Posts

Showing posts from June, 2023

உள்ளுட்டேன் சார்..! - பேரா ச.மாடசாமி

தனித்து நிற்கும் ஆசிரியரை அல்ல.. கண்கள் எப்போதும் தேடுவது… கலந்து நிற்கும் ஆசிரியரை- குழந்தைகளோடு கலந்து நிற்கும் ஆசிரியரை! அப்படி நாங்கள் தேடிக் கண்டுபிடித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் - தேனி சுந்தர். இவர் மொழி, சிந்தனை, செயல் ஒவ்வொன்றிலும் கல்விக்கான வேரைக் காண்கிறோம். குழந்தைகளின் மொழி - இலக்கியம் ஆனது இவரால்... குழந்தைகள் சொல்லும் டுஜக் டுஜக்கை இசைத் துணுக்குகள் என்றவர் இவர். ‘காக்காச்சி அங்கக்கு’க்கு டிக்சனரியில் அர்த்தம் இல்லை. சுந்தரின் எழுத்துலகில் அர்த்தம் இருக்கிறது. ‘இந்த மாடு பேரு என்னப்பா?’ என்று குழந்தை முன்வைத்த கேள்விக்குப் பெரியவர்கள் உலகில் விடை இல்லை. நெகிழ்வான உலகம் முன்வைக்கும் கேள்விக்கு இறுகிய உலகத்தில் விடை கிடைக்குமா? குழந்தை உலகில் பயணிக்க நம் அதிகாரம், அகங்காரம் இரண்டையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும். அது ஒரு வாய்ப்பு. மீண்டும் அந்த வாய்ப்பு ‘ஓங்கூட்டு டூணா’வில் கிடைத்தது. வெளியே வேறொருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுந்தர் சார்! சுந்தர் சார்!’ என்று குழந்தைகள் கூப்பிடுகின்றனர். வகுப்பறையில் நிலவும் இந்த சுதந்திரம் அழகானது; அபூர்வமானது. நான் மிக ரசித்...

தேனி சீருடையான் எழுதிய நிறங்களின் உலகம் நூல் குறித்து

Image
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவ்வப் போது சில நூல்களைக் குறித்து பேசுவார்.. அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும். ஊடக வெளிச்சம் புத்தகங்கள் மேல் பாய்வது நல்ல, ஆரோக்கியமான விசயம்.. அதுவும் கமல்ஹாசன் போன்ற உலகம் அறிந்த பிரபலங்கள் அந்த நூல் குறித்த பேசும் போது, வார்த்தைகள் மேலும் கூடுதல் கவனம் பெறுகிறது.. கடந்த ஆண்டு, பிக் பாஸ் நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து பேசி, மக்களிடையே அப்படியொரு கவனம் பெற்ற நூல் தான் “நிறங்களின் உலகம்”.. தேனியின் முன்னோடி படைப்பாளிகளுள் ஒருவரான தோழர் தேனி சீருடையான் எழுதிய நாவல்.. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, 1996 ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 2008 ல் தான் வெளிவந்திருக்கிறது. அதை 2014 வாக்கில் தான் நான் வாங்கினேன். 2022 அக்டோபரில் தான் வாசிக்க எடுத்திருக்கிறேன்.. ஒரு படைப்பு உருவாகி , அச்சாகி, வாசகர் கைகளில் சென்றடையவும், அதை வாசிக்கவும் எவ்வளவு பெரிய கால இடைவெளி..? குற்ற உணர்ச்சி தான் பொங்கி வருகிறது..! பிறக்கும் போது இருந்த கண் பார்வையை , இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இழந்து விடுகிற...

"ஓங்கூட்டு டூணா" - நானும் "ஐ லைக் இட்..! - மனத்துணைநாதன்

"குழந்தைங்க இப்பவெல்லாம் ரொம்ப மோசங்க.. சொல் பேச்சே கேட்கிறதில்ல.. அடிச்சா தான் உருப்பிடுவாங்க.. எங்க கையில் இருந்த கம்ப தான் பிடுங்கிட்டாங்களே!"- இப்படி தான் குழந்தைகள் மீதான அக்கறையும் பரிவும் பரவலாய் பொங்கி வழிகிறது. ஆம், குழந்தைகளை குற்றவாளிகளை போல அணுகுகிற பார்வை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்பை, அது தவறோ, சரியோ... வெளிப்படுத்தி விடுவார்கள்.. பெரியவர்களைப் போல உள்ளும் புறமும் வேறு வேறாக அவர்கள் இருப்பதில்லை. எப்பொழுதும் நான் சொல்வதை மட்டும் செய் என்றால் அது சரியாகுமா? "ஏய்.. சாருக்கு நான் தான் எட்டுப் போட சொல்லிக் கொடுத்தேன்..!" என்று குழந்தைகள் சொன்னால் "ஆமாம்" என்று அதை ஏற்று சிரிக்கிற மனங்கள் தேவை அல்லவா...? இயல்பாக ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உரையாடல்கள் பற்றி பெரிதாக எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அதுவும் அதே குழந்தைகளுக்கான உரையாடல் மொழியில்... பாடங்களுக்கு அப்பால் வகுப்பறையில் நடக்கின்ற உயிரோட்டமான ஒரு அசல் சூழலை பேசவோ அதை முக்கியத்துவம் கருதி எழுதி ஒரு புத்தகமாகவோ வெளியிட யாரும் முயலவில்லை. தேனி சுந்தர் அவர்கள் அ...

மணக்கும் ஏலம்.. வலிக்கும் வாழ்க்கை : ஏலோ..லம் நாவல்..!

காலையில் ஆறு-ஏழு மணிக்குள்ளும் மாலையில் நான்கு-ஐந்து மணிக்குள்ளும் தீயணைக்கப் போகிற வண்டிகள் போல அவ்வளவு ஜீப்கள் விர்விர்ரென்று போவதைப் பார்க்க முடியும். வண்டிக்குள் பார்த்தால் அரிசி மூட்டைகளைப் போல அவ்வளவு பெண்கள் ஒருவர் மேல் ஒருவராய் அடைந்து கிடப்பார்கள். மலைப் பாதையில் எப்படி அவர்களால் இவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து போய் வர முடிகிறது என்பதை நினைத்தாலே நமக்கு கால், கைகளில் “சூக பிடிச்சுக்கிரும்..!” கம்பம் மெட்டு சாலை மற்றும் கம்பம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் நாள்தோறும் காண்கிற காட்சி இது. நான் வசிக்கும், பணிபுரியும் கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வண்டிகளில் செல்கிறார்கள். கேட்டால் “மலை வேலைக்கு” என்பர். குழந்தைகள் தூக்கத்தில் இருக்கும்போதே வண்டி வந்து, பெண்கள் வேலைக்கு கிளம்பி விடுவார்கள். மீண்டும் அவர்கள் வீடு வந்து சேர்வதற்குள் அன்றைய பொழுது போய்விடும்.! குழந்தைகள் தாங்களே எழுந்து, குளித்து, கிளம்பி பள்ளிக்கு வருவர். இப்படியொரு வேலைவாய்ப்பு உருவானதன் பின்னணி என்ன? என்பதை வலிமிகு சித்திரமாக வரைந்து காட்டி இருக்கிறது ஏலோ-லம் நாவல்.! த...

அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்துக் காட்டுகிற நாவல்... சுளுந்தீ..!

இவ்வளவு விறுவிறுப்பும் பரபரப்புமான ஒரு நாவலை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நான்கைந்து பிரதிகள் வாங்கி, நண்பர்களுக்கு பரிசாக கூட வழங்கி இருக்கிறேன். ஆனால் வாசிக்க வாய்க்கவில்லை.. விடுமுறை கிடைத்ததால் டொம்னிக் லொப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய “நள்ளிரவில் சுதந்திரம்” (680 பக்கங்கள்), சல்மான் ருஷ்டீயின் “நள்ளிரவின் குழந்தைகள்” ( 752 பக்கங்கள்) உள்ளிட்ட நூல்களை வாசித்ததும் அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட படைப்பாளர் ஒருவரின் நூலை வாசிப்போம் எனக் கருதி, "சுளுந்தீ" (480 பக்கங்கள்) நாவலை எடுத்தேன்.. இந்நூலாசிரியர் இரா.முத்துநாகு, தேனி மாவட்டம் வைகை அணை அருகில் உள்ள குறும்பபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். தினமலர், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திரிகையாளராக பணி புரிந்தவர். ஒளிப்படக் கலைஞரும் கூட. தேனி மாவட்டத்தில் பல்வேறு விதமான இலக்கிய வகைமை எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் உள்ளனர். வரலாற்றுப் புனைவு எழுத்துக்கு ஓர் அற்புதமான அடையாளமாக, எழுத்தாளராக இந்நூலின் மூலம் முத்திரை பதித்துள்ளார் திரு.முத்துநாகு.. மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், கள ஆய்வு எ...