நூல் அறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் - டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கைப்பட எழுதிய நினைவலைகளில் இருந்து சில பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டு மக்கள் கல்விக் கழகத்தால் 1990ல் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது இந்நூல். அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25லும் இவை இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. தீண்டாமை வழக்கத்திலிருப்பதை பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அது எவ்வளவு கொடூரமானது என்பதை அவர்களால் உணரமுடிவதில்லை. இந்து மக்கள் அதிகம் வாழும் தனது கிராமத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து, அறுவறுக்கத்தக்க அத்தனை கழிவுகளையும் அகற்றி, வாசலில் நின்று உணவு பெற்று, கடைகளிலும் கூட எட்ட நின்று பொருட்களை வாங்கி, அந்த ஊரில் யாரையும் தீண்டாமலும் யாராலும் தீண்டப்படாமலும் இருக்கும் மக்கள் அதனைத் தன் சொந்த ஊராகக் கருதுகிற அவலத்தை எப்படி வெளிநாட்டவர்களுக்கு உணர்த்துவது என்கிற முன்னுரையுடன் அம்பேத்கர் தன் வாழ்விலும் பிறர் வாழ்விலும் தீண்டாமை காரணமாக நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1901, அப்போது அம்பேத்கருக்கு ஒன்பது வயது. அவருடைய அப்பா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு க...