தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்! திட்டமிடாத வகுப்பறைகள்.. மாணவர் மனசு.. உங்க ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்.. தேனி சுந்தர் இதுவரை படைத்துள்ள நவரத்தினங்களில் மிகவும் முக்கியமான தொகுப்புகள் தற்போது வெளிவந்துள்ள மேலே சொன்ன மூன்று தொகுப்புகள். தேனி சுந்தர் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பண்பாட்டு தளத்தில் செயல்பாட்டாளர் (Teacher is a cultural activist) என்று பாவ்லோ ஃபிராயரே கூறுவர். ஆசிரியருக்கான இந்த வரையறை தேனி சுந்தருக்கு பொருந்தும். கெட்ட வார்த்தையா? கேட்ட வார்த்தையா? குற்றவாளி கூண்டில் நம் அனைவரையும் நிறுத்தும் "திட்டமிடாத வகுப்பறைகள்". இது போன்ற ஏராளமான கேள்விகளை "மாணவர் மனசு" மற்றும் "உங்கள் ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்" எழுப்புகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை பகிர்வதன் மூலம் தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்கிறார் தேனி சுந்தர். இதை படிப்பவர் ஒரு குழந்தையின் மனநிலையை உணர முடியும். உணர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதே போன்ற நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்டால், ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு பூந்தோட்டம்தான். ஒவ்வொரு மாணவரும் பட்டாம்பூச்சிதான்....
# உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23 : ஏப்ரல் முதல் தேதிக்கு என்ன சிறப்பென்று உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும். முட்டாள்கள் தினம்! மேலே வெள்ளைக் காக்கா பறக்குது..... சட்டையில் பூச்சி ஏறுது.... என்று சொல்லி சிலரை ஏமாற்றி (!) விட்டதாய் நினைத்து சின்னப்புள்ளத் தனமாய் நீங்களும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் உலகப் புத்தக தினமும் வருகிறது. ஆனால் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப் புத்தக தினமாக அறிவித்து புத்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாசிப்பை அதிகப்படுத்தவும் மக்களை அறிவாயுதம் ஏந்தச் செய்யவும் பல்வேறு தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும் தமிழக அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமே மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்கள் தோறும் புத்தகங்களைக் கொண்டு செல்லும் பணிகளை அலட்டிக்கொள்ளாமல் அதே நேரத்தில் பெருமிதத்தோடு ஆண்டு முழுக்கவும் செய்து வருகிறது.. புத்தகங்கள் மகத்தானவை.. அற்புதமானவை.. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “ காரிருள் அகத்த...
தனக்குத் தானே முன்மாதிரியாக அமைந்த உலகின் ஒரே அணை என்று முல்லைப் பெரியாறு அணை குறிப்பிடப்படுகிறது. நீரின் ஓட்டத்தின் போக்கில் அதை மறித்துக் கட்டப்படுவது தான் பெரும்பாலான உலக வழக்கம். ஆனால் நீரின் போக்கையே மாற்றி, அதற்கு எதிர்ப்புறமாக அணையைக் கட்டி, அதிலும் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் புளூபிரிண்ட்-ஐ அப்படியே தனது நாவல் மூலம் படம் வரைந்து விளக்கியுள்ளார் ஐயா பொ.கந்தசாமி ஐயா அவர்கள். விருதுநகரில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு தாய்வழிப் பூர்வீகம் தேனி தான். வைகை அணைக்குப் பக்கத்தில் முதலக்கம்பட்டி. சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும் செய்திகளும் அவரை மேலும் மேலும் பென்னிக்குக்கை குறித்த தகவல்களைத் தேடி ஓட வைத்துள்ளது. இதய அறுவைச் சிகிச்சை செய்திருந்த போதிலும் தனது வாழ்நாள் , பிறவிப் பயனாக இந்நூலை அவர் எழுதி முடித்து இருக்கிறார். நான் முதன் முதலாக ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த குள்ளப்ப கவுண்டன் பட்டி தான் கதையின் முக்கியமான உள்ளூர் நாயகனாக வருகிற பேயத்தேவரின் தந்தை மொக்கையத் தேவர் வந்து குடியேறிய ஊர். கூடலூருக்குப் பக்கத்து ஊர் தான். பேயத்தேவர் கூடலூ...
Comments
Post a Comment