Posts

Showing posts from May, 2025

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் நூலறிமுகம் : புத்தகம் பேசுது இதழில் பேரா.மோகனா அவர்கள்

Image
  கட்டுரையை வாசிப்பதற்கான லிங்க்.. ‘வாசிப்பு வித்தாக மனதில் விழும்.. மலராக உலகுள் முகிழ்க்கும்..’ வணக்கம் நண்பர்களே! தேனி சுந்தர், அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தவர் கல்விக் குழுவில் இருந்து பணியாற்றியவர். புது விழுதின் ஆசிரியராக இருந்தவர். இப்போது, ஆசிரியர்களின் கருத்துகளை பதிவிடும், குரல்களை ஒலிக்கும் ‘புதிய ஆசிரியன்’ மாத இதழின் துணை ஆசிரியர்.; கல்வியாளர்; பள்ளிக் குழந்தைகளின் சொந்தக்காரர்;.மாணவர்கள் நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர்.;கல்வி சார்பாக கருத்துகளை, குரலொலியை தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’, ‘புதிய ஆசிரியன்’ மற்றும் ‘வண்ணக் கதிர்’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வருபவர். பணியிடமும் வசிப்பிடமும் கம்பம் தான். அவருடைய புத்தகங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவைதான். யாராவது ‘டுஜக் டுஜக்’ என்று ஒரு புத்தகத்திற்கு பெயர் வைப்பார்களா! துணிந்து வைத்திருக்கிறார்.. அந்தப் புத்தகமும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த புத்தகம் ‘சீமையில் இல்லாத புத்தகம்’ என்னடா இப்படி ஒரு பேரு என்று நினைத்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.. அடுத்து ...

மாணவர் மனசு நூல் குறித்து முல்லை தெய்வேந்திரன் வாசிப்பு அனுபவம்

Image
குழந்தைகளின் அகவுலகை நாம் புரிந்து கொள்வதன் மூலம் நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண இயலும்.. -  ஆலிசன் கோப்னிக்..   மாணவர் மனசு  நூல் குழந்தைகளை அவர்களின் அக உலகத்தை நெருங்கி நின்று தரிசிக்க நல்ல வாய்ப்பு. தேனி சுந்தர் ஜனநாயக வகுப்பறையை பெயரளவில் இல்லாமல் நடைமுறையிலும் நடத்தி வருகிறார். குழந்தைகளின் உரையாடல்களும் அவர்களை உற்சாகப்படுத்த வகுப்பறையில் தன்னை புதுப்பிக்க சுந்தர் எடுக்கும் முயற்சிகளும் மிகவும் அருமை.  தனது வகுப்பறைக்கு தேவையான கற்பித்தல் உத்திகளை தேர்வு செய்து குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவது கற்பித்தலில் புதுமையை நிகழ்த்த தொடர்ந்து முயல்வது நம் பள்ளிகளில் நடைபெற வேண்டிய அடிப்படை மாற்றங்களில் ஒன்று. உதாரணமாக டும் டும் டும் கட்டுரை. கதையாக தொடங்கி, பாடலாக மாறி எல்லோரும் இணைந்து செய்கிற ஒரு செயல்பாடாகவும் மாறியதை ஆசிரியர் உணரும் தருணம் அற்புதம். குழந்தைகள் முன் தங்கள் ஒளியை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்  என்பார் பேராசிரியர் மாடசாமி அவர்கள்..  சுந்தர் அதை தன் வகுப்பறையில் நிகழ்த்துகிறார். "சார் பயந்துட்டாரு" கட்டுரை அதற்கு ஒரு உதாரணம...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
நன்றி : புதிய ஆசிரியன்