Posts

Showing posts from November, 2014

களமிறங்கும் நேரமிது

Image
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக குறிப்பாக தேனி, சிவகங்கை மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் நடந்த மாநிலச் செயற்குழு முடிவின் படி மாநிலந்தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாட நண்பர்கள் பலரும் பலவிதமாய்த் திட்டமிட்டுக் கொண்டிருக்க அறிவியல் இயக்க (ஆசிரியர், தொண்டர்கள்) நண்பர்கள் இந்தப் பிரச்சாரத்திற்காக திட்டமிட்டனர்... அதன் விளைவு? தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், சென்னை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருப்பூர், விழுப்புரம் என பத்து மாவட்டங்கள் வரையிலும் விரிவிடைந்துள்ளது. பல மாவட்டங்களில் இந்தப் பணியை நண்பர்கள் கையிலெடுப்பதற்குத் தயங்கினார்கள்.. காரணம் என்னவெனில் நானே ஒரு தனியார் / மெட்ரிக் / நர்சரி பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறேன்.. நான் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு எப்படி இதைக் கொண்டு செல்லமுடியும்? எனது குழந்தையை தனியார் பள்ளியில் படிக்கவைத்துக் கொண்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இந்தப் பிரச்சாரத்தைச் செய்வது? உள்ளம் உறுத்துகிறத...

அதிகரிக்க வேண்டும் ஆசிரியத் தற்கொலைகள்.....

Image
நான் ஆசிரியராகப் பணியேற்கும் போது மிகவும் சின்ன வயசு. 19 கூட முடியவில்லை.. மருத்துவச் சான்றிதழ் கேட்டுப் போகும்போது கூட கம்பம் செல்வம் டாக்டர் நம்பவில்லை. தம்பி, நீ எல்லா வகுப்புகளும் படிச்சுட்டுதான் வந்தியான்னு கேட்டார்..  2004 பிப்ரவரியில் பணியேற்கச் செல்கிறேன். எட்டாம் வகுப்பைக் கடந்துதான் தலைமை ஆசிரியர் அறையெனத் தகவல். போகும்போதே எட்டிப் பார்த்தேன்.. வாட்டசாட்டமா நல்ல மொரட்டு மொரட்டுப் பயலுக எட்டாம் வகுப்பிற்குள்.. பார்த்தவுடன் வியர்த்துப் போனது எனக்கு..!  எந்த வாத்தியாருக்காவது பணிஸ்மெண்ட்-ன்னா கே.ஜி.பட்டி பள்ளிக்கூடத்துக்குத் தான் மாத்துவாங்கலாம்.!? தலைமை ஆசிரியர் என்ன டைப்போ? மத்த வாத்தியார்கள் எல்லாம் டிப்டாப்பா இருக்கிறார்களே, நம்மோடு சகஜமாகப் பழகுவார்களா? இந்தப் பயலுக நம்ம சொல்றத கேட்பாய்ங்களா? மதிப்பாய்ங்களா? –இப்படி பல கேள்விகள் மனதிற்குள் இடமின்றி முட்டி மோதும் குழப்பமான மனநிலையில் தான் நான் முதல் நாள் பணியேற்றேன்... ஒரே நாளில் ஏழெட்டு பேர் அந்தப் பள்ளியில் சேர்ந்தோம்.. எல்லாருமே புதுசு. கொஞ்ச நாளில் சகஜ நிலைக்கு வந்தாச்சு. அப்புறம் பாத்திங்கன...