Posts

Showing posts from August, 2008

ABL : சுகமா? சோதனையா?

காலங்காலமாக இருந்து வந்த கற்பித்தல் முறையினில் ஓர் அற்புத மாற்றம்.. தேர்வுகளில், பணியிடைப் பயிற்சிகளில் எந்த கற்பித்தல், கற்றல் முறை சிறந்தது என்று ஆசிரியர்கள் வாதிட்டார்களோ, தேர்ச்சி பெற்றார்களோ அதுவே இன்றைய செயல்வழிக்கற்றல் முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது.. கவனி.. கவனி.. என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பாடத்தை முடித்த காலம் மலையேறிவிட்டது. சொல்லிக் கொடுங்க சார்.. இந்த அட்டையைப் படிக்க வேண்டுமா எழுத வேண்டுமா? என்று மாணவர்கள் ஆசிரியர்களை நச்சரிக்கும் காலமிது.. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த எல்லைக்கோடு நீக்கப்பட்டு, இடைவெளி குறைக்கப்பட்டு ஒன்றாக அமர்ந்து கற்பிக்கும், கற்கும் முறை.. ஏழை எளிய மாணவர்களின் வியர்வை வாசம், அழுக்குச் சட்டைகளின் நெடி, கிடங்கு விழுந்த கண்கள், அந்தக் கண்களில் தெரிகின்ற ஏக்கம், கனவு ஆகியவற்றை அவர்களோடு அருகிலமர்ந்து உணர்த்திடக் கிடைத்த பெரும்பாக்கியம் இந்த  ABL ... எதுவுமே இல்லாத போது ஏதாவது ஒன்று கிடைத்தால் ஆறுதல் தான். அதுபோல ஒன்றுமே தெரியாமல் கடந்து செல்லும் கடைநிலை மாணவர்களை ஏதாவது படிக்க வைப்பதற்கான வாய்ப்பு! மீத்திறமிக்க ம...