Posts

மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம் : சரவண ஸ்ரீ

Image
கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு… இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம்.. இந்த நூல் 16 கட்டுரைகளை கொண்டுள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு நூல் விலை : 70 ரூபாய்..  நான் புத்தகம் படித்து முடித்தவுடன் தோன்றியது என் மனதில் புத்தகத்தின் விலை குறைவு இப்புத்தகத்திற்கு இன்னும் எவ்வளவும் கொடுக்கலாம். சிரிப்பு போலீசு….. பெரும்பான்மை கிராமபுற பள்ளிகளில் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு நுளையும் போதே இன்று பள்ளியின் நிலை எப்படி இருக்குமோ? என்று மனதில்ஓடும். … இதில் குற்றவாளிகளை கண்டறிந்து…. சிரிப்பு போலீசாக படிக்கும் போதே நாங்களும் ஆகிட்டோம். சாரு பயந்துட்டாரு….. இதில் சீக்கிரம் வாங்க சார்…பயமுறுத்திட்டுப் போயி உக்காரணும் கால் வலிக்குது….இப்படி சொல்லும் ஆசிரியர் குழந்தைகளின் உறவை விட வேறு என்ன வேண்டும்? டும் டும் டும்……..வாசிக்கும் போதே குழந்தை போல் மகிழ்ந்தேன். மாணவர் மனசு வாசிக்கும் போதே எனக்கும் ஒரு போன் வேண்டும் என்று எழுதிப் போட தோன்றியது .எனது வகுப்பறையிலும் மா...

வானியல் உரையாடல் : கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மே மாதம் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்வின் ஒரு பகுதியாக    வானியல் உரையாடல்

மாணவர் மனசு நூல் குறித்து : கௌசல்யா, ஆசிரியர்

Image
ஹைக்கூ கவிதை போல காட்சிகளை கண்முன் நிறுத்தும் குட்டிக் குட்டி கட்டுரைகளின் தொகுப்பை தந்த தேனி சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. நாம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏதோ ஒரு புத்தகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் என்பார்கள் . பல பள்ளிகளின் பிரச்சனை சிரிப்பு போலீஸ் காட்சி பகுதியில் ஒளிந்து உள்ளது. மாணவர் மனசு மட்டுமல்ல ஆசிரியர் மனசையும் பிரதிபலிக்கிறது இந்த புத்தகம் . புத்தகம் வாசிக்க பெரிதும் விரும்பாத ஆசிரியர்களுக்கு கூட ஆர்வத்தை தூண்டும் நூல் இது. எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படுத்தாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அருமையான தலைப்பின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன .ஓவியங்களும் மிக அருமையாக உள்ளது. அதிலும் காமராஜர் பாயாசம் குடிச்சாரு கட்டுரையின் ஓவியம் மிகவும் சிறப்பாக உள்ளது. கட்டுரை ஆசிரியர் தன் மனதில் இருக்கும் பல ஆயிரம் காட்சிகளுள் நமக்கு இந்த தொகுப்பு மூலம் 16 காட்சிகளை மட்டும் தொகுத்து வைத்துள்ளார். துறை ரீதியாக தினம் தினம் நாம் பார்ப்பதை கவனிப்பதை கேட்பதை அப்படியே துல்லியமாக வார்த்தைகளால் வடித்ததால் என்னவோ புத்தகத்தை படித்து மு...

மாணவர் மனசைப் புரிந்து கொள்ள உதவும் இலக்கியப் பெட்டி : ச.தமிழ்ச்செல்வன்

Image
 நன்றி : செம்மலர் இதழ், மே.2024

ஆசிரியரின் மனதை வெளிப்படுத்தும் – மாணவர் மனசு! - மு.தமிழ்ச்செல்வன்

Image
எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ‘மாணவர் மனசு“ என்ற நூலினை வாசித்தேன். மாணவர் மனசை மிக எளிதாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவர் கட்டுரைகளாக எழுதியவைதான். இதிலுள்ள கட்டுரைகளை முகநூலில் ஏற்கனவே வாசித்திருந்ததால் மீள் வாசிப்பு செய்ததை போன்றே உணர்ந்தேன். இந்தக் கட்டுரை தொகுப்பை பாரதி புத்தகாலயம், புக் ஃபார் சில்ரன் வெளியீடாக இவ்வாண்டு வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு நிறைய பொறுமையும் நிதானமும் தேவை என்பதை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிய முடிகிறது. மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள தனித்த அணுகுமுறை தேவைதான். அது அன்பும் அரவணைப்பும் கலந்த, கண்டிப்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டியதாக இருக்கிறது. அதோடு மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு கீழ் இறங்கி பேசி, அவர்களின் உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரு...

பள்ளிக் குழந்தைகளின் உலகத்தை அறிந்து கொள்ள... : மாணவர் மனசு

Image
அரசு பள்ளி ஆசிரியரான நூலாசிரி யர் தேனி. சுந்தர், தனது பள்ளி மாணவர்களிடம் கற்றுக் கொண்ட பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே இந்நூல். 16 தலைப்புகளில் ஒவ்வொரு சம்ப வத்தையும் மாணவர்களின் மொழியில் மிக அற்புதமாக நூலைச் செதுக்கி உள்ளார்.  வகுப்பில் மாணவர்களோடு மாணவராக வலம் வருகிறார். கல்வித்துறை உயர் அதிகாரி கள் வரும்போது அதிகாரிகளுக்கே அதிகாரி யாகவும் மாறிவிடுகிறார். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மாணவர்களிடம் அன்பாக பேசி வினாக் கள் எழுப்புவதில்லை. மாறாக அதிகாரத்துடன் கேள்வி கேட்பதை சுட்டிக்காட்ட தயங்க வில்லை நூலாசிரியர். குழந்தைகளின் மொழியில் வினாக்கள் எப்படி எழுப்புவது? என்பதை உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு இவரது மாணவர்கள் பாடநூல்களை மட்டுமல்லாது பல பொது அறிவு விஷயங்களை கற்று அறிந்து கொண்டு வருகின்றனர் என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.  அதிகாரிகள் உங்கள் அப்ரோச் மிகவும் அருமையாக உள்ளது என நூலாசிரியருக்கு பாராட்டு சொல்வது அருமை. மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்குக் கொண்டு வரும் தின்பண்டங்களை மற்றொரு மாணவர் வகுப்பறையில் திருடி தின்ற சம்பவத்தை திரையில் பார்க்கும் அளவுக்க...

வீரிய விதை : மாணவர் மனசு நூல் குறித்து பேரா.கம்பம் புதியவன்

Image