கள் என்று.. ஆனால் சுந்தர் அவர்கள் தொடர்ந்து அதை செய்து வருகிறார். இப்படியான பெற்றோர் கிடைக்க புகழ் பாப்பா உண்மையில் ‘வரம்’ பெற்றிருக்க வேண்டும்.. ஆனால் இன்னொரு புறம்.. புகழை மகளாய் பெற இவர்கள் ‘தவம்’ செய்திருக்க வேண்டும்.. ஆரம்பமே அட்டகாசம்.. டீச...