Posts

நானும் புத்தன் தான்.. - நூல் குறித்து

Image
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹைக்கூ நூலை வாசித்தேன்.. அப்போ அதுக்கு முன்னாடி நிறைய ஹைக்கூ நூல்களை வாசித்துக் கொண்டிருந்தீர்களா என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள்.. தமிழகத்தில் ஹைக்கூ இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்கக் கவிஞர்கள் எல்லாம் பெரும்பாலும் நம்மூர்ல தான் இருந்தார்கள்.. நம்மூர்க்காரர்களாக இருக்கிறார்கள்..! ஹைக்கூ சிகரத்தில் எப்போதும் இருக்கும் கம்பம் மாயவன், தோழர்கள் உமர் பாரூக், Tamizhmani Ay மற்றும் Cumbum Puthiyavan ஆகியோரது ஹைக்கூ நூல்கள் எப்படியும் கைக்கு வந்து விடும்… இப்போது அவர்களும் ஹைக்கூ எழுதுவது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆகவே என்னுடைய ஹைக்கூ வாசிப்பு குறைந்ததற்கு அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.. கம்பம் பகுதியில் அந்த ஏக்கத்தை, தாகத்தை போக்கும் விதமாக, குறைக்கும் விதமாக இப்போது கவிஞர் ராஜிலா ரிஜ்வான் ஹைக்கூ சாரல் பொழிந்து வருகிறார்.. அவருடைய இரண்டாவது நூல் “நானும் புத்தன் தான்..” அகநி வெளியீடாக வந்திருக்கிறது.. அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். இஸ்லாமியப் பெண். ஹைக்கூ கவிஞர்.. எல்லாமே கொஞ்சம் தனித்துவமான தன்மைகள் தான்.. தனது அணிந்...

மகாத்மா மண்ணில் மதவெறி - நூல் குறித்து

Image
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்.. ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. இந்துத்வ கும்பலின் சதித் திட்டத்தின் படி கோட்சே என்கிற இந்து மத வெறியன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. கடந்த ஜனவரி 30 அன்று கோவையில் நடந்த நிகழ்வில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.. மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பின் போது கோட்சே-வின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்பது தான் அங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தான் தடுக்கின்றனர்.. காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பது இதுவரை யாரும் சொல்லாத தகவலா..? உலகம் அறியாத உண்மையா? நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பெயரை ஏன் சொல்லக் கூடாது..?...

தமுஎகச அறம் முகிழ் வாசிப்பறை

  தமுஎகச அறம் கிளை சார்பில் குழந்தைகளுக்காக நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி

ஆயிசா இரா.நடராசன் சிறுகதைகள் : நூல் குறித்து

Image
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. நீயெல்லாம் மனுசன் தானா..? என்னைப் பார்.. எடு.. புரட்டு.. வாசி..! நான் உன் கண்ணுக்குத் தெரிகிறேன் தானே..!” அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் நாம் இன்னும் வாசிக்காதவை நம்மை நோக்கி எழுப்பும் குரல்களாகப் பல நேரங்களில் உணர்வது உண்டு. உள்ளே நுழைந்தால் அப்படி ஏராளம் குரல்கள் எழுகின்றன. நம் இயலாமையை என்ன செய்ய..! அப்படி ஒரு குரல் எழுப்பிய நூல் தான் “இரா.நடராசன் சிறுகதைகள்..” அதுவும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் வரிசையிலிருந்த நூல்.. கடந்த சில நாட்களாக அந்நூலுக்கு என்னை அர்ப்பணித்தேன்.. பெயரில்லாதவன் கதையில் தொடங்கி நூலில் இருக்கும் அத்தனை கதைகளும் சிறப்பு. ஆனாலும் இளவரசி பட்டம், மணி மகுடம் எல்லாம் ஆயிஷா கதைக்குத் தான்..! ஒவ்வொரு கதையும் வித்தியாசமான படைப்பு. நாம் எதிர்பாராத பாத்திரங்கள். சம்பவங்கள். திருப்பு முனைகள் நிறைந்தவை. அதை தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் அணிந்துரையும் அழகாகச் சொல்கிறது.. கதை நாயகர்கள் அனைவருமே மிக மிக சாமானியர்கள்.. கழிவறை சுத்தம் செய்பவர், செருப்பு தைப்பவர், பன்றி வளர்ப்பவர், பாலியல் தொழில் செய்பவர், வெட்டியான், பிணவறை காப்பாள...

பள்ளிகளில் ஓராசிரியர் நிலைமை: எச்சரிக்கும் கல்வியாளர் தேனி சுந்தர்

காம்ரேட் டாக்கீஸ் சார்பில் நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி   பள்ளிகளில் ஓராசிரியர் நிலைமை

மனச்சாட்சியின் குரல்கள் : நூல் குறித்து

Image
பேரா ச.மாடசாமி அவர்கள் எழுதிய மனச்சாட்சியின் குரல்கள் : நெருப்பு வார்த்தைகளின் தோரணம்..! அன்புத் தோழர் பேரா.மாடசாமி அவர்களின் புதிய நூல்.. மனச்சாட்சியின் குரல்கள்..! அவசரத்தில் மனதின் குரல் என்று வாசித்து விடக் கூடாது.. அவை பிரதமர் சொல்லும் மாதாந்திர பொய்கள் என முகப்பிலேயே பெயர்க் காரணம் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்.. அவ்வப்போது முகநூலில் வாசித்த பதிவுகள் தான் என்றாலும் தொகுத்து படிக்கையில் ஒரு சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருக்கிறது.. நூலில், குழந்தைகள் குறித்த பதிவுகள் தெவிட்டாத இன்பம் என்றால்.. அறிவொளி அத்தியாயம் சிலிர்ப்பூட்டும் தென்றல்.. இரண்டையும் கடந்தால் அனல்..! கத்தரி வெயில்..! ஆம், பழமைவாதமும் போராட்டமும் என்கிற அத்தியாயம் முழுவதும் அனல்.. அதிகாரம், ஆணாதிக்கம், மதவாதம் குறித்த பதிவுகள் அனைத்திலும் நெருப்பு வார்த்தைகள்.. தெறிக்க விட்டிருக்கிறார்.. வாசிக்க வாசிக்க சுடுகிறது.. நமக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று ஒவ்வொரு பதிவும் சோதிக்கிறது.. கைகள் நடுங்க.. கண்கள் சிவக்க.. உடல் முழுவதும் உஷ்ணம் ஏற்றும் அத்தியாயம் அது..! மதம் என்றால் எல்லாம் மதமாகி விடுமா.. இல்லை, ஆதிக்கவாதிகளின் ம...

டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : வாசிப்பு அனுபவம் : ரமேஷ், நாராயணத் தேவன் பட்டி

Image
டுஜக்..டுஜக்... படித்தேன்.. நண்பர் சுந்தரை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தேன். சூப்பர்...! என் மகனின் மழலைப்பருவம் என் கண்முன் வந்து நிழலாடியது. அவனை பள்ளியில் சேர்க்க போகும் போது பள்ளியில் கேட்ட கேள்வி: யானை என்ன கலர்? அவன் சொன்னான்.. யானை, யானை கலர் தான்....! டுஜக்... டுஜக்... ஓர் அற்புத படைப்பு..! குழந்தைகளின் மொழியை, சிந்தனையை, ஆர்வத்தை, தெளிவாக பதிவு செய்து தொகுத்திருக்கிறார். தரமான உரையாடல்கள்.. தேதி வாரியான பதிவுகள் மிகவும் சிறப்பு.! கொரனா வந்து பிஸ்கோத்து பாக்கெட்ட தூக்கிட்டு போயிரும்! என கூறும் மழலையின் புரிதல் சுகானுபவம். டார்வின், விவேக் இறந்துவிட்டார் என பதிவு செய்யும் போது குழந்தைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய புரிதல் இல்லாமல் போனது சுவாரசியமானது. குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதனையே விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.. நினைவிலும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக என்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அல்ஜீப்ராவில் மிக...