Posts

Showing posts from 2026

சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் : சீனி சந்திரசேகரன்

Image
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என கையொப்பமிட்டு நூலாசிரியரால் அனுப்பப்பட்ட புத்தகம்.  சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் இது நூலில் இருந்து.. பாடம் நடத்துச் செல்லும் பொழுது கோபத்தை வாசலில் நிற்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்குள்ளே செல்லுங்கள். நிறைய சிரிங்க! உடம்புக்கு நல்லது! உங்க மனசுக்கும் நல்லது. வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டிய அடங்கி இருப்பதும் தான் எதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா? ஒரு பக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பதில் நியாயமா?  படம் எழுப்பும் கேள்வி. அடிக்கடி கேட்பதால் மட்டுமே அறதப்பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற எண்ண்ம் எந்த அளவிற்கு தவறான ஒன்று என்பதை விளக்கும் மாணவர்கள் சொல்லும் புரியாத வார்த்தைகள்.. இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசாணை விதிமுறை தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை. கல்வியாளர்களிடம் இருக்கிறது. கல்வி சார்ந்த நூல்களில் இர...

குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்

Image
குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல். நூலிலிருந்து.. அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும். பேய் சாமி எல்லாமே சும்மாச்சும் தான் பாப்பா.. வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு... அம்மாச்சி வீட்டுக்கு போய் எழுத போறேன்னு சொல்லி ஸ்லேடும் நோட்டும் எடுத்து ஒரு பையில  போட்டு கொண்டு போயிட்டாங்க இரண்டு மணி வாக்குல வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துச்சு கட்டம் போட்டு  எழுதி இருந்தது எழுதியது அம்மா.. எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை.. இத இத இத இதெல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈஸியா சொல்றாங்க டீச்சர் எழுதற எங்களுக்கு தானே கையெல்லாம் வலிக்குது குழந்தை டார்வின் கவலை... குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர். வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான். அதிகாரிகள் விசிட் வருவதைப் பற...