Posts

Showing posts from March, 2023

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : ராஜசேகரன், ஆசிரியர்

வணக்கம் தோழர்.... படிச்சுட்டேன்.. உங்க டுஜக் டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா - இந்த ரெண்டு புஷ்தகத்த படிச்சுட்டேன்.. கீத்தி,புலல்,ஷர்வீன், டார்வின், அபி, அனிருத்,அஜீஸ், யோகா,கலெக்டர் பவுனியா, திவ்யேஷ், பூவினி, சகானா, சிவாணி, யாஷனா, வெனிதாஸ்ரீ தஙக்ச்சி வித்யா, ஜீவனேஷ், சுபிக்ஷா, யோகஸ்ரீ , நந்துசேனா, அம்ரிதா மோடி, ரக்சித், மயூரி, மஞ்சுளா, கவிஸ், ஊமைகுசும்பன் பூங்கதிர், வித்யா, பாரதிராஜா, ரஜினி - இத்துணை காதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தி... வகுப்பறையிலும் வீட்டிலும், குட்டி குட்டி குழந்தைகளுடன் வாழும் உள்ளம்... எல்லாருடைய வீட்டிலும், வகுப்பறையிலும், நடக்கும் எதார்த்த உரைகளை சற்றே இல்லை இல்லை .. ஆழமாக சிந்திக்க தூண்டும் வகையில் எழுதி இருக்கீங்க.. அரிய பொக்கிஷம் ..‌‌.! டுஜக்.. டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா... நூல்களில் குழந்தைகளின் மழலைகளின் சொற்களை கொண்டாடியுள்ளீர்கள்.... சிறப்பு சார்... 👍👍👍 - இராஜசேகரன், ஆசிரியர், தி.கூடலூர்

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம்.. : பிரதீபா

வணக்கம் சார், உங்களது "ஓங்கூட்டு டூணா"- நூலைப் படித்த போது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்ற ஆசை வந்து விட்டது எனக்குள்... நான் சந்தித்த, கடந்து வந்த ஆண் ஆசிரியர்களுள் வேறுபட்டவர் நீங்கள்.. ஆமாம் சார், தாயுள்ளம் கொண்ட தாயுமானவனாய் உணர்கிறேன் யோகா பாப்பாவின் உணர்வுகளை மதிக்கும் அந்தப் பதிவை வாசிக்கும் பொழுது..! ஜனநாயக வகுப்பறை என்பதை வெறும் வாய் வார்த்தையோடு நிறுத்தி விடாமல் செயலில் காண்பித்து உள்ளீர்கள்.. நூலின் ஒவ்வொரு பக்கமும் ரசிக்க வைக்கிறது சார், வாழ்த்துகள்.. உங்கள் வகுப்பறையை கண் முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.. பேரானந்தமாய் உணர்கிறேன். குரங்கை கரையில் சேர்க்கும் பவன்யா, எண்கள் படிக்கும் வித்யா,ஆங்கில வகுப்பில் சுபிக்சாவின் தன்னம்பிக்கையான வார்த்தை வரை பாடப்பொருள் அறிமுகத்திலும் ஜனநாயகமே... மாணவர்கள் உங்களை தன் தந்தையைப் போல் பாவித்து உள்ளார்கள், நீங்களும் அவர்களை உங்கள் குழந்தையைப் போல் பாவித்து உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் எழுத்தே சாட்சி.. வாசிக்கத் தொடங்கி, கடைசி பக்கத்தை முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன்.. இப்படி ஒர...

ஓங்கூட்டு டூணா.! - வாசிப்பு அனுபவம் : மதுரை அமுதா செல்வி

தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா..!  நூலை வாசித்து முடித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. படிக்கும் அத்தனை புத்தகங்களை குறித்த வாசிப்பு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற பேராசை மனதில் எழுந்து கொண்டே இருந்தாலும் சூழல் காரணமாக டைரியில் குறிப்பெடுக்கும் கிறுக்கல்களுடன் மட்டுமே நின்று போகின்றது. அதையும் மீறி இந்த புத்தகம் தரும் வாசிப்பு அனுபவத்தை நாலு பேருக்கு சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆவல் சில நேரங்களில் வலுக்கட்டாயமாக என்னை எழுத உந்தித் தள்ளுகிறது அப்படிப்பட்ட உந்துதலின் காரணமாகவே இதை எழுத தொடங்கினேன் ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிய அனுபவம் வித்தியாசமானது. காத்திருக்கும் கனப்பொழுதுகளில் கூட 4 வரி எழுதிவிட்டு பயணத்தை தொடரும் போது நான் எந்த ரோட்டில் பயணம் செய்தாலும் என் நினைவுக்குள் அந்த குழந்தைகளின் குறும்புகளே நிரம்பி வழிந்தது . மாதங்களை கடந்த பிறகும் மனதை விட்டு இறங்கிச் செல்ல மறுக்கும் அந்த குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அவர்களின் உலகில் வாழ எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. குழந்தைகளோடு பணியாற்ற...

எதிர்பாராத பரிசு - வாசிப்பு அனுபவம் : பா. கெஜலட்சுமி

டுஜக் டுஜக் நூல் முற்றிலும் மாறுபட்ட வகைமையில் குழந்தைகளின் கற்றலை, கற்பனை ஆற்றலை, அவர்தம் ஆழ அகலத்தை, வெகுளித்தனத்தை, படைப்புத் திறனை, எதையும் ரசித்து ஒன்றிவிடும் மனநிலையை, வெறுப்பை சுமக்காத மனநிலையை அவர்தம் மழலை மொழியிலே புத்தகமாக பதிவு செய்திருக்கிறது. ஒரு தந்தையாக குழந்தைகளின் குறும்புகளை ரசித்து கடந்து விடாமல் அதை தினந்தோறும் குறிப்புகளாக முகநூலிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்ததோடு தொகுத்து நூலாகவும் படைத்திருக்கிறார். அந்நூலை வாசித்த உடனேயே பல வாசகர்கள் முகநூலிலும், தம் வலைதளப் பக்கங்களிலும் குறைந்தகால இடைவெளியிலேயே விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் கமலாலயன் முன்னுரையோடு, தமிழ்செல்வன் உள்பட பல ஆளுமைகளும் மற்றும் பல்வேறு பணிகளிலிருக்கும் பொதுதள வாசகர்களின் நூறு விமர்சனங்களைத் தேர்ந்தெடுத்து, அதிலும் பக்க அளவைக் கருதி முக்கிய பகுதிகளை மட்டும் தொகுத்திருப்பதில், என் விமர்சனமும் பதிவாகியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆசிரியர், எதிர்பாராத பரிசாக கருதியதால், இத்தலைப்பிட்டு உள்ளமை, பல புதிய வாசகர்களுக்கும் நூல் வடிவில் தங்கள் எழுத்தை காணும் பேறு 'எதிர்பாராத பரிசாக...

ஓங்கூட்டு டூணா: வாசிப்பு அனுபவம் : மா.காமுத்துரை

கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கள் மண்ணின் மூத்த படைப்பாளி, அன்புத் தோழர் தேனி மா. காமுத்துரை அவர்கள் "ஒங்கூட்டு டூணா.." நூலை வாசித்து விட்டு, தேனி பேச்சு வழக்கிலேயே தன் வாசிப்பு அனுபவத்தை அனுப்பி இருந்தார்.. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. அந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. ############################################################## சுந்தர் கூட டூணா... ஆமா, என்னிய நோகடிச்ச புத்தகத்த அவுரு பாட்டுக்கு எழுதுனா, பழமா வுடுவாங்க. எம்படிப்புத்தான இன்னிக்கிப்பூராம்.. நான் டூணா. இவரோட முந்திய நூல்களான டுஜக் டுஜக், சீமையில் இல்லாத புத்தகத்த படிச்சப்ப என்னமோ மாதரியா இருந்திச்சி.. ஆனா அதச் சொல்ல.. ம்ம்.. என்னா சொல்லன்டு வெளங்கல... ஆமா, என்னமோ இவுரும் இவுரு பிள்ளைகளும் மட்டுந்தே ஊர்ல இருக்க மாதிரியும் வேறு யாருக்கும் பிள்ளைகளே இல்லாத மானிக்கி, ரொம்ப தான் செல்லங் கொஞ்சி எழுதியிருப்பாரு. அன்னிக்கே சுந்தர் கூட மனசுக்குள்ளயே டூணா விட்டுட்டேன்.. ஆனா இந்த "ஓங்கூட்டு டூணா" புஸ்தகம் வாத்யாருக்கும் க்ளாஸ் பிள்ளைகளுக்குமான பேச்சு. உம்மயச் சொ...

ஓங்கூட்டு டூணா: வாசிப்பு அனுபவம் : சக.முத்துக்கண்ணன்

சுந்தர் வீட்டிலிருந்து வகுப்பறைக்கு வந்திருக்கிறார். அதே டுஜக் டுஜக் பாணிதான் ஆனால் இது வகுப்பறைக் குழந்தைகள். டார்வினும் புகழ்மதியும் சுந்தரின் பிள்ளைகள் மட்டுமில்லை; டுஜக் நூலினை வாசித்த பலருக்கும் உறவாகியிருந்தார்கள். டுஜக் டுஜக் சுந்தர் எழுத்தின் மிகச்சிறந்த அடையாளம். அது ஒரு முன்மாதிரி வகைமை. ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்காக எழுதி வைக்க அப்படியொரு டைரியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாய் வந்த சீமையில் இல்லாத புத்தகம் டுஜக்-கின் இரண்டாம் பாகம் போல வந்திருந்தது. இப்போது "ஓங்கூட்டு டூணா...!" - வகுப்பறைக் குறிப்புகள். குழந்தைகளுக்கும் தனக்குமான உரையாடலை தொடர்ந்து எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் என்பதை அறிய முடிகிறது. இதுவரை தொடக்கப்பள்ளி வகுப்பறை அனுபவங்களை யாரும் தொகுப்பாக எழுதி வெளியிட்டது போலத் தெரியவில்லை. இப்படித் தொடங்கி வைத்திருப்பதை ஒரு கல்வி சார் செயல்பாட்டாளனாக வரவேற்கிறேன். இது வேண்டும். பலரால் இதுபோல தொடர்ந்து எழுதப்பட வேண்டும். ஈரச் சிலேட்டைக் காய வைக்க ஒரு மந்திரம் சொல்கிறார்: ''அம்மா சட்ட காஞ்சுக்க அப்பா சட்ட காயாத தாத்தா சட...

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : இரா. தெ. முத்து

தொடக்கப்பள்ளி பால்வாடி மாணவர்கள் உடனான அனுபவங்களை சின்ன சின்னதா எழுதி இருக்கிறார் வாத்தியார் தேனி சுந்தர். அபி சொல்லும் கதையைப் படிக்கையில் நூல் முழுவதும் வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியது. அப்படி என்ன சொன்னாள் அபி? அபி சொன்ன கதையில சிங்கத்துக்கும் மாட்டுக்கும் சண்டை... மாட்டோட கொம்பு வானம் அளவிற்கு பெரியது. மாடு முட்டியதால் சிங்கம் வானத்தில் பறந்து போய் விழுகின்றது. அப்படி என்றால் மாடு என்னா வேகத்தில் முட்டியிருக்கும் என அடுத்த வரியை வாசித்தால் மாடு செத்துப் போச்சு என பொசுக்கென்று கதையை முடிக்கிறாள் அபி. இந்த இடம் ரொம்ப முக்கியமான இடம்.. வானம் உயரத்திற்கு கொம்பு இருந்த மாடு, தான் முட்டியதால் வானத்தில் பறந்து போய் விழுந்த சிங்கம் அல்லவா செத்துப் போயிருக்க வேண்டும்? இப்படி சின்னச் சின்ன கவிதை போன்ற வடிவத்தில், பால்வாடி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களோடு கற்ற அனுபவங்களை வகுப்பறை டயரி குறிப்புகளாக ஓங்கூட்டு டூணா எனும் சிறுவர்களுக்கான அறிதல் நூலை கொண்டு வந்திருக்கிறார் தேனிசுந்தர்.. தேனி சுந்தர் சாருக்கு வாழ்த்துகள்; நன்றிகள். நூலை எழுத ஆர்வத்தை உருவாக்கிய பேராசிரியர் மாடசாமி சா...

ஓங்கூட்டு டூணா..! : வகுப்பறை அலப்பறை – து.பா.பரமேஸ்வரி

Image
இலக்கைத் தொலைத்த வகுப்பறைகளும் இருப்பையே தொலைத்த குழந்தைகளும் மறந்து போன மந்திரம்…! அதுவே “ஓங்கூட்டு டூணா” என்ற ஒற்றைத் தாரக மந்திரம். செல்லக் கோபங்களுக்கும் அதைப் பரிமாறிய பின்பாக முட்டிக் கொள்ளும் கண்ணீர் குமிழிகளுக்கும் இடையிலான பாலம். நீரில் எழுதிய எழுத்து போல…. முடிக்கும் முன்னமே கரைந்து விடும்…காற்றில் அடித்து செல்லும் புழுதிபோல கலந்து விடும் அவர்களின் வெள்ளை அன்பின் வளிவெளியில்.. கணநேரம் காணாமலே போய் விடும். “ஓங்கூட்டு டூணா” எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின் அன்றாடம் தரிசிக்கும் வகுப்பாலயத்தின் மூலவர்களான பிள்ளைத்தெய்வங்கள் தனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களையும், நிதம் அர்ச்சிக்கும் அபிஷேக விசேஷங்களையும், பாராயணம் செய்யும் ஜெபங்களையும், வழிபாட்டுத் துதிகளையும் சேகரித்து கவின் உலகின் மழலைக் காவியமாகப் நமக்கு வழங்கியுள்ளது. வகுப்பறை வாசத்தைப் பள்ளிப் பருவத்தில் தொலைத்த வாசகருக்கு மீண்டும் மாணவர்களாகப் பயணிக்கும் தம்மை இவர்கள் மத்தியில் தேடவும் ஒரு வாய்ப்பாக நினைவாலயத்தின் அருங்காட்சியகமாக இந்நூல் திகழ்கிறது. குழந்தைகளைப் பற்றி எழுத பெரிதாக என்ன தெரிந்திருக்க வேண்டும். பாரட்டும் அளவிற்கு...