Posts

Showing posts from June, 2025

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
 

மாணவர் மனசு நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்...

Image
வகுப்பறையில் மாணவர்களுடன் ஏற்படும் அனுபவங்களையும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் வித்தியாசமான முறைகளையும் சுவாரசியமான படைப்பாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நூலில் உள்ள கட்டுரைகள் சலிப்பைத் தராமல், கதையாகவே எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு ஆசிரியருமே இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனத் தோன்ற வைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மழலை மொழியை மழலையாகவே உணர்ந்து எழுதியிருப்பது நூலுக்கு வலுச் சேர்க்கிறது. - பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளிவரும் “ கனவு ஆசிரியர்”  மாத இதழ்,   ஜூன் 202 5

ஒரு புதிய ஆசிரியனின் எழுத்து: "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." நூல் குறித்து எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன்

Image
சுந்தரின் பத்தாவது நூலை வாசிக்கிறேன். வழக்கம் போல தலைப்பிலேயே ஜொலிக்கிறார் சுந்தர். "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." பேச்சு வாக்கில் இருக்கிறது தலைப்பு. சின்னப் பையன் ரேப்பரில் சிலேட்டோடு நிற்கிறான். அவன் முழியே அர்த்தம் சேர்க்கிறது. அவன் கேள்வி கேட்கும் பையன்; பகடி செய்யும் பையன். வாத்தியாரை, பள்ளிக் கூடத்தை, அதிகாரத்தை, சமூகத்தை, அரசை என யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியொரு பையனாகவும் ஆசிரியராகவும் அமைப்பாளராகவும் இருந்து வந்த சுந்தர் எழுதிய நூல் இது. இதுவரையிலான சுந்தரின் புத்தகங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வீடு- மகன், மகளோடு ஒரு அப்பாவாக சுந்தர் உரையாடியவை. இரண்டாவது பள்ளிக்கூடம் - மாணவர்களோடு ஒரு ஆசிரியராக சுந்தரின் அனுபவங்கள். இந்த நூலும் இரண்டாம் வகைதான். ஆனால் வகுப்பறையோடு நிற்கவில்லை. அதற்கு வெளியிலும் இயங்குகிறது. ஒரு கலவையான அனுபவத்தைத் தருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்தை களமாகக் கொண்டு சில கட்டுரைகள் இருக்கின்றன. இதுவரை நான் எழுத்தில் வாசிக்காத பகுதியிது. பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி வந்து நிற்கும் ஓர் ஆசிரியரை போய் சாகச் சொல்கிறா...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - நூல் குறித்து மதுரை அமுதா செல்வி, எழுத்தாளர்

Image
தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்ற கட்டுரை தொகுப்பு மொத்தம் 25 கல்விசார் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் குழந்தைகளுக்காக பேசும் தேனி சுந்தர் அவர்களை வளர்ந்த குழந்தையாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் குழந்தையின் வலியை அவர்களின் தேவையை அவர்களைத் தவிர வேறு யாரும் கச்சிதமாக எடுத்துச் சொல்ல முடியாது என்ற கருத்தியலில் மிகுந்த நம்பிக்கை உடையவள் நான்.  இந்த ஒட்டுமொத்த கட்டுரை தொகுப்பில் அவர் குழந்தைகளுக்காக மிக வீரியத்துடனும் கூர்மையுடனும் கேள்விகளை முன் வைக்கிறார். மாணவர்களை தோல்வியுறச் செய்யும் ஆசிரிய மனோபாவத்தை மிக நேர்மையாக பதிவு செய்கிறார். இவனுக்கு எங்க வகுப்பறையில் ஒரு இன்ச் இடம் கூட யாரும் தரவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு வாசிப்போரையும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறித்து அவர் பேசியது மிக சிறப்பு. ஆசிரியர்கள் புரிந்து கொண்ட நிலையில் இருந்து குழந்தைகளுக்கு கற்பிக்காமல் குழந்தைகள் ஒரு கணக்கையோ கருத்தையோ எவ்வாறு புரிந்து கொள்கிறார்களோ அந்த புரிதல் நிலை...