Posts

Showing posts from April, 2023

ஓங்கூட்டு டூணா _வாசிப்பு அனுபவம் : அருந்ததி

தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா _ புத்தகத்தை நானும் வாசித்தேன். அதுவும் இரண்டு முறை...! எனை வெகுவாக கவர்ந்த எழுத்து நடை... இதே விடயத்தை இன்னொருவர் இதே போல எழுத முடியுமா என தெரியவில்லை. இது அவருக்கே உரிய தனி நடை.. புத்தகத்தை படித்தபோது...  சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை.  அப்படி ஒரு நகைச்சுவை. ஆமாம், நானும் 20 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியை தான்... அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக வாசிக்கலாம். 'இயலாதென்று முயலாதவர்கள்... இறக்கை இருந்தும் பறப்பது இல்லை' ஆம்... மாற்று சிந்தனையுடன் புத்தகம் படைத்து... இதை பறை சாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. குழந்தைகளின் அனுபவங்கள் சார்ந்த வரிகளிலும் வகுப்பறையை தாண்டி... நாம் மண்வாசனையை கவனிக்கலாம்.' எழுத முனைகையில் தான்... எழுத்தாளர் அருமை தெரிகிறது. அப்படி ஒரு அருமையான எழுத்தில்...  தாங்கள் மனதை கவர்கிறீர்கள். வாழ்க.. வளர்க...💐 அன்புடன் தோழமை அருந்ததி ஆசிரியை, தேனி

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : தேனி சீருடையான்

குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக் காவியம்...! “உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.”  நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் வெளிவந்த பிரெய்லி புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவற்றில் குழந்தைகளுக்கான பருவ ஏடு ”சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட்” முகப்பு அட்டையில் மேற்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். (you know that truth when a child says it in her language.) ஒரு குழந்தை அனுதினமும் பேசும் மொழிதான் என்றாலும் அது புதிய திசையில் இருந்து புறப்பட்டு புதிய இலக்கு நோக்கிப் பயணிப்பதை உணர முடிகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக் கொள்வது போல நமக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. அனுதினமும் கண்டு கேட்டவை என்றாலும் ஓர் குழந்தை நல விரும்பியால்தான் அதை ஆவணப் படுத்த முடிகிறது.. தேனிசுந்தர் அதைச் செய்திருக்கிறார். “குழந்தை இயலின் ஆவணக் காப்பகம் தேனிசுந்தர்” என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதி அதை நிரூபித்திருக்கிறார். அவற்றின் ப...

சீமையில் இல்லாத புத்தகம் - வாசிப்பு அனுபவம் : கண்ணன்

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர்  தோழர் கண்ணன் அவர்களின் முகநூல் பின்னூட்டம்... சுந்தர் தோழர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. மேலும் பல புத்தகங்கள் தங்கள் மூலம் வரவும் பல பரிசுகள், பட்டங்களை பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..  தங்களின் சீமையில்லா புத்தகத்தை இன்று (7.4.2023) டெல்லி ஏப்.5 போராட்டத்திற்கு சென்று விட்டு ரயில் பயணத்தில் படித்தேன்.. எனது பேத்தி துளிர்விகா என்னிடம் கைபேசியில் தனது மழலை மொழியில் "த்தா சப்டியா?" என கேட்டு அசத்தியதை போல, உங்கள் குழந்தைகள் பேச்சு மழலை மொழி.. தமிழ் வார்த்தைகளை படிக்க படிக்க மிக சோர்வை கூட எனது மூளை தாங்கிக் கொண்டு புத்துணர்ச்சியுடன் படித்து முடித்து விட்டேன் தோழர்.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்.. - கண்ணன்