Posts

Showing posts from April, 2010

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

Image
# உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23 : ஏப்ரல் முதல் தேதிக்கு என்ன சிறப்பென்று உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும். முட்டாள்கள் தினம்! மேலே வெள்ளைக் காக்கா பறக்குது..... சட்டையில் பூச்சி ஏறுது.... என்று சொல்லி சிலரை ஏமாற்றி (!) விட்டதாய் நினைத்து சின்னப்புள்ளத் தனமாய் நீங்களும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் உலகப் புத்தக தினமும் வருகிறது. ஆனால் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப் புத்தக தினமாக அறிவித்து புத்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாசிப்பை அதிகப்படுத்தவும் மக்களை அறிவாயுதம் ஏந்தச் செய்யவும் பல்வேறு தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும் தமிழக அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமே மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்கள் தோறும் புத்தகங்களைக் கொண்டு செல்லும் பணிகளை அலட்டிக்கொள்ளாமல் அதே நேரத்தில் பெருமிதத்தோடு ஆண்டு முழுக்கவும் செய்து வருகிறது.. புத்தகங்கள் மகத்தானவை.. அற்புதமானவை.. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “ காரிருள் அகத்த...