Posts

தமுஎகச அறம் முகிழ் வாசிப்பறை

  தமுஎகச அறம் கிளை சார்பில் குழந்தைகளுக்காக நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி

ஆயிசா இரா.நடராசன் சிறுகதைகள் : நூல் குறித்து

Image
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. நீயெல்லாம் மனுசன் தானா..? என்னைப் பார்.. எடு.. புரட்டு.. வாசி..! நான் உன் கண்ணுக்குத் தெரிகிறேன் தானே..!” அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் நாம் இன்னும் வாசிக்காதவை நம்மை நோக்கி எழுப்பும் குரல்களாகப் பல நேரங்களில் உணர்வது உண்டு. உள்ளே நுழைந்தால் அப்படி ஏராளம் குரல்கள் எழுகின்றன. நம் இயலாமையை என்ன செய்ய..! அப்படி ஒரு குரல் எழுப்பிய நூல் தான் “இரா.நடராசன் சிறுகதைகள்..” அதுவும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் வரிசையிலிருந்த நூல்.. கடந்த சில நாட்களாக அந்நூலுக்கு என்னை அர்ப்பணித்தேன்.. பெயரில்லாதவன் கதையில் தொடங்கி நூலில் இருக்கும் அத்தனை கதைகளும் சிறப்பு. ஆனாலும் இளவரசி பட்டம், மணி மகுடம் எல்லாம் ஆயிஷா கதைக்குத் தான்..! ஒவ்வொரு கதையும் வித்தியாசமான படைப்பு. நாம் எதிர்பாராத பாத்திரங்கள். சம்பவங்கள். திருப்பு முனைகள் நிறைந்தவை. அதை தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் அணிந்துரையும் அழகாகச் சொல்கிறது.. கதை நாயகர்கள் அனைவருமே மிக மிக சாமானியர்கள்.. கழிவறை சுத்தம் செய்பவர், செருப்பு தைப்பவர், பன்றி வளர்ப்பவர், பாலியல் தொழில் செய்பவர், வெட்டியான், பிணவறை காப்பாள...

பள்ளிகளில் ஓராசிரியர் நிலைமை: எச்சரிக்கும் கல்வியாளர் தேனி சுந்தர்

காம்ரேட் டாக்கீஸ் சார்பில் நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி   பள்ளிகளில் ஓராசிரியர் நிலைமை

மனச்சாட்சியின் குரல்கள் : நூல் குறித்து

Image
பேரா ச.மாடசாமி அவர்கள் எழுதிய மனச்சாட்சியின் குரல்கள் : நெருப்பு வார்த்தைகளின் தோரணம்..! அன்புத் தோழர் பேரா.மாடசாமி அவர்களின் புதிய நூல்.. மனச்சாட்சியின் குரல்கள்..! அவசரத்தில் மனதின் குரல் என்று வாசித்து விடக் கூடாது.. அவை பிரதமர் சொல்லும் மாதாந்திர பொய்கள் என முகப்பிலேயே பெயர்க் காரணம் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்.. அவ்வப்போது முகநூலில் வாசித்த பதிவுகள் தான் என்றாலும் தொகுத்து படிக்கையில் ஒரு சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருக்கிறது.. நூலில், குழந்தைகள் குறித்த பதிவுகள் தெவிட்டாத இன்பம் என்றால்.. அறிவொளி அத்தியாயம் சிலிர்ப்பூட்டும் தென்றல்.. இரண்டையும் கடந்தால் அனல்..! கத்தரி வெயில்..! ஆம், பழமைவாதமும் போராட்டமும் என்கிற அத்தியாயம் முழுவதும் அனல்.. அதிகாரம், ஆணாதிக்கம், மதவாதம் குறித்த பதிவுகள் அனைத்திலும் நெருப்பு வார்த்தைகள்.. தெறிக்க விட்டிருக்கிறார்.. வாசிக்க வாசிக்க சுடுகிறது.. நமக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று ஒவ்வொரு பதிவும் சோதிக்கிறது.. கைகள் நடுங்க.. கண்கள் சிவக்க.. உடல் முழுவதும் உஷ்ணம் ஏற்றும் அத்தியாயம் அது..! மதம் என்றால் எல்லாம் மதமாகி விடுமா.. இல்லை, ஆதிக்கவாதிகளின் ம...

டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : வாசிப்பு அனுபவம் : ரமேஷ், நாராயணத் தேவன் பட்டி

Image
டுஜக்..டுஜக்... படித்தேன்.. நண்பர் சுந்தரை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தேன். சூப்பர்...! என் மகனின் மழலைப்பருவம் என் கண்முன் வந்து நிழலாடியது. அவனை பள்ளியில் சேர்க்க போகும் போது பள்ளியில் கேட்ட கேள்வி: யானை என்ன கலர்? அவன் சொன்னான்.. யானை, யானை கலர் தான்....! டுஜக்... டுஜக்... ஓர் அற்புத படைப்பு..! குழந்தைகளின் மொழியை, சிந்தனையை, ஆர்வத்தை, தெளிவாக பதிவு செய்து தொகுத்திருக்கிறார். தரமான உரையாடல்கள்.. தேதி வாரியான பதிவுகள் மிகவும் சிறப்பு.! கொரனா வந்து பிஸ்கோத்து பாக்கெட்ட தூக்கிட்டு போயிரும்! என கூறும் மழலையின் புரிதல் சுகானுபவம். டார்வின், விவேக் இறந்துவிட்டார் என பதிவு செய்யும் போது குழந்தைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய புரிதல் இல்லாமல் போனது சுவாரசியமானது. குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதனையே விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.. நினைவிலும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக என்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அல்ஜீப்ராவில் மிக...

டுஜக் டுஜக் : குழந்தையின் வெற்றிக் குரல்.. செல்வம், ஆசிரியர்

Image
பொருள் இல்லாத தலைப்பாக இருக்கிறதே! என்ற சிந்தனையோடு புத்தகத்தை புரட்டிபார்க்க தொடங்கினேன். புத்தகத்தின் உள்ளே பொருள் செறிந்து காணப்பட்டதை உணரமுடிகிறது. குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நிகழும் இந்த நிகழ்வை எதார்த்தமாக கடந்து செல்வோம். ஆனால், ஆசிரியர் சுந்தர் அதற்கு அணிகலன் பூட்டி அழகுபடுத்தி நம் கையில் தந்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள். குழந்தைகளின் பேச்சு மொழியை அப்படியே தந்துள்ள பாங்கு அழகு ரசிக்கும் படியாக இருக்கிறது.. குழந்தை மொழிக்கு இலக்கண குற்றம் கண்டால் அதுவும் ஒர் 'இலக்கணப் பிழையே ' என்பதற்கு சான்றாகவே நம் முப்பாட்டன் வள்ளுவன் கூட "குழலினிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" என்று சொல்லி இருக்கிறார் போல... கற்றல் என்பது குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து தான் தொடங்கும் என்பதை ஆசிரியர் சுந்தர் உணர்ந்தவர் என்பதால் என்னவோ தன் குழந்தைகளை ஆக்கப்படுத்தியுள்ள நிகழ்வு அழகு மிளிர்கிறது. அந்த வகையில் டார்வின் கீர்த்தி புகழ்மதிக்கு பாராட்டுக்கள். "அப்பத்தா நீய்..எல்லாம் செத்துப்போய்ட்டா நானு ஓம் பக்கத்துலயே ஒக்காந்து அழுவேன்.." - பேத்தியின் ஒப்ப...

குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம் டுஜக் டுஜக் : ஜி.பாண்டி

Image
நண்பர் சுந்தர் ஒரு அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயலாளர். அவர் எழுதிய டுஜக் டுஜக் என்ற புத்தகம் வாசித்தேன்.. கல்வியாளர் பேரா. மாடசாமி மற்றும் விஞ்ஞானி ராமானுஜம் ஆகியோரின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.. மிக அற்புதமான நடையுடன் ஆங்காங்கே ஶ்ரீரசாவின் கோட்டோவியங்களோடு குழந்தைமையை பிரதிபலிக்கும் சொல்லாடல்களோடு தந்திருப்பது மிகச்சிறப்பு... எனக்கும் குறுஞ்செய்தியாக நிகழ்வுகளை அவ்வப்போது சுந்தர் அனுப்புவார். ஆம்லெட் போட முட்டைகள் வாங்கி உடைத்து, அதைத் துடைத்து, முழிப்பது பற்றி அவர் அனுப்பிய செய்தி பளிச்சென்று என் நினைவுக்கு வருகிறது... தமிழ் இலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழ் என்று ஒருவகை உண்டு. குறிப்பாக குழந்தை கண்ணனையும் முருகனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சேட்டைகளோடு உள்ள குழந்தமைகள் பற்றி கவிதையாக எழுதியுள்ளனர். அதுபோல தேனி சுந்தர் தனது துணைவியாரின் ஒப்புதலோடு எழுதிய "ஒரு அப்பாவின் டைரி" பத்து மாத இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் நம் கைகளில் நூலாக பூத்திருக்கிறது. மூத்த குழந்தை டார்வின்.. இப்பொழுதுதான் பள்ளி செல்ல ...