மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர்
இந்த கொரனா காலகட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் கல்வியில் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கவலை நியாயமானது. ஆனால் கவலை மட்டும் போதுமா என்பது தான் கேள்வி. பள்ளிகளை உடனடியாகத் திறக்க முடியாது. எப்போது திறக்க வாய்ப்பு என்பது குறித்தும் ஆரூடம் கூற முடியாத நிலையாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் நிச்சயம் மாற்று குறித்து யோசிக்க வேண்டும். தற்போது சிட்டுக்கள் மையம் என்கிற மாற்று வகுப்பறைகள் குறித்து பெரும்பாலும் விவாதங்களும் அதையொட்டிய பல்வேறு முயற்சிகளும் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியான, ஆரோக்கியமான முன்னெடுப்பாக, காலத்தே முன்வைக்கப்பட்டுள்ள நல்ல ஆலோசனையாக கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து ஆலோசனைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சின்னச் சின்னதாய் சில அடிகள் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. ப...