திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து இரா.சத்யா, தேவாரம்
நம் பள்ளிப் பருவம் முதல் இன்று வரை குழந்தைக் கவிஞர் என்றாலே அழ வள்ளியப்பா என்ற பெயர் தான் ஆசிரியரான பின்பும் மனதில் முதன்மையாக வந்து நிற்கும். அதுபோல குழந்தைகளுக்கான படைப்புகளை அளித்த நமது முன்னத்தி ஏர்களைப் பின்னுக்குத் தள்ளி சிறார் இலக்கியஉலகில் புதுமைப் படைப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் எங்கள் தேனி சுந்தர் சார் அவர்களின் சமீபத்திய நூலான திட்டமிடாத வகுப்பறைகள் பற்றிய என் பார்வையிலான மனப்பதிவுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விரும்பி வந்துள்ளேன். அதிக நூல்களை வாசிப்பவரே சிறந்த படிப்பாளி என்ற பொதுவான கூற்று ஒன்று உண்டு. அந்த வகையில் பார்த்தால் தொடக்க நிலை முதல் வளரிளம் பருவம் வரை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு சிறந்த ஆசிரியரே உலகின் மிகச் சிறந்த படிப்பாளி என்று கூறலாம். ஏனென்றால் குழந்தைகளை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு அவரது குழந்தைகளே அனுதினமும் சுவாரஸ்யமான அனுபவங்களைத் தரும் ஆசான்களாக விளங்குகின்றனர் என்பது கண்கூடு . அதற்கான அத்தாட்சியாகவே சமீப காலங்களில் தேனி சுந்தர் அவர்கள் படைப்பில் வெளிவந்துள்ள சிறார் இலக்கிய நூல்கள் அனைத்தையுமே கூற முடியும். ஒரு திரைப்படம் பார்க்கலாம் எ...