Posts

Showing posts from 2016

அறிவியல் கலாச்சாரம் மேலோங்கி இருந்தால் சமகால ஜனநாயக சீரழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருந்திருக்காது- பேரா.நா.மணி நேர்காணல்

Image
பொருளாதார பேராசிரியர் மணி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? தற்போது பொருளாதாரத் துறைப் பேராசிரியர் என்ற பொறுப்பை செம்மையாக செய்ய இயலாதவனாகவே உள்ளேன். நான் பணியாற்றும் துறையில் 10 பேர். ஏழு பேர் பணி ஓய்வு பெற்றும் ஒருவர் முதல்வராக பணி உயர்வும் பெற்று சென்ற நிலையில் ஏழு பணியிடங்கள் காலி. முதலில் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டும் பின்னர் புதிதாக பணி அமர்த்தப் பட்டவர்களை ஒருங்கிணைப்பது ஊக்கமளிப்பது. புதிய துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவது என துறைசார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், ஒரு பொருளாதார பேராசிரியராக சமகால பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதன் மீது பங்களிப்பு செலுத்துதல் என்ற பகுதியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் மாநாடு ஒன்றை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறீர்கள்.. அதென்ன திடீரென வல்லுநர்கள் மாநாடு? கருப்புப் பணம், கள்ளப் பணம் குறித்து விவாதிக்கப்பட்டதா?? தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் சங்கம் (Association of Economists of Tamilnadu) என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரப்...

அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளை விடவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது +2 பொதுத் தேர்வு முடிவுகள்.. எத்தனை பேர் முதலிடம், எத்தனை பேர் இரண்டாவது இடம்.. மூன்றாவது இடம்.. எந்தெந்தப் பாடங்களில் எத்தனை பேர் 200/200? மாணவர்களின், பள்ளி நிர்வாகிகளின் பேட்டிகளால் பத்திரிகைகள் நிரம்பி வழிந்தன.. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிலர் வங்கி, கூட்டுறவுத்துறையில் மேலாளர்கள், சிலர் தனியார் நிறுவன மேலாளர், ஆடிட்டர்.. அதே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப்பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. அவரது தாயார் நிர்மலா ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் வாழ்கிறது.. மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்ற கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசுப் பள்ளி மாணவி சத்யாவின் ( 1178 மதிப்பெண்கள் ) தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி.. அம்மா, அப்பா இருவரும் பள்ளிக்கூடமே போகாதவர்கள்.. மூன்றாவது இடம் பெற்ற காஞ்சிப...

அனைவருக்கும் வேண்டும் தரமான கல்வி....!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழகக் கல்வித்தர மேம்பாட்டிற்கான கோரிக்கைகள் தொகுக்கப்பட்டன.. அக்கோரிக்கைகள் அடங்கிய பிரசுரம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ள வேண்டியல் பட்டியல்.. இதோ உங்கள் முன்..:   தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழாவைச் சந்திக்க இருக்கும் சூழல்.. அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது...   தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து முற்றிலும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான பொதுப் பள்ளி முறையை, உண்மையான சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்..  அரசுப்பள்ளியில், தாய்மொழிவழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கே அரசு உயர்கல்வி நி...

அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை சாத்தியமா?

Image
சமீபத்தில் தேனீ கலை இலக்கிய மையம் மற்றும் திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆனந்த விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்களின் நூலான கற்க கசடற: விற்க அதற்குத் தக என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. அந்நூல் குறித்து கருத்துரையாற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கினர் நண்பர்கள். நடைபெற்ற இடம் பயிற்சி மையம் என்பதால் பங்கேற்பாளர்களில் அநேகம் பேர் தகுதித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள்.. அவர்களிடம் இந்த நூலிற்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என வினவியபோது கனத்த மௌனமே நிலவியது. தொடர்பில்லை என ஆங்காங்கே சில தலைகள் ஆடியதையும் பார்க்க முடிந்தது. பயிற்சி மையம் பிடித்திருக்கிறதா? பயிற்சியாளர்கள் மீது மதிப்பு மரியாதை இருக்கிறதா? என்று நான் கேட்டேன்.... உடனே பலரும் ஆமாம் ஆமாம் என்றனர். சரி, அடுத்த ஆண்டும் இதே பயிற்சி மையத்திற்கு வர விரும்புபவர்கள் எத்தனை பேர் என்றேன்.. அதெப்படி சார் வருவோம்.. நாங்க வேலைக்குப் போக வேண்டாமா? என்றனர். தமிழக அரசு நாளைய தினமே ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் அரசுப்பள்ளிகளில் எவ...