Posts

Showing posts from April, 2025

பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! : உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்பத் தப்பு சார் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்

Image
பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! கஸ்தூரி ரெங்கன் கமிட்டி தயாரித்த தேசியக் கல்விக் கொள்கை வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்ட்டது. குழந்தைமைப் பருவத்தின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிக்கை வரையறுத்துள்ள சில கோட்பாடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்பதை சாதாரண வாசகன் கூட புரிந்துகொள்ள முடியும். ஆறு வயதுக்குள் குழந்தைகள் 85 விழுக்காடு மூளைவளர்ச்சி பெறுகிறார்கள் (பக்கம் 19) என்று கண்டுபிடித்திருக்கிறது அறிக்கை. இது இயற்கையியல் பரிமாணக் கோட்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. எந்த அறிவியல் ஞானத்தின் வழியாக இந்த “உண்மை” கண்டுபிடிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆரியக் குழந்தைகள் அந்த இலக்கை எட்டி இருக்க முடியும். அதுவும் கூட முழுமையானது அல்ல. ஏனென்றால் குருகுலக் கல்வி கற்பிக்கப் பட்ட காலத்திலேயே ஒரேவிதமான ஞானத்தைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கான சில கிராமியக் கதைகள் உண்டு. வாழ்வியல் சூழலும் அனுபவமும்தான் மூளைவளர்ச்சிக்கான கிரியா ஊக்கிகள். இதை கல்வியாளர் தேனிசுந்தர் இந்தப் புத்தகத்தில் மி...

திட்டமிடாத வகுப்பறைகள் குறித்து கவிஞர் விஜயராஜ் காந்தி

Image
மாணவர் மைய வகுப்பறை என்பது பல நேரங்களில் திட்டமிடாத ஒரு வகுப்பறை எப்படி இருக்குமோ அதை கண் முன் கொண்டு வந்து சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு வகுப்பறையை நாம் கண்டிருக்கலாம், கண்டும் காணாது சென்றிருக்கலாம், அல்லது காணாமலே விட்டு இருக்கலாம். இங்கு திட்டமிடாத வகுப்பறைகள் எப்படி இருக்கும் என்பதனை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் தேனி சுந்தர் அவர்கள். தான் முதலில் பணியாற்றிய பள்ளிகளில் உள்ளவற்றை தவிர்த்து தற்பொழுது பணியாற்றும் பள்ளியில் எங்கனம் திட்டமிடாத வகுப்பறைகள் இருந்தன என்பதனை தேனி சுந்தர் எழுத்தில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. கலைப் பண்பாட்டுத் திருவிழா தொடக்கப் பள்ளியில் என்ன மாறலை உண்டு பண்ணும் என்ற கேள்வியை நடத்துவதற்கு முன் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்வது உண்டு. அந்த கேள்விகளுக்கு பதிலாக சேட்டைகள் செய்யும் மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஒரு நல்வாய்ப்பாக கலைப் பண்பாட்டுத் திருவிழாவை பயன்படுத்தினர். இதனை திட்டமிடாத வகுப்பரையில் தான் காண முடியும். மாறுவேட போட்டி, பல குரல் போட்டி, காகித கூழ், களிமண் போன்றவற்றில் பொருட்களை செய்து கொண்டு வரும் போட...

நட்சத்திரக் குழந்தை நூல் குறித்து தருண்

Image
நட்சத்திரக் குழந்தை நூல் அறிமுகம்  

"உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" : எம்.ஜே.பிரபாகர் அவர்களின் வாசிப்பு அனுபவம்..

Image
"சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு பிடிக்காத பாடம் கணக்கு" கணக்கு பாடம் படிக்கக்கூடாது என்ற நிலையில் பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தவர், பிளஸ் டூ முடித்தவுடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியில் சேருகிறார். 19 வயதில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்குகிறார். பயிலும் மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் போது ஆசிரியருக்கு கடுகடுப்பும் கோபமும் ஏற்படுகிறது. அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட போது புதியபாதை தோன்றுகிறது. ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை, துவக்க நிலை வகுப்புகளில் கற்புக்கும் போது மிகவும் அன்புடன் கற்பிக்க வேண்டும் என்று என்பதை புரிந்து கொள்கிறார். அறிவியல் கருத்தரங்கில் கற்றுக்கொண்ட சிறு சிறு பயிற்சிகள் மூலம் கணக்குகளை மாணவர்களுக்கு எளிய வகையில் கற்பித்து புரிய வைக்கிறார். மாணவர்கள் கணக்கை புரிந்து கொண்டார்கள் என்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார். கணக்கு பாடம் நடத்தும் போது மாணவர்களை ஒருபோதும் விரட்டுவதும், மிரட்டுவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். தொடர்ந்து மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை இனிக்கும் பாடமாக மாற்றுகிறார். அவரது அனுபவத்தை மற்றவர்களுக...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : இந்து தமிழ் நாளிதழ் பதிவு

Image
என்னுடைய நூல்கள், புதிய இலக்கிய வடிவம் கொண்டவை என சான்றளித்துள்ள தமிழ் இந்து நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. இந்து தமிழ் நாளிதழ் பதிவு : மாயா பஜார்

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : பெ.விஜயராஜ் காந்தி

Image
தேனி சுந்தர் எழுதிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன என்ற நூல் கிடைக்கப்பெற்றேன். நூலில் புகழ்மதி மற்றும் டார்வின் இருவருடன் நாம் பேசி பழகி உறவாடி மகிழ்ந்தது போல் ஒரு உணர்வு. ரோட்டில் கிடக்கும் எலுமிச்சம்பழம் மூலமாக பேய், சாமி இரண்டும் சும்மாச்சுக்கும் என்பதை புகழ்மதி எவ்வளவு அருமையாக எடுத்துரைக்கிறாள். அபாரம். (பக்கம் 22) விலங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற வாக்கியத்தை புரிந்து கொள்வதற்கு குழந்தைகள் தயாராக இருக்கிறார்களா என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய அறிவை புகுத்துகிறோம் என்ற பெயரில் எதையாவது சொல்ல அவர்கள் ஏப்பா நீயுமா குரங்கா இருந்த என்ற கேள்வி உடனடியாக நம்மை நோக்கி வரும். ஜாக்கிரதையாக நாம் பதில் சொல்ல வேண்டும். சிறு வயது குழந்தைகள் பெற்றவர்களின் பேச்சை கேட்பதில்லை என்று யார் சொல்வது... நம்மைப் போலவே அவர்கள். ஆம். செல்லை வச்சிருந்தா நாம் உடனடியாக கடைக்கு கிளம்புவோமா... (பக்கம் 60). எல்லா நட்சத்திரங்களும் நம்மளவே பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று குழந்தைகள் சொல்லும்பொழுது நாம் குழந்தையின் வாயைப் பார்ப்போம். இது இயல்பு. ஆனால் குழந்தையாக நாம் மாறும்பொழுது அனைத்த...

குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பவள விழா ஆண்டு : இந்து தமிழ் கட்டுரை

Image
நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ்  

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : நூல் குறித்து ஐயா குழ.கதிரேசன் அவர்கள்

Image
அன்பு நண்பருக்கு வணக்கம். தாங்கள் அன்புடன் அனுப்பிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன நூல் கிடைத்தது, படித்து மகிழ்ந்தேன்.  தாங்கள் குழந்தைகளோடு குழந்தையாகி, அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து, அவர்கள் மழலை மொழியில் உதிர்க்கும் அற்புதமான, கள்ளங்கபடற்ற கவிதை வரிகளை, உரையாடலை அப்படியே படம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, குழந்தைகளின் உரையாடலுக்குச் சிறந்த வடிவம் தந்துள்ளது பாராட்டுக்குரியது. குழந்தைகளுக்காகவே, குழந்தை இலக்கியத்துக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு விட்டீர்கள் என்பதே உண்மை. புதுப்புது சிந்தனைகள், புதுப்புது வடிவங்கள் தங்களை அடையாளப் படுத்துகின்றன. தங்கள் குழந்தைகளின் கற்பனைத்திறன் அபாரம். ஏ.டி.எம்.மில் யாருமில்லாத நேரத்தில் அவசரமாகப் பணம் எடுத்தும் வரும்போது “என்னப்பா, களவாண்ட்டு வந்து விட்டாயா?” என்று கேட்ட பொழுது, அதை எங்கள் வீட்டுக் குழந்தையாகப் பாவித்து வீட்டில் எல்லாருமே சிரித்து விட்டோம். தாங்களும் அதன் இயல்பான, நகைச்சுவையான கேள்வியை, மிக அழகாக அனைவரும் உணரும் படி உரையாடலைப் படம் பிடித்துள்ளது அதைவிடச் சிறப்பாகும். குழந்தைகளின் கேள்விக்குப் பொறுமையாகப் பதில...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்

Image
கற்றுக் கற்பிப்பதா..? கற்பித்துக் கற்பதா..? - ஓர் அழகிய உரையாடல்... ”மக்களிடம் போ:; மக்களிடம் கற்றுக் கொண்டு மீண்டும் அதை மக்களுக்கே கற்றுக் கொடு.” என்பது அரசியல் யதார்த்தவாதத்தின் முக்கியப் பாடக்குறிப்பு. இந்தத் தத்துவ அடித்தளத்தைக் கல்விப் புலத்தில் செயல்படுத்தும் முறையைத் தனது சிந்தனை ஆற்றலாலும் செய்முறைக் கற்றலாலும் குழந்தைகளுடனான உரையாடலாலும் அமல்படுத்தும் தாத்பரியத்தை நிறுவியிருக்கிறார் குழந்தமைக் கவனிப்பாளரான தேனிசுந்தர். பள்ளிக்கூடம் என்பது படித்தறிந்த ஆசிரியர்களளால் இளங்குழந்தைகளை சமூக மனிதர்களாக வடிவமைக்கும் இடம். படிப்பிக்கும் ஆசிரியர்களைப் போலவோ அவர்களைத் தாண்டியுமோ குழந்தைகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உளவியல் திட்டத்தை மையமாகக் கொண்டு இயங்குகி\ன்றன பள்ளிகள். கற்றறிந்த அறிஞர்களால் வடிவமைக்கப் பட்ட பாடத்திட்டம் குழந்தைகளுக்குள் புகுத்தப் படுகிறது. 1835ல் ஆங்கிலக் கல்வியாளர் மெக்காலே வடிவமைத்த கல்வித் திட்டம் இன்றளவும் போதிக்கப் பட்டுக்ம்கொண்டிருக்கிறது. அவ்வப்போது பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப் பட்டாலும் அடிப்படை ஒன்றுதான். கல்வி என்பது மனப்பாடம் செய்து ஒப்பிக்க...