அதிர்ந்தது நிலம் மட்டுமில்லை… - தேனி சுந்தர்
இந்த முறை சீக்கியர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என முடிவெடுத்துத் தனது பெரும்படைகளை அனுப்பினார் பேரரசர் ஃபரூக்சி. அவர் நினைத்தபடி நடந்தது. சீக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அப்படைக்கு தலை மையேற்று மொகலாய அரசர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்த பண்டா சிங் கைது செய்யப்பட்டார். “டெல்லியை நோக்கிப் புறப்பட்ட வெற்றி ஊர்வலத்தில் இருநூறு சீக்கியர் களின் தலைகளோடு விலங்கிடப்பட்டு இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பண்டா சிங்கும் இருந்தார். தலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அரசர் கோபமடைவார் என்று எண்ணிய படைத் தலைவர்கள், திரும்பிச் செல்கிற வழியில் இருந்த அக்கம்பக்கத்து கிராமங் களில் வசித்த அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவிக்குமாறு தனது படை களுக்கு உத்தரவிட்டனர். இப்படியாக சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டு அவர்களது தலைகளும் ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த ஊர்வலம் டெல்லியை அடைந்தபோது தலைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தன. இந்தக் கொடூரம் நடந்தது 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில். மன்னராட்சி காலத்திற்கு நிகரான அல்லது அதையும் விஞ்சி விடும் அளவிற்கு “என்னுடைய பகுதியில்தான் அதிகமான சீக்கியர...