Posts

சீமையில் இல்லாத புத்தகம் – நூல் குறித்து து.பா.பரமேஸ்வரி

Image
மனிதன் மொழியை இயற்கையிடமிருந்து கற்றான். பறவைகளின் கிறீச்சல்கள் பூச்சிகளின் ரீங்காரங்கள் காற்றின் அசைவு இலைகளின் இசைவுமழையின் ஓசை இடியின் மொழி அருவியின் சலசலப்பு என மொழிகளின் ஜீவிதம் இப்புவியில் தோன்றும் முன்னம் மனித உணர்வின் வெளிப்பாடுகளும் பரஸ்பர அறிவுறுத்தல்களும் இப்பேரண்ட படைப்புகளின் வழியே உதயமானது. தொடர்ந்து சப்த லயங்களும் குரல் ஓசைகளும் நாவின் சுழல்களும் மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சாதனங்களாகத் திகழ்ந்தன. சுற்றுச்சூழலின் வகைமைக்கேற்ப தட்பவெப்ப மாறுதலுக்கேற்ப மனிதக் குழுக்களின் ஒன்றிணைந்த பரிபாஷ சௌகரியங்கள் ஆங்காங்கே கவரப்பட்ட பல்லுயிர்களின் பரிபாலனங்களை உள்வாங்கியும் என மொழிகளின் ஜனனம் என்பது மனிதகுல பரிணாமத்தின் பரிமாண வளர்ச்சி, மொழி உற்பத்தியான வரலாறு. அதே போல் ஒரு குழந்தை தனக்கான மொழியை முதன்முதலில் யாரிடம் கற்கிறது என்று ஆராய்ந்தால் படைப்பின் இயற்கை வழியாக என்பது ஒருபுறமிருந்தாலும், பிற உயிர்களுக்கு தன்னியல்பாக வெளிப்படும் குரலதிர்வு அவற்றின் தாய்வழி மொழி மனித குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை ஆதலால் தேவையின் பொருட்டு தமது அழுகையில் வெளிப்படுத்துவதும், நிறைமையை தமது பொ...

கவிஞர் இதயநிலவன் எழுதிய ”ஓரெண்டே ரெண்டே ..” நாவல் குறித்து

Image
தேனி, படைப்பாளிகளின் மண். படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லாத மண். எழுத்தின் அத்தனை வித வகைமைகளுக்கும் “இதோ எங்களிடம் ஆள் இருக்கிறார்..” என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் மாவட்டம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக கவிஞர், குறும்பட இயக்குநர், திரைக்கதை, சிறுகதை எழுத்தாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமைகளில் வெளிப்பட்ட எங்கள் ஆசிரியர், தோழர் இதயநிலவன் அவர்கள் இந்த நூலின் மூலம் நாவலாசிரியர் என்கிற புதியதொரு அவதாரம் எடுத்திருக்கிறார்.. கதையில் இரண்டு பிரச்சினைகள் தீவிரமாகப் பேசப்படுகின்றன. இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையில் நின்று போராடுபவளாக கவிதா டீச்சர். முதலாவது பிரச்சனை குடும்பத்தில், இரண்டாவது பிரச்சனை ஆசிரியர் பணியில், பள்ளியில், கல்வியில்.. குழந்தையின்மை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை, சங்கடங்களை கவிதா மிகச் சிறப்பாகவே எதிர்கொண்டு கடந்து வந்தாலும் கூட காலம் அவளுக்கு அடுத்தடுத்த தடைகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. காலப்போக்கில் பிரச்சனைகள் அவளது வாழ்வில் இயல்பான அங்கமாக மாறிவிடுகின்றன. தைரியமாக அவற்றைச் சந்திக்கும் மனநிலைக்கு கவிதா தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள்.. ...

அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்

ஒரு ஊரில் மாறன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கதை கேட்காமல் தூக்கம் வராது. ஒரு நாள் அவங்க அம்மா தூங்கிட்டதால அப்பா தான் கதை சொன்னார். அப்போ ஒரு கேள்வி கேட்டார். அவர் என்ன கேள்வி கேட்டார்ன்னா, அவங்க வீட்டு ஹால்ல ஒரு பெரியார் போட்டோ இருந்தது. அதைப் பத்தி கதை சொன்னார். அவர், பெரியார் பத்தி விசயங்களை சொன்னார். என்னவென்றால் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ஹால்ல ஒரு நிழல் தெரிந்தது.  பெரியார் நிழல் தான். அப்போ அதைப் பார்த்து அங்கே போனான்.. ஐ.. பெரியார்..! அப்பா, இங்கே பாருங்க, பெரியார் தாத்தா..! அவரும் வந்து பார்த்தார்.. அட, ஆமா.. பெரியார் தாத்தா தான்.. மாறன் அவங்க அப்பாவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது. பெரியார் தாத்தா சொன்னார், பேரா, ஏங்கூட வா.. சில விசயங்கள் சொல்றேன் என்றார். அப்போ அவர் கையில் ஒரு தடி வைத்திருந்தார்.. அதை வைத்து ஒரு மினி ஜெட் உருவானது.. அதில் ஏறிக் கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தில் மக்கள் எல்லோரும் கேஸ் எரிக்க பணம் கட்ட முடியாமல் மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி விறகு எரித்தனர். மரத்தையெல்லாம் வீணாக்கி விட்ட...

கனிமங்கள் நிறைந்து ததும்பும் சுரங்கம்! : தேனி சீருடையான்

Image
சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம். உரையாடலுடன் கூடிய கேள்வியும் பதிலுமாய் நூறு பக்கத்துக்கும் மேல் நீள்வதால் இதைப் புதினம் என்று சொல்லலாமா? அப்படியும் சொல்ல முடியும். ஒவ்வொரு குழந்தையும் நோக்கமின்றி உரையாடுகின்றன. அறிவியல், உளவியல், அரசியல் என உள்ளடக்கக் கூறுகள் கலந்தும் கலைந்தும் கிடப்பதால் இது புதினம் இல்லை என்று சிலர் வாதிடுவர். ஆக, இது “சீமையில இல்லாத புத்தகம்” என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. உலகின் வேறு எந்த மொழியிலும் இம்மாதிரியான புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததே ஒரு புரட்சிச் சிந்தனைதான். இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரங்கள் மூன்று; டார்வின், புகழ்மதி, கீர்த்தி. அப்பா துணைப் பாத்திரமாய் வந்து போவார். அண்ணல் காந்தியடிகள் தனது சுய சரிதையில் குழந்தைக் கல்விபற்றி இப்படிக் கூறுவார். “குழந்தைகளுக்கு முதலில் கோடு போடவும் புள்ளி வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அது ஓவியமாய் மாறி மனசில் படியும்; அதுதான் முதல் கல்வி.” “அறுபது பக்க புஸ...

டுஜக் டுஜக் : நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
டுஜக் டுஜக் : நூல் குறித்த அறிமுகம் - தின மலர் நாளிதழ், சென்னை பதிப்பு

சீமையில் இல்லாத புத்தகம் : இரா.செந்தில்குமார்

Image
தேனி சுந்தர் அவர்களின் முந்தைய படைப்பான டுஜக் டுஜக் நூலின் பரந்துபட்ட வரவேற்பை தொடர்ந்து அதே வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது, சீமையில் இல்லாத புத்தகம். வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் பக்கமாக வசீகரிக்கும் அருமையான நூல். குழந்தைகளின் பேச்சு மொழியை பதிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்காகவே அவரை பாராட்டலாம். எல்லார் வீட்டிலும் குழந்தைகள் பேசுகிறார்கள் ஆனால் நாம் அவர்களின் பேச்சை கவனிக்கிறோமா என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்தவுடன் உடனே கடக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும்… ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளின் உலகத்தால் விரிகிறது…. அதில் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போதே பரவசமாகிறது….உடன் பயணித்தால் நம்மை வேறு மனிதர்களாக குழந்தைகள் மாற்றி விடுவார்கள் போலும். சீக்கிரமாக தீர கூடாது என மெதுவாக மெதுவாகவே வாசித்தேன்…. வாசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. உடனே வாசித்து கடக்கவும் முடியவில்லை… ஒரு சுகமான அனுபவம்.! கேள்விகளால் துளைத்தெடுக்கும் டார்வின்களுக்கு நாம் அளிக்கும் பதிலில் தான் அடங்கியுள்ளது குழந்தைகளின் வளர்ச்சி.. ஓரிடத்தில் டாடா ஸ்கை பற்றி டார்வின் ஒரு க...

சீமையிலே இல்லாத புத்தகம்தான் : பேரா.சோ.மோகனா

Image
வணக்கம் நண்பர்களே.. 06.10.22 அன்று விடியற்காலை ரயில் பயணம் மற்றும் காலை, பேருந்து பயணத்தின் போது, தேனி சுந்தரின் சீமையிலே இல்லாத புத்தகம் படித்தேன். ஒரே மூச்சில் 112 பக்கத்தையும், அணிந்துரையிலிருந்து, அவர் உரை வரை 9௦ நிமிடத்தில் படித்தாகிவிட்டது. என்ன சின்ன சின்ன கவிதை வரிகள் தான், எனவே படிக்க எளிதாகவும், விரைவாகவும் முடிந்தது, ஆனால் சீமையில் இல்லாத புத்தகம் படு சூப்பராக இருந்தது. ஆனால் வழக்கம்போல பல பணிகளால் அதனைப் பற்றிய பதிவு எழுத தாமதமாகிவிட்டது. நெசமாகவே இது சீமையிலே இல்லாத புத்தகம்தான். குழந்தைகளின் மழலை மொழியை பொதுவாக யாரும் பதிவு செய்வதில்லை. மழலை மொழிகளையே பதிவு செய்து இலக்கியம் ஆகிவிட்டார் தோழர் தேனி சுந்தர். படா கில்லாடி தான் இவர். கொஞ்சமும் கற்பனை கலக்காமல், அதற்கான அவசியமே இல்லாமல், நெசமான மழலை மொழியை பேசி மனதை கவர்தல் என்றால், வாழ்க்கை மொழியை குடும்ப மொழியை இலக்கியமாக்கிய முதல் மனிதர் இவராகத்தான் இருக்க முடியும். வாழ்த்துக்கள் மகனே… “வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்.” மேலும் சுந்தர் மகன் டார்வினின் கை ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. ஒரு சிறு பையனா இதனைப் போட்டான் என்று ...