Posts

Showing posts with the label நேர்காணல்

நமது கல்விமுறையில் அறிவியல் மனப்பாங்கிற்கும் அறிவியல் பார்வைக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டும் - பேரா.பொ.இராஜமாணிக்கம்

Image
முப்பது ஆண்டு கால அறிவியல் செயல்பாட்டாளர், ஏராளமான அறிவியல் பிரச்சாரக் கட்டுரைகள், நூல்கள் எழுதியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தற்போது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பில் துணைத்தலைவராகச் செயல்பட்டு வருகிறார். பி.ஆர். என்று அனைவராலும் அறியப்பட்ட பேரா.பொ.இராஜமாணிக்கம் அவர்களுடன் நமது புதுவிழுது இதழுக்கான நேர்காணல்.. தேனி திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.. விழுது இதழின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னவிதமான பணிகளை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டது..? பாராட்டுதலுக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவியல் பிரச்சாரப் பணிகளுக்காக   அறிவியல் இயக்கத்தில் தொடர்ந்து இயங்கி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் போது   அறிவியல் இயக்கத்தில்   சரியாக முப்பது வருடம் எனது   பயணம் முடிந்திருந்தது. ஆம், அக்.1987ல் அகில இந்திய அறிவியல் பயணம் வரும் பொழுது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒருங்கிண...

உலகமயமாதல் கொள்கையை முழுமையாக நிராகரித்தால் தான் அனிதாக்களுக்கு கல்வியும் வேலையும் கிடைக்கும் – கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன்

Image
அமலில் உள்ள கல்வி உரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? அரசியல் உறுதியோடு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. சரத்து 45, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் பதிநான்கு வயதிற்கு உட்பட்டவர் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க அரசு முயல வேண்டும் என்று கூறியது. அதன்படி 1960 ஜனவரி 26க்குள் அவ்விலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால் 1990 ஆகியும் எட்டவில்லை. எனவே உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை அடிப்படை உரிமையென அறிவித்தது. ஆனால் அதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணராது அரசு இருந்ததைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு தழுவிய பல போராட்டங்களை நடத்தினார்கள். இனியும் தள்ளிப் போட முடியாதென்ற நிலையில் நகல் சட்டத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. ஐந்து முறை மாற்றப்பட்டு இறுதியாக 86-ஆம் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசு சட்டங்கள் மூலம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாயிற்று. முழு உரிமையல்ல.. அரசின் விருப்பத்திற்கிணங்க என்ற கட்டுப்பாடுகளுக்...

வகுப்பறை என்பது பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் இடமாக மாற வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு நேர்காணல்

Image
2017ஆம் ஆண்டினை சாவித்ரிபா பூலே அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் துவங்கியிருக்கிறீர்களே..? ஜோதிபா பூலே மற்றும் அவருடைய இணையரான சாவித்ரிபா பூலே இருவருமே சனாதானக் கொள்கைகளுக்கு எதிராக, பிராமணீய, வேத சமய கட்டுப்பாடுகளுக்கு எதிரான மிகப் பெரியபோராட்டங்களை நடத்தியவர்கள்.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், அவர்கள் இருவரும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து தங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சொன்னது.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், ஒரு பிராமண விதவைப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேற்றப் பட்டபோது அடைக்கலம் கொடுத்ததும் அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாகவே வளர்த்தெடுத்ததும் கூட.. பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்ன காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிக்கூடங்களைத்திறந்தார்கள்.. ஆதிசூத்திரர்களும் சூத்திரர்களும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் பொதுப் பள்ளிகளை நிறுவினார்கள்.. மனுவாதத்திற்கும் வணிகமயத்திற்கும் எதிராக எழுந்தபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க்குரல்கள் தான் ஜோதிபா பூலே...