Posts

நூல் அறிமுகம் : ஊர்வசி புட்டாலியா எழுதிய மௌனத்தின் அலறல் : இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலம்

Image
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்த அறிக்கை 1947, ஜூன் 3ஆம் தேதி வெளிவந்தது. அடையப்பட்ட தீர்வு உண்மையில் ஒரு தீர்வும் அல்ல.. இந்தத் தொடக்கம் ஒரு தொடக்கமும் அல்ல.. கால அவகாசம் போதுமானதில்லை என்றேன். ஆனால் ஜின்னா, நேரு, படேல் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் ஆகஸ்ட்,15க்குள் எங்களுக்கு ஒரு கோடு வேண்டும் என்றார்கள். நான் ஒரு கோட்டைப் போட்டுக் கொடுத்தேன்.. – சிரில் ராட்கிளிப் 1946 மார்ச் முதலாகவே கலவரங்களும் கொலை, கொள்ளைகளும் அரங்கேறின.. பிரதமர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 1947, ஆகஸ்டு 17ல் தான் தலைவர்கள் சந்தித்து குடிமக்களைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேசிக் கொள்கின்றனர்.. அதற்குள்ளாகவே பல இலட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர்.. ஏராளாமானோர் உயிர் இழந்திருந்தனர்.. பெண்களையே மதத்தின் மாண்பாகக் காட்டி பெண்களையே தியாகப் பலிகொடுத்து, பெண்களையே கடத்தி, கற்பழித்து, கொலைகள் செய்து, பெண்கள் உடலே சரித்திரமாக, இரத்த சரித்திரமாக மாறிய கதைகள்.. எந்த சரித்திர நூல்களும் சொல்லாத, சொல்லிவிட முடியாத, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் சந்தித்த, மக்கள் என்றால் இந்த...

நூல் அறிமுகம் : தேசப் பிரிவினைக்கு காரணம் யார் : முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா?

Image
"இந்து அல்லது முஸ்லீம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எதுவாக இருந்தாலும் அவை என்ன செய்தன? இந்துக்கள் அல்லது முஸ்லீம்களில் சாதாரண மக்கள் கிராமங்களின் புழுதியிலும் அல்லது நகரத்தின் சேரிகளிலும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்க ஒரு சிலரை மட்டும் கொழுக்க வைத்தன என்பது தான் சாம்ராஜ்யங்களின் வரலாறு.." - அல்லா பக்ஸ் “இந்துக்களும் முஸ்லீம்களும் இருவேறு மத தத்துவத்தை உடையவர்கள். சமூக பழக்கவழக்கங்களும் அவர்களின் இலக்கியங்களும் வேறுபட்டவை. அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதும் சேர்ந்து உண்பதும் கிடையாது. அவர்கள் இருவேறு நாகரிகங்களைச் சேர்ந்தவர்கள். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. இந்துக்களும் முஸ்லீம்களும் வரலாற்றின் வெவ்வேறு மூலக் கருத்துகளிலிருந்து தமது உத்வேகத்தைப் பெறுகின்றனர். அவர்களின் இதிகாசங்கள் வேறுபட்டவை. அவர்களின் களநாயகர்கள் வேறுபட்டவர்கள். ஒரு சமூகத்தின் களநாயகன் மறு சமூகத்தின் எதிரியாக உள்ளார். அவர்களின் வெற்றியும் தோல்வியும் முரண்பட்டவை. இத்தகைய இரண்டு முரண்பட்ட தேசங்களை ஒரே அரசின் கீழ் இணைக்க முயல்வது மேலும் மேலும் அதிருப்திக்கு தான் வழிவகுக்கும்..” (1940)  “முஸ்ல...

நூல் அறிமுகம் : சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல்

Image
1947ல் க.நா.சுப்ரமணியத்தின் சந்திரோதயம் இதழில் தொடராக வெளிவந்த கதை தான் வாடிவாசல். இது குறுநாவலா, சிறுநாவலா, நெடுங்கதையா என தனி விவாதமே இருக்கிறது. இருந்தாலும் ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது வாடி வாசல் தான். முழுக்க முழுக்க அங்கு நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காட்சிப்படுத்திய வகையில் இந்த நாவலுக்கு என்றைக்குமே தனிச்சிறப்பு உண்டு.. “மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையைக் கண்டுவிட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும். ஒன்று, காளையின் திமிலில் கைபோட்டு அணைந்து, கொம்பு இரண்டையும் கையால் பிடித்து அழுத்தி அது எகிறிவிடாமல் சில விநாடிகளுக்கு நாலு கால்களில் மாடு அசையாமல் நிற்கச் செய்து விட வேண்டும். ஏன், கால்கள் துவளத் தடுமாறி முட்டியிலே மடித்து அது கீழே சரியச் செய்துவிட வேண்டும். இல்லை, அவன் திறமைக்குறைவால் காளையிடம் அவன் வேலை பலிக்காமல் போய்க் கோட்டை விட்டுவிட்டு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை, காலில்லாதவன் மாதிரி முகத்தைக்காட்டிக் கொண்டு காளையை நெருங்காமல் இருந்துவிட வேண்டும். மனிதனு...

நூல் அறிமுகம்: பாடநூல் அரசியல்

Image
புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் த.பரசுராமன் அவர்கள் எழுதிய நூல் பாடநூல் அரசியல். புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வாழ்ந்திருந்தாலும் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் எழுதுவதில் நீண்ட கால அனுபவமிக்கவர். மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கிட்டதட்ட தனது நாற்பதாண்டு அனுபவங்களிலிருந்து சில நேரடி அனுபவங்களைக் கொண்டு இந்நூலை வழங்கியுள்ளார். அவர், தனது முன்னுரையில், இந்த நூலுக்குப் பாடநூல் அரசியல் என்ற தலைப்பைச் சிறிது தயக்கத்துடன் தான் கொடுத்துள்ளேன். பெயரைப் பார்த்ததும் பாடநூலில் இடம்பெறும் கருத்துகள் வெளிப்படுத்தும் அரசியல் குறித்த நூல் எனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். அவ்வாறு பார்க்கவும் இயலும். ஆனால் இந்த நூலில் பாடநூல் எழுதிய மனிதர்கள் தனியாகவோ குழுவாகவோ புரிந்த அரசியல் மட்டுமே பேசப்பட்டுள்ளது என்கிறார். ஆக, மிக முக்கியமானதொரு பணியில் எந்த அளவிற்குச் சிறுபிள்ளைத் தனமாகவும் குறுகிய...

நூல் அறிமுகம்: சி.சு.செல்லப்பாவின் கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்)

Image
சி.சு.செல்லப்பா எழுதிய கூடுசாலை, கள்ளர் மடம், மூணுலாந்தல், வாழ்க்கை, பைராகி, பந்தயம், குற்றப்பரம்பரை, பெண்டிழந்தான், முறைமைப்பெண் ஆகிய சிறுகதைகள், வாடிவாசல் என்னும் நெடுங்கதை, முறைப்பெண் என்னும் நாடகம் ஆகியவற்றின் தொகுப்பு நூல் தான் கள்ளர் மடம் : மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள். சி.சு.செல்லப்பா: சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் தான் சி.சு.செல்லப்பா. ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒவ்வொரு முறையும் விவாதங்கள் எழுகின்ற போதும் வாடிவாசல் நாவலும் நினைவுக்கு வருவதுண்டு. அந்த நாவலை எழுதியவர் தான் சி.சு.செல்லப்பா. பெயரில் சின்னமனூர் என்பதைப் பார்த்ததுமே ஆர்வம் கிளம்பியது. எழுத்தாளர் செல்லப்பாவின் அப்பாவின் சொந்த ஊர் சின்னமனூர், ஆனால் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியின் ஊரான வத்தலக்குண்டுக்கே சென்று விட்டார். 1912ல் பிறந்த செல்லப்பாவின் வாழ்வின் பெரும்பகுதி வத்தலக்குண்டு மற்றும் சென்னையில் தான் கழிந்துள்ளது. மாணவப் பருவத்திலிருந்தே இந்திய விடுதலைக்கான போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். சிறைகளில் இருந்திருக்கிறார். மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்து மற்றும் கருத்து ஒற்...

நூல் அறிமுகம்: மாயி சான் – ஹிரோஷிமாவின் வானம்பாடி

Image
நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்த பிறகு என்னுள் மிக ஆழமாகப் பதிந்த சிந்தனைகளில் ஒன்று போருக்கெதிரான இயக்கங்களில் தீவிர கவனம் செலுத்துவது. ஒவ்வொரு ஆண்டும் ஆக.6,9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினங்களில் அறிவியல் ஆக்கத்திற்கே என்பதை வலியுறுத்தி பேரணி, மனிதச் சங்கிலி இயக்கம் மற்றும் கருத்தரங்குகள்.. 1945ல் நடந்த போர்தானா, இல்லை சமீபத்தில் எதுவும் போர் நடந்ததா என பல நண்பர்கள் ஆச்சரியமாகக் கேட்கும் அளவிற்கு தேனி மாவட்டம் முழுவதும் பெரும் வீச்சாக ஒவ்வொரு ஆண்டும் நடத்துவோம்.. ஆக்கத்திற்கே ஆக்கத்திற்கே அறிவியல் ஆக்கத்திற்கே, மறக்கமாட்டோம் மறக்கமாட்டோம் ஹிரோஷிமா துயரங்களை மறக்க மாட்டோம் மறக்க மாட்டோம் என குழந்தைகளும் ஆசிரியர்களும் வீதிகளில் முழங்கி அணிவகுப்பதை காணும் போதெல்லாம் உள்ளம் சிலிர்க்கும். போருக்கெதிரான இந்தச் சிந்தனையைக் குழந்தைகளிடம் உருவாக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள நூல் தான் மாயிசான். இந்நூலின் ஆசிரியர் தோசி மாருகி. இவர் ஜப்பானின் கொக்கயிடோவில் அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளை விளக்கும் வகையில் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்துகின்றார். அந்தக் கண்காட்சிக்கு அரைகுறை ...