Posts

Showing posts from September, 2021

பள்ளிகள் வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும்..! - தேனி சுந்தர்

மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மக்கோடா அப்பாவிடம் கேட்கிறான் . இன்று ரேசனில் சீனி போடுகிறார்களாமே என்று. இல்லை, நமது பகுதியில் நாளை தான் போடுவார்கள் என்கிறார் அப்பா. பின்னாடியே வந்த கயானா கேட்கிறாள். அப்பா, இன்று ரேசனில் சீனி போடுவார்களாமே.. எங்கள் ஆசிரியர் சொன்னார் என்று கடைசி பாட வேளையில் அவளது ஆசிரியர் சொன்னதை அப்படியே சொல்கிறாள். "நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேசனில் சீனி போடுகிறார்கள்.. நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது, வீட்டில் உங்கள் அம்மா சீனியை வைத்து சுவையான பீன்ஸ் சூப் அல்லது வேறு ஏதாவது இனிப்பான பதார்த்தம் உங்களுக்காக செய்து வைத்திருப்பார்.. அதை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு செல்லுங்கள்.." அப்பா தன் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.. யதார்த்தம் புரியாத இந்த ஆசிரியர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு வெடிகுண்டை வீசி இருக்கிறார்களே என்று.. இது ஒரு அப்பாவின் குறிப்பு. இது நடந்தது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்..! அமெரிக்கா, ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் வீசிய அணுகுண்டு தாக்குதலால் அந்த நகரங்களில் இருந்த குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டார்கள...

சேது ஆனந்தன் எழுதிய ஃபிடல் காஸ்ட்ரோ : விறுவிறுப்பான, வண்ணமயமான ஒரு நூல்... - தேனி சுந்தர்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர் தோழர் சேது ஆனந்தன்.. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். எங்கள் மண்ணின் சிறந்த ஆளுமைகளில் அவரும் ஒருவர். பள்ளி ஆசிரியராக, ஓய்வறியா சங்கவாதியாக பணிபுரிந்தவர் பணி ஓய்வுக்கு பிறகு படைப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார்.. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அப்போது தான் மாநில பொறுப்பிற்கு வந்த சமயம். தோழர் சேது ஆனந்தன் அவர்களின் முதல் நூல் ஜோசப் ஸ்டாலின் அப்போது தான் வெளிவந்தது. அதற்கான விழா தேனியில் நடந்தது. அவ்விழாவில் அவர் சார்ந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர், தமிழகம் அறிந்த தோழர் மாயவன் கலந்து கொண்டிருந்தார். அதே போல அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் ஆர்.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ஆர். முத்து சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்.. இத்தனை பெரிய ஆளுமைகள் பங்குபெற்ற அந்நிகழ்வில் என்னை அங்கீகரித்து, எனக்கு ஒரு முக்கிய இடத்தை அளித்து என்னை ஊக்கப்படுத்தினார்.. எனக்கு அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்த...