தேனி சுந்தரின் 'மாணவர் மனசு' வெளிப்படுத்தும் சிறார் உளவியல் : முனைவர் மு.செந்தில் குமார்
புதியவன் செந்தில் அவர்களின் வாசிப்பு அனுபவம் கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்த, விளையும் இலக்கியப் பயிர்களில் முக்கியமான, முதன்மையான பயிர் தேனி சுந்தர் அவர்கள். அப்பகுதியின் படைப்பாளர்கள் கதை, கவிதை, நாவல் என இயங்கும்போது இவர் மட்டும் குழந்தைகளுக்கான இலக்கியத்தைக் கையிலெடுத்து தொடர்ச்சியாகப் படைப்புகளைப் படைத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மையப் பொறுப்பு, த.மு.எ.க.ச, ஆசிரியர் இயக்கங்களில் முனைப்போடு பங்காற்றி வருகிறார். கல்வி, சிறார்கள் தொடர்பான இவரது கட்டுரைகள் நாளிதழ்கள் இலக்கிய, இதழ்களில் வெளிவந்துள்ளன. 2016 - மகாராஜாவின் புதிய ஆடை 2021 - டுஜக் டுஜன் அப்பாவின் டைரி 2022 - சீமையில் இல்லாத புத்தகம் 2023 - எதிர்பாராத பரிசு 2023 - ஓங்கூட்டு டூணா 2024 - மாணவர் மனசு 2025 - நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன 2025 - திட்டமிடாத வகுப்பறைகள் 2025 - உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் 2025 - நட்சத்திரக் குழந்தை மேற்கண்ட அவரது படை...