Posts

“ஓங்கூட்டு டூணா” : நீலகிரி சித்ரா டீச்சர்

Image
டார்வின், புகழ்மதியோட அப்பா.. எனது மரியாதைக்குரிய நண்பர்.. குழந்தை நேய ஆசிரியர்.. சிறார் புத்தக எழுத்தாளர்..‌ அறிவியல் செயல்பாட்டாளர்.. இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டது.. “நடிகர்”.. இத்தனை கதாப்பாத்திரங்களும் ஒருங்கே கொண்ட.. Theni Sundar அவர்களின் மற்றுமொரு படைப்பான.. அவர் ஆட்டோகிராப் இட்டு எனக்கு அனுப்பி வைத்த.. “ ஓங்கூட்டு டூணா “.. வாசித்தேன். அதன் பின்னூட்டத்தை பகிராமல் இருக்க முடியுமா?!! “ ஓங்கூட்டு டூணா ” இந்த வார்த்தைகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிட்சயமானது தான்.. ஆனால் எத்தனை பேர் அந்த மழலை மொழிகளை ரசித்திருப்பார்கள்.. பதிவு செய்ய முன் வந்திருப்பார்கள்?!!.. அபியின் கதையில் ஆரம்பித்த புத்தகம் இறுதியில்.. “ஐ லைக் இட்” என்ற பாரதிராஜா வின் பிரபலமான டயலாக் உடன் முடிந்திருந்தது சிறப்பு.. இடையில் பதிவாகியுள்ள வகுப்பறை அனுபவங்கள் அருமையிலும் அருமை.. பொதுவாகவே ஆசிரியர்களாகிய அனைவருக்குமே வகுப்பறை அனுபவங்கள் இருக்கும்.. ஆனால் இது போன்ற ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் வாய்க்கப் பெற்ற வரம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகிய நாம்...

மாணவர் மனசு நூல் அறிமுக நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி  

பூமிக்கு யார் சொந்தம் : செ.கா.வின் நூல் குறித்து

Image
யதார்த்தத்தின் வியப்பு.. ஈரோடு சென்னிமலை நண்பர் செ.கா.வுடன் ஒரு பத்தாண்டு கால பழக்கம் இருக்கும். வாசிப்பு மற்றும் பயணத்தில் மிக ஈடுபாடு கொண்டவர். வாசிப்பிற்கான பயணம், பயணத்திற்கான வாசிப்பு - இரண்டும் தான் செ.கா. செய்யும் பணிகளை வெறும் அடையாளத்திற்காக மட்டும் அல்லாமல் அர்த்தப் பூர்வமாக, ஆழமாக எடுத்துச் செய்யக் கூடியவர். அவருடைய அறிவியல், சூழலியல் மற்றும் பரிணாமம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு "பூமிக்கு யார் சொந்தம்?" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. வழக்கமாக, பூமி யாருக்கு சொந்தம்? பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது தானே? இயற்கை என்பது மனிதனையும் உள்ளடக்கியது தானே? என்றெல்லாம் பேசி இருப்போம். கேட்டு இருப்போம். பூமிக்கு யார் சொந்தம்? என்கிற தலைப்பே சிந்திக்க வைப்பதாக இருந்தது. பல்வேறு விதமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாசித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அவற்றை ஒருசேர வாசிக்கும் போது புதிய அனுபவமாக அமைந்தது. சிறுத்தை, பெருஞ்சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலிகள் தொடர்பான கட்டுரை ஒன்றிய அரசு மேற்கொ...

கலிலியோ மண்டியிடவில்லை – தேனி சுந்தர்

Image
“அறிவியலின் வரலாற்றைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். மதம் எந்த அளவு அறிவியலை ஒடுக்கி இருக்கிறது என்பதை அறியும் போது மனம் தாளாத வேதனை அடைகிறது. அறிவியல் அறிஞர்களின் மறைக்கப்பட்ட வேதனைகளும் விம்மல்களும் அதிகார அடக்குமுறைகளும் அடங்கிய பெரும் மானுட ஆவணமாகவே அறிவியலின் வரலாறு இருக்கிறது. அறிவியல் பயன்பாடுகளை தினசரி வாழ்வில் உபயோகித்து பழகிய நாம் அதன் பின்னுள்ள மனித அறிவின் வியப்பான சாதனைகளை, போராட்டத்தை அறிந்து கொள்ளவே இல்லை. எனது கட்டுரைகள் அறிவியலின் நம்பிக்கைகளை ஆராய்கிறது. இலக்கியத்திற்கும் அறிவியலுக்கான நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுதலை முதன்மைப் படுத்துகிறது” என எஸ்.ரா. அவர்கள் எழுதியுள்ள முன்னுரை வரிகள் தான் நூலின் பிரதானம்.. கலிலியோவின் சிறுவயதில், ஆண்கள் மேம்பட்டவர்கள் என்பதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான பற்களை இறைவன் படைத்துள்ளார் என ஒரு மதபோதகர் கூறுகிறார். பெரியவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அதை அப்படியே நம்புகிறார்கள். பிறருக்கும் போதிக்கிறார்கள். ஆனால் சிறுவயது கலிலியோ அதை அப்படியே நம்பவில்லை. தாமறிந்த பெண்கள் அனைவரையும் வாயைத் திறக்க சொல்லி பற்களின் எண...

எது சிறார் இலக்கியம் : தொடரும் விவாதம் - தேனி சுந்தர்

Image
 நன்றி :   இந்து தமிழ் நாளிதழ்

சொல்வதும் கேட்பதும்தான் கற்றலா ?

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் : கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்ச்சி

மகாத்மா காந்தியை பேசும் புத்தகங்களுடன் தேனி சுந்தர்

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்வு