Posts

Showing posts from January, 2008

ஒண்ட வந்தவர்கள் ஓடட்டும்...

ஒண்ட வந்தது ஊர விரட்டிடும் புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட கழுதையெல்லாம் உள்ள நுழையுது கம்பு எடுக்க வேணும்... கருப்பசாமியும் சுடலைமாடனும் நம்ம சாமி தாங்க- அட பத்ரகாளியும் பட்டாளம்மனும் நம்ம சாமி தாங்க... செல்லாயம்மனும் கூத்தனாட்சியும் நம்ம சாமி தாங்க...- அந்த மாரியம்மனும் மந்தையம்மனும் நம்ம சாமி தாங்க..... கொழவ போடுறோம் கும்மியடிக்கிறோம் நம்ம சாமிக்கு- அட கெடா வெட்டுரோம் கோழியறுக்கிறோம் நம்ம சாமிக்கு...... பொங்க வைக்கிறோம் வத்தி பொறுத்துறோம் நம்ம சாமிக்கு- அட பட்ட சாராயம் பீடி சுருட்டும் படைச்சு வைக்கிறோம் நம்ம சாமிக்கு..... அருவா கத்தி கம்பு இருந்தா நம்ம சாமி தான் - அவாளின் அபிசேகம் உள்ள நுழைஞ்சா நாம் காலிதான்... தொந்தி பெருத்தவன் நூலு போட்டவன் உள்ள நுழையுறான் நம்ம சாமிய நீஷ பாஷையில் ஏதோ வையுறான்... இடத்தப் புடிச்சவன் மடத்தப் புடிக்கிறான் புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட கழுதையெல்லாம் உள்ள நுழையுது கம்பு எடுக்க வேணும்..! தமியன் வீதி இதழ் - ஜூன், 2008