Posts

மாணவர் மனசு நூல் அறிமுக நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி  

பூமிக்கு யார் சொந்தம் : செ.கா.வின் நூல் குறித்து

Image
யதார்த்தத்தின் வியப்பு.. ஈரோடு சென்னிமலை நண்பர் செ.கா.வுடன் ஒரு பத்தாண்டு கால பழக்கம் இருக்கும். வாசிப்பு மற்றும் பயணத்தில் மிக ஈடுபாடு கொண்டவர். வாசிப்பிற்கான பயணம், பயணத்திற்கான வாசிப்பு - இரண்டும் தான் செ.கா. செய்யும் பணிகளை வெறும் அடையாளத்திற்காக மட்டும் அல்லாமல் அர்த்தப் பூர்வமாக, ஆழமாக எடுத்துச் செய்யக் கூடியவர். அவருடைய அறிவியல், சூழலியல் மற்றும் பரிணாமம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு "பூமிக்கு யார் சொந்தம்?" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. வழக்கமாக, பூமி யாருக்கு சொந்தம்? பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது தானே? இயற்கை என்பது மனிதனையும் உள்ளடக்கியது தானே? என்றெல்லாம் பேசி இருப்போம். கேட்டு இருப்போம். பூமிக்கு யார் சொந்தம்? என்கிற தலைப்பே சிந்திக்க வைப்பதாக இருந்தது. பல்வேறு விதமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாசித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அவற்றை ஒருசேர வாசிக்கும் போது புதிய அனுபவமாக அமைந்தது. சிறுத்தை, பெருஞ்சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலிகள் தொடர்பான கட்டுரை ஒன்றிய அரசு மேற்கொ...

கலிலியோ மண்டியிடவில்லை – தேனி சுந்தர்

Image
“அறிவியலின் வரலாற்றைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். மதம் எந்த அளவு அறிவியலை ஒடுக்கி இருக்கிறது என்பதை அறியும் போது மனம் தாளாத வேதனை அடைகிறது. அறிவியல் அறிஞர்களின் மறைக்கப்பட்ட வேதனைகளும் விம்மல்களும் அதிகார அடக்குமுறைகளும் அடங்கிய பெரும் மானுட ஆவணமாகவே அறிவியலின் வரலாறு இருக்கிறது. அறிவியல் பயன்பாடுகளை தினசரி வாழ்வில் உபயோகித்து பழகிய நாம் அதன் பின்னுள்ள மனித அறிவின் வியப்பான சாதனைகளை, போராட்டத்தை அறிந்து கொள்ளவே இல்லை. எனது கட்டுரைகள் அறிவியலின் நம்பிக்கைகளை ஆராய்கிறது. இலக்கியத்திற்கும் அறிவியலுக்கான நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுதலை முதன்மைப் படுத்துகிறது” என எஸ்.ரா. அவர்கள் எழுதியுள்ள முன்னுரை வரிகள் தான் நூலின் பிரதானம்.. கலிலியோவின் சிறுவயதில், ஆண்கள் மேம்பட்டவர்கள் என்பதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான பற்களை இறைவன் படைத்துள்ளார் என ஒரு மதபோதகர் கூறுகிறார். பெரியவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அதை அப்படியே நம்புகிறார்கள். பிறருக்கும் போதிக்கிறார்கள். ஆனால் சிறுவயது கலிலியோ அதை அப்படியே நம்பவில்லை. தாமறிந்த பெண்கள் அனைவரையும் வாயைத் திறக்க சொல்லி பற்களின் எண...

எது சிறார் இலக்கியம் : தொடரும் விவாதம் - தேனி சுந்தர்

Image
 நன்றி :   இந்து தமிழ் நாளிதழ்

சொல்வதும் கேட்பதும்தான் கற்றலா ?

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் : கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்ச்சி

மகாத்மா காந்தியை பேசும் புத்தகங்களுடன் தேனி சுந்தர்

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்வு

உள்ளுட்டேன் சார்..! - பேரா ச.மாடசாமி

தனித்து நிற்கும் ஆசிரியரை அல்ல.. கண்கள் எப்போதும் தேடுவது… கலந்து நிற்கும் ஆசிரியரை- குழந்தைகளோடு கலந்து நிற்கும் ஆசிரியரை! அப்படி நாங்கள் தேடிக் கண்டுபிடித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் - தேனி சுந்தர். இவர் மொழி, சிந்தனை, செயல் ஒவ்வொன்றிலும் கல்விக்கான வேரைக் காண்கிறோம். குழந்தைகளின் மொழி - இலக்கியம் ஆனது இவரால்... குழந்தைகள் சொல்லும் டுஜக் டுஜக்கை இசைத் துணுக்குகள் என்றவர் இவர். ‘காக்காச்சி அங்கக்கு’க்கு டிக்சனரியில் அர்த்தம் இல்லை. சுந்தரின் எழுத்துலகில் அர்த்தம் இருக்கிறது. ‘இந்த மாடு பேரு என்னப்பா?’ என்று குழந்தை முன்வைத்த கேள்விக்குப் பெரியவர்கள் உலகில் விடை இல்லை. நெகிழ்வான உலகம் முன்வைக்கும் கேள்விக்கு இறுகிய உலகத்தில் விடை கிடைக்குமா? குழந்தை உலகில் பயணிக்க நம் அதிகாரம், அகங்காரம் இரண்டையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும். அது ஒரு வாய்ப்பு. மீண்டும் அந்த வாய்ப்பு ‘ஓங்கூட்டு டூணா’வில் கிடைத்தது. வெளியே வேறொருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுந்தர் சார்! சுந்தர் சார்!’ என்று குழந்தைகள் கூப்பிடுகின்றனர். வகுப்பறையில் நிலவும் இந்த சுதந்திரம் அழகானது; அபூர்வமானது. நான் மிக ரசித்...