Posts

Showing posts from August, 2014

மக்கள்தான் கதாநாயகர்கள்- தேனி சுந்தர்

Image
என் அப்பா (தேவராஜ் என்று பெயர்). அந்தக் காலகட்டங்களில், எனக்கும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் பலருக்கும் கதாநாயகன்... சிலருக்கு வில்லனும்கூட..... பொதுவுடமை இயக்கமொன்றின் செயலாளராக இருந்து பல இயக்கங்களை நடத்தியவர்... கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டம்.... வாரவட்டிக்கு எதிரான போராட்டம்... பெண்களுக்கான திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டம்... முல்லைப் பெரியாறு குறுக்குப்பாலம் கட்டச் சொல்லி சாலை மறியல் (போராட்ட வடிவங்கள், எதிர்விளைவுகள் பற்றி நமக்கென்ன தெரியும் அந்தச் சிறு வயதில்.... நான் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மறியல் நடக்குமிடத்தை அடைந்தேன்.. அங்கு பண்டபாத்திரங்களை வண்டியில் ஏற்றுவதுபோல தோழர்களை அள்ளி வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர் போலீசார்..!) மான்சாண்டோ கம்பெனி எதிர்ப்புப் போராட்டம்- இவையெல்லாம் சிறுவயதில் என்காதில் விழுந்தவை... அல்லது என் நினைவுக்கு எட்டியவை.. தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோகும் வழியில் ஒன்றிரண்டு பழங்களைப் பிடுங்கித் தின்றுவிட்டான் என்பதற்காக ஒரு சிறுவன் திராட்சைத் தோட்ட முதலாளி ஒருவரால் சித்ரவதை செய்தே கொ...

வேல நெறயாக் கெடக்கு........

வணக்கம் நண்பர்களே.. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் ஒருநாளாக இருக்கலாம்.. நான் நமது அறிவியல் இயக்க நண்பர் ஒருவரைப் பார்த்து அவரது நட்பை, தொடர்பை புதுப்பிக்கும் பொருட்டு அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.. அவர் அந்தப் பகுதி குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்புகளை எடுத்து வருவது அன்றுதான் எனக்குத் தெரியும்.. தேர்வு நேரம் என்பதால் குழந்தைகள் இன்று சீக்கிரமே வந்துவிட்டார்கள்.. கொஞ்சம் பேசிக்கிட்டு இருங்க என்று சொல்லிவிட்டு பால்வாங்கி வர என்னுடைய வண்டியெடுத்துக் கொண்டு கிளம்பினார்... எனக்கு உரை நிகழ்த்தும் உற்சாகமெல்லாம் அன்று இல்லை.. (தெரியாதுங்கறது வேற விசயம்...!) வழக்கம் போல அமைப்புக் கூட்டங்களின் பாணியில் சுய அறிமுகம்... நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இருந்தனர்.. என்னடா இது வந்த இடத்தில் வம்பாகப் போச்சுன்னு நினைக்கும் போது ஒரு யோசனை தோன்றியது.. உரையாடல்... ஆயிரமாயிரம் உரையாடலை இங்கிருந்து துவங்குவோம்.. பையில் இருந்த விஞ்ஞானச்சிறகை எடுத்தேன்.. அதில் பேரா.பி.ஆர். அவர்களின் ஆயிரமாயிரம் உரையாடல் குறித்த கட்டுரை ஒன்று இடம்பெற்றிருந்தது.. “சரிப்பா...