பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! : உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்பத் தப்பு சார் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்
பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! கஸ்தூரி ரெங்கன் கமிட்டி தயாரித்த தேசியக் கல்விக் கொள்கை வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்ட்டது. குழந்தைமைப் பருவத்தின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிக்கை வரையறுத்துள்ள சில கோட்பாடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்பதை சாதாரண வாசகன் கூட புரிந்துகொள்ள முடியும். ஆறு வயதுக்குள் குழந்தைகள் 85 விழுக்காடு மூளைவளர்ச்சி பெறுகிறார்கள் (பக்கம் 19) என்று கண்டுபிடித்திருக்கிறது அறிக்கை. இது இயற்கையியல் பரிமாணக் கோட்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. எந்த அறிவியல் ஞானத்தின் வழியாக இந்த “உண்மை” கண்டுபிடிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆரியக் குழந்தைகள் அந்த இலக்கை எட்டி இருக்க முடியும். அதுவும் கூட முழுமையானது அல்ல. ஏனென்றால் குருகுலக் கல்வி கற்பிக்கப் பட்ட காலத்திலேயே ஒரேவிதமான ஞானத்தைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கான சில கிராமியக் கதைகள் உண்டு. வாழ்வியல் சூழலும் அனுபவமும்தான் மூளைவளர்ச்சிக்கான கிரியா ஊக்கிகள். இதை கல்வியாளர் தேனிசுந்தர் இந்தப் புத்தகத்தில் மி...