Posts

Showing posts from 2017

உலகமயமாதல் கொள்கையை முழுமையாக நிராகரித்தால் தான் அனிதாக்களுக்கு கல்வியும் வேலையும் கிடைக்கும் – கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன்

Image
அமலில் உள்ள கல்வி உரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? அரசியல் உறுதியோடு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. சரத்து 45, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் பதிநான்கு வயதிற்கு உட்பட்டவர் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க அரசு முயல வேண்டும் என்று கூறியது. அதன்படி 1960 ஜனவரி 26க்குள் அவ்விலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால் 1990 ஆகியும் எட்டவில்லை. எனவே உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை அடிப்படை உரிமையென அறிவித்தது. ஆனால் அதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணராது அரசு இருந்ததைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு தழுவிய பல போராட்டங்களை நடத்தினார்கள். இனியும் தள்ளிப் போட முடியாதென்ற நிலையில் நகல் சட்டத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. ஐந்து முறை மாற்றப்பட்டு இறுதியாக 86-ஆம் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசு சட்டங்கள் மூலம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாயிற்று. முழு உரிமையல்ல.. அரசின் விருப்பத்திற்கிணங்க என்ற கட்டுப்பாடுகளுக்...

படிக்க வை.. எழுத வை..

Image
கடந்த மாத இதழில் நான் மாற்றுப்பணிக்காக சென்ற பள்ளியில் ஏற்பட்ட அனுபவத்தைப் புதிய ஆசிரியன் இதழில் பகிர்ந்திருந்தேன்.. அதன் தொடர்ச்சி தான் இதுவும்..  அந்தப் பள்ளியில் வெறும் ஆறு குழந்தைகள் தான்.. வகுப்பு துவங்கும் முன்பு மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. பள்ளி திறந்த சில வாரங்களுக்கு அவர்களுடைய உரையாடலில் சட்டமன்றத் தேர்தல் செய்திகள் நிரம்பியிருந்தன.. ஜெயலலிதா எங்க அப்பத்தா சார்.. கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எங்க தாத்தா சார் என்பான் கோகுல்.. தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் குறித்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. வாக்குச்சாவடிக்காக ஒட்டியிருந்த போஸ்டர்களைக் கிழித்தேன்.. சார் சார்.. ரெட்டலையக் கிழிச்சுடாதீங்க என்பான்.. கல்வி வளர்ச்சி நாளில் காமராசர் தான் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவருன்னு சொல்லிமுடிக்கும் முன்பே சார் அதை எங்கப்பத்தா தான் அஞ்சு முட்டை கொடுக்கணும்னு மாத்துணாங்க என்பான்.. கலைஞரைக் கண்டபடி நக்கலடிப்பான்..  பத்துக்கும் கீழே குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததால் இப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த சத்துணவுப் பணியாள...

வகுப்பறை என்பது பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் இடமாக மாற வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு நேர்காணல்

Image
2017ஆம் ஆண்டினை சாவித்ரிபா பூலே அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் துவங்கியிருக்கிறீர்களே..? ஜோதிபா பூலே மற்றும் அவருடைய இணையரான சாவித்ரிபா பூலே இருவருமே சனாதானக் கொள்கைகளுக்கு எதிராக, பிராமணீய, வேத சமய கட்டுப்பாடுகளுக்கு எதிரான மிகப் பெரியபோராட்டங்களை நடத்தியவர்கள்.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், அவர்கள் இருவரும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து தங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சொன்னது.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், ஒரு பிராமண விதவைப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேற்றப் பட்டபோது அடைக்கலம் கொடுத்ததும் அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாகவே வளர்த்தெடுத்ததும் கூட.. பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்ன காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிக்கூடங்களைத்திறந்தார்கள்.. ஆதிசூத்திரர்களும் சூத்திரர்களும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் பொதுப் பள்ளிகளை நிறுவினார்கள்.. மனுவாதத்திற்கும் வணிகமயத்திற்கும் எதிராக எழுந்தபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க்குரல்கள் தான் ஜோதிபா பூலே...

விடுங்க சார்... திட்டாதீங்க சார்...

Image
கடந்த மே மாதம் கடைசி நாளில்.. ஆஹா நாளைலேருந்து பள்ளிக்கூடமேன்னு பசங்களப் போலவே தயாராவதற்கு நமக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.. அதில் கூடுதல் கஷ்டம் என்னன்னா? நாளை முதல் வேறொரு பள்ளிக்கு மாற்றுப் பணியில் செல்ல வேண்டும் என 31ஆம் தேதி இரவு 9 மணிக்குச் சொன்னார் எங்க தலைமை ஆசிரியர்.... அதுவும் இணை இயக்குநர் உத்தரவாம்... மறுநாள் கொஞ்சம் குழப்பத்தோடும் மனவருத்தத்தோடும் தான் சென்றேன்.. அந்தப் பள்ளியில் மொத்தமே ஆறு குழந்தைகள் தான்.. கோகுல், அனிஸ், ஹரிணி, பவித்ரா மற்றும் இரு பெண் குழந்தைகள்.. கடந்த மாத இறுதியில் எனது பள்ளிக்கு திரும்பிவிட்டேன்.. போன இடத்தில் பல நல்ல அனுபவங்களைத் தந்து அனுப்பினர் அந்தக் குழந்தைகள்.. ஒரு நாள் மூன்றாம் வகுப்பு ஹரிணி மட்டும் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.. சொன்ன எழுத்துப் பணிகள் பலவும் முடிக்காமலே இருந்தது... ஏம்ப்பா, சொல் பேச்சு கேட்க மாட்டியா? ஒரு தடவை சொன்னா புரியாதா?ன்னு ஆசிரியருக்கே உரிய கடும் முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.. மீதி ஐந்து மாணவர்களும் மொத்தமாக வந்தார்கள்.. கோகுல் முதலில் வந்தான்.. நான் என்ன என்று கேட்பதற்குள்ளாகவே.. திட்டா...

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களைப் பாதுகாப்பது எப்படி?

மெட்ரிக் ஆசிரியர்களின் விடுதலை பற்றி டிசம்பர் இதழில் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் எழுதியிருந்தார்கள்.. மெட்ரிக் ஆசிரியர்கள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடம் வழங்கிப் பாதுகாத்திட வேண்டும். இங்கு பணிவாய்ப்பு இல்லாத காரணத்தினால்தான் அவர்கள் அங்கு அடிமைச் சேவகம் செய்கின்றனர்.. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் விடுப்பு விதிகளும் பணிப் பாதுகாப்பும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க நாம் வலியுறுத்துவோமாயின் அவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தானே முறைப்படி நியமனம் செய்யமுடியும்? தற்போது வழங்கி வரும் ஊதியத்தை விட பலமடங்கு கூடுதலான ஊதியத்தை மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நிச்சயம் வழங்க முன்வரப் போவதில்லை.. தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேகம் குறைந்துள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்று பல இலட்சங்களைக் கொடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருக்க பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. எனவே வருமானம் இல்லை என்பதால் அரசு உதவி பெறும் பள்ள...