Posts

Showing posts from 2008

நூலறிமுகம்: புதிய பரிதியின் தமிழ் என் காதலி....

எங்கெங்கும் காணினும் சக்தியடா என்பது போல எட்டுத்திக்கிலும் கவிஞர்கள் கூட்டம்.. ஆளாளுக்கு ஒரு வட்டம்! அதற்குள் இருந்துகொண்டு எதையாவது எழுதுவதும் அதை கவிதை என வெளியிடுவதும் இன்று சர்வசாதாரணமான கலாச்சாரமாகிவிட்டது... என்னைக் கவிஞன் என்று இந்த சமூகம் கூற வேண்டும்.. அதற்கான முயற்சிகளாக எதையேனும் எழுதுவேன், படைப்பேன் என பகட்டுத்தனமாக கூறுபவர்களுக்கு மத்தியில்... நன்றாக நடக்க, ஓடப்பழகிய நான்காம், ஐந்தாம் அகவைப் பருவத்திலேயே புரட்சி பற்றிக் கவி பாடினால் என்னவென்று சொல்வது? சமணத்தை ஒழிக்கச் சபதமேற்று ஆயிரம் பாடல்களை எழுதிய திருஞான சம்பந்தரைக் கருவிலே திருவுடையார் எனப் போற்றுகின்றனர்.. அப்படியானால் தாலாட்டுக் கேட்கும் பருவத்திலே இப்பாழடைந்த சமூகத்தை புரட்சியால் நீராட்ட நினைத்துக் கவி பாடிய இக்குட்டிப் புலவனை என்னவென்று சொல்வது? ஊனமுற்றவனாய்ப் பிறக்க ஆசை அந்த ஊனமுற்ற உறுப்பு வயிறாக இருந்தால்! வைகை வற்றியதற்கு வருத்தப்படாமல்-அதில் மீன் பிடிக்க நினைக்கிறாய்... பிறந்த நாள் கேக் வெட்டும்போது நினைத்துக் கொண்டேன்.. அம்மாவின் பிரசவ வேதனையை!  இது போன்ற இன்...

ABL : சுகமா? சோதனையா?

காலங்காலமாக இருந்து வந்த கற்பித்தல் முறையினில் ஓர் அற்புத மாற்றம்.. தேர்வுகளில், பணியிடைப் பயிற்சிகளில் எந்த கற்பித்தல், கற்றல் முறை சிறந்தது என்று ஆசிரியர்கள் வாதிட்டார்களோ, தேர்ச்சி பெற்றார்களோ அதுவே இன்றைய செயல்வழிக்கற்றல் முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது.. கவனி.. கவனி.. என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பாடத்தை முடித்த காலம் மலையேறிவிட்டது. சொல்லிக் கொடுங்க சார்.. இந்த அட்டையைப் படிக்க வேண்டுமா எழுத வேண்டுமா? என்று மாணவர்கள் ஆசிரியர்களை நச்சரிக்கும் காலமிது.. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த எல்லைக்கோடு நீக்கப்பட்டு, இடைவெளி குறைக்கப்பட்டு ஒன்றாக அமர்ந்து கற்பிக்கும், கற்கும் முறை.. ஏழை எளிய மாணவர்களின் வியர்வை வாசம், அழுக்குச் சட்டைகளின் நெடி, கிடங்கு விழுந்த கண்கள், அந்தக் கண்களில் தெரிகின்ற ஏக்கம், கனவு ஆகியவற்றை அவர்களோடு அருகிலமர்ந்து உணர்த்திடக் கிடைத்த பெரும்பாக்கியம் இந்த  ABL ... எதுவுமே இல்லாத போது ஏதாவது ஒன்று கிடைத்தால் ஆறுதல் தான். அதுபோல ஒன்றுமே தெரியாமல் கடந்து செல்லும் கடைநிலை மாணவர்களை ஏதாவது படிக்க வைப்பதற்கான வாய்ப்பு! மீத்திறமிக்க ம...

நூலறிமுகம்: எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க.......?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் மக்களின் பாடுபொருளாய் இருப்பவை குழந்தைகள், எடுத்த மதிப்பெண், அடுத்த பள்ளி, அது தொடர்பான விமர்சனங்கள், “என்னங்க, உங்க பையன் மார்க் எப்படி? பரவாயில்லையா? அய்யய்யோ, ஆயிரத்த்துக்கும் கீழே போனாலே கொஞ்சம் கஷ்டந்தான்..” என்பார்கள். அதிலும் தேர்வில் பெயிலானவர்கள் கதி, சொல்லவேண்டியதே இல்லை.. சொந்த பந்தங்கள் விசாரிப்பிலேயே வெட்கித் தலைகுனிந்து வெளியில் வரவே சங்கடப்பட வைத்து விடுவார்கள்.. மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்களும், ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதில் அதிகாரிகளும், பாடத்திட்டம், கல்விக் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டுமென்பதில் அரசாங்கமும்.. ஆளுக்கொரு முன்முடிவுகளோடு செயல்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் “ஆர்டர்..! ஆர்டர்..! ஆர்டர்...!” என்று ஆர்டர் போட்டு “ஆளாளுக்கு பேசுவதைக் குறைத்து நாங்கள் சொல்லுவதையும் கொஞ்சம் கேளுங்கள்” என்று மாணவர்கள் தலையெடுத்தால் என்ன நடக்கும்? எப்படி இருக்கும்? யோசிக்கவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.. இல்லையா? இத்தாலி நாட்டில் உள்ள பார்பியானா பள்ளியின் எட்டு மாணவர்கள் சேர்ந்து தங்களைப...

ஒண்ட வந்தவர்கள் ஓடட்டும்...

ஒண்ட வந்தது ஊர விரட்டிடும் புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட கழுதையெல்லாம் உள்ள நுழையுது கம்பு எடுக்க வேணும்... கருப்பசாமியும் சுடலைமாடனும் நம்ம சாமி தாங்க- அட பத்ரகாளியும் பட்டாளம்மனும் நம்ம சாமி தாங்க... செல்லாயம்மனும் கூத்தனாட்சியும் நம்ம சாமி தாங்க...- அந்த மாரியம்மனும் மந்தையம்மனும் நம்ம சாமி தாங்க..... கொழவ போடுறோம் கும்மியடிக்கிறோம் நம்ம சாமிக்கு- அட கெடா வெட்டுரோம் கோழியறுக்கிறோம் நம்ம சாமிக்கு...... பொங்க வைக்கிறோம் வத்தி பொறுத்துறோம் நம்ம சாமிக்கு- அட பட்ட சாராயம் பீடி சுருட்டும் படைச்சு வைக்கிறோம் நம்ம சாமிக்கு..... அருவா கத்தி கம்பு இருந்தா நம்ம சாமி தான் - அவாளின் அபிசேகம் உள்ள நுழைஞ்சா நாம் காலிதான்... தொந்தி பெருத்தவன் நூலு போட்டவன் உள்ள நுழையுறான் நம்ம சாமிய நீஷ பாஷையில் ஏதோ வையுறான்... இடத்தப் புடிச்சவன் மடத்தப் புடிக்கிறான் புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட கழுதையெல்லாம் உள்ள நுழையுது கம்பு எடுக்க வேணும்..! தமியன் வீதி இதழ் - ஜூன், 2008