Posts

Showing posts from 2014

களமிறங்கும் நேரமிது

Image
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக குறிப்பாக தேனி, சிவகங்கை மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் நடந்த மாநிலச் செயற்குழு முடிவின் படி மாநிலந்தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாட நண்பர்கள் பலரும் பலவிதமாய்த் திட்டமிட்டுக் கொண்டிருக்க அறிவியல் இயக்க (ஆசிரியர், தொண்டர்கள்) நண்பர்கள் இந்தப் பிரச்சாரத்திற்காக திட்டமிட்டனர்... அதன் விளைவு? தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், சென்னை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருப்பூர், விழுப்புரம் என பத்து மாவட்டங்கள் வரையிலும் விரிவிடைந்துள்ளது. பல மாவட்டங்களில் இந்தப் பணியை நண்பர்கள் கையிலெடுப்பதற்குத் தயங்கினார்கள்.. காரணம் என்னவெனில் நானே ஒரு தனியார் / மெட்ரிக் / நர்சரி பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறேன்.. நான் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு எப்படி இதைக் கொண்டு செல்லமுடியும்? எனது குழந்தையை தனியார் பள்ளியில் படிக்கவைத்துக் கொண்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இந்தப் பிரச்சாரத்தைச் செய்வது? உள்ளம் உறுத்துகிறத...

அதிகரிக்க வேண்டும் ஆசிரியத் தற்கொலைகள்.....

Image
நான் ஆசிரியராகப் பணியேற்கும் போது மிகவும் சின்ன வயசு. 19 கூட முடியவில்லை.. மருத்துவச் சான்றிதழ் கேட்டுப் போகும்போது கூட கம்பம் செல்வம் டாக்டர் நம்பவில்லை. தம்பி, நீ எல்லா வகுப்புகளும் படிச்சுட்டுதான் வந்தியான்னு கேட்டார்..  2004 பிப்ரவரியில் பணியேற்கச் செல்கிறேன். எட்டாம் வகுப்பைக் கடந்துதான் தலைமை ஆசிரியர் அறையெனத் தகவல். போகும்போதே எட்டிப் பார்த்தேன்.. வாட்டசாட்டமா நல்ல மொரட்டு மொரட்டுப் பயலுக எட்டாம் வகுப்பிற்குள்.. பார்த்தவுடன் வியர்த்துப் போனது எனக்கு..!  எந்த வாத்தியாருக்காவது பணிஸ்மெண்ட்-ன்னா கே.ஜி.பட்டி பள்ளிக்கூடத்துக்குத் தான் மாத்துவாங்கலாம்.!? தலைமை ஆசிரியர் என்ன டைப்போ? மத்த வாத்தியார்கள் எல்லாம் டிப்டாப்பா இருக்கிறார்களே, நம்மோடு சகஜமாகப் பழகுவார்களா? இந்தப் பயலுக நம்ம சொல்றத கேட்பாய்ங்களா? மதிப்பாய்ங்களா? –இப்படி பல கேள்விகள் மனதிற்குள் இடமின்றி முட்டி மோதும் குழப்பமான மனநிலையில் தான் நான் முதல் நாள் பணியேற்றேன்... ஒரே நாளில் ஏழெட்டு பேர் அந்தப் பள்ளியில் சேர்ந்தோம்.. எல்லாருமே புதுசு. கொஞ்ச நாளில் சகஜ நிலைக்கு வந்தாச்சு. அப்புறம் பாத்திங்கன...

மூடும் அபாயத்தில் அரசுப்பள்ளிகள்.... மக்கள் பாதை மாத இதழ் நேர்காணல்

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க போராடும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிகச்சிறப்பான செயல்பாடு சம்பந்தமாக கண்ணுற்ற நாம் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை வெகுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மக்கள் பாதை இதழ்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. தேனிசுந்தரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்..  கந்தர்வனின்  அந்த பிரபுவின் புத்திரனும் அந்தக் கூலிப் பயலும் எவ்வளவு காலம் ஒரே பள்ளியில் படிப்பது அதனால் தான் நகராட்சி பள்ளிகள் நவோதயா பள்ளிகள் என இருபிரிவு ஆக்கினோம்...                                                            -என்ற கவிதையின் மூலம் இந்த வம்பான வர்க்கப் பிளவின் வேதனையை உணர்ந்த நாம் களப்போராளி சுந்தரின் கருத்துகளைப் பகிர்கிறோம்... ஏன் இன்ற...

மௌனத்தின் அர்த்தமென்ன?

Image
கடந்த சில வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை ஒரு வார இதழின் சார்பில் நேர்காணல் செய்திருந்தார்கள்.. அதில் ஒரு கேள்வி தமிழனின் தனிச்சிறப்பு, குணம் என்ன என்பது.. அதற்கு அவர் ஒரு நீண்ட யோசனைக்குப் பிற்கு அவர் தெரிவித்த பதில் இதுதான்.... கோழைத்தனம்.. உண்மைதானா? சமீபத்தில் மஞ்சப்பை என்ற திரைப்படம் வெளிவந்தது.. தாத்தா-பேரன் கதை என்றார்கள்.. எனக்கும் எங்க தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.. கண்டிப்பாக பார்க்கணும் என்று நினைத்திருந்தேன்.. ஒரு நாள் வாய்த்தது... கம்பம் திரையரங்கு ஒன்றில் இரவுக்காட்சிக்குச் சென்றேன்... மொத்தமே ஒரு ஐம்பது, அறுபது பேருக்குள்ளதான் இருக்கும்.. அதில் ஒரு ஐந்தாறு பேர் தங்கள் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தனர்.. படம் ஆரம்பிக்கும் போதே சில இளைஞர்கள் சிகரெட்டைப் பற்றவைக்க.. உடனே ஓடிவந்த திரையரங்கக் காவலாளி இளைஞர்களை எச்சரித்துவிட்டு சென்றார்... படம் ஓடிக்கொண்டிருக்க, சிலர் பிராந்தி பாட்டிலை உடைத்து ஊற்றும் சத்தமும் கேட்க ஆரம்பித்தது.. இருட்டு அவர்களுக்கு வசதியாக இருந்தது... யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.... கதாநாயகி வருகின...

மக்கள்தான் கதாநாயகர்கள்- தேனி சுந்தர்

Image
என் அப்பா (தேவராஜ் என்று பெயர்). அந்தக் காலகட்டங்களில், எனக்கும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் பலருக்கும் கதாநாயகன்... சிலருக்கு வில்லனும்கூட..... பொதுவுடமை இயக்கமொன்றின் செயலாளராக இருந்து பல இயக்கங்களை நடத்தியவர்... கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டம்.... வாரவட்டிக்கு எதிரான போராட்டம்... பெண்களுக்கான திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டம்... முல்லைப் பெரியாறு குறுக்குப்பாலம் கட்டச் சொல்லி சாலை மறியல் (போராட்ட வடிவங்கள், எதிர்விளைவுகள் பற்றி நமக்கென்ன தெரியும் அந்தச் சிறு வயதில்.... நான் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மறியல் நடக்குமிடத்தை அடைந்தேன்.. அங்கு பண்டபாத்திரங்களை வண்டியில் ஏற்றுவதுபோல தோழர்களை அள்ளி வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர் போலீசார்..!) மான்சாண்டோ கம்பெனி எதிர்ப்புப் போராட்டம்- இவையெல்லாம் சிறுவயதில் என்காதில் விழுந்தவை... அல்லது என் நினைவுக்கு எட்டியவை.. தன் தந்தைக்குச் சோறு கொண்டுபோகும் வழியில் ஒன்றிரண்டு பழங்களைப் பிடுங்கித் தின்றுவிட்டான் என்பதற்காக ஒரு சிறுவன் திராட்சைத் தோட்ட முதலாளி ஒருவரால் சித்ரவதை செய்தே கொ...

வேல நெறயாக் கெடக்கு........

வணக்கம் நண்பர்களே.. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் ஒருநாளாக இருக்கலாம்.. நான் நமது அறிவியல் இயக்க நண்பர் ஒருவரைப் பார்த்து அவரது நட்பை, தொடர்பை புதுப்பிக்கும் பொருட்டு அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.. அவர் அந்தப் பகுதி குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்புகளை எடுத்து வருவது அன்றுதான் எனக்குத் தெரியும்.. தேர்வு நேரம் என்பதால் குழந்தைகள் இன்று சீக்கிரமே வந்துவிட்டார்கள்.. கொஞ்சம் பேசிக்கிட்டு இருங்க என்று சொல்லிவிட்டு பால்வாங்கி வர என்னுடைய வண்டியெடுத்துக் கொண்டு கிளம்பினார்... எனக்கு உரை நிகழ்த்தும் உற்சாகமெல்லாம் அன்று இல்லை.. (தெரியாதுங்கறது வேற விசயம்...!) வழக்கம் போல அமைப்புக் கூட்டங்களின் பாணியில் சுய அறிமுகம்... நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இருந்தனர்.. என்னடா இது வந்த இடத்தில் வம்பாகப் போச்சுன்னு நினைக்கும் போது ஒரு யோசனை தோன்றியது.. உரையாடல்... ஆயிரமாயிரம் உரையாடலை இங்கிருந்து துவங்குவோம்.. பையில் இருந்த விஞ்ஞானச்சிறகை எடுத்தேன்.. அதில் பேரா.பி.ஆர். அவர்களின் ஆயிரமாயிரம் உரையாடல் குறித்த கட்டுரை ஒன்று இடம்பெற்றிருந்தது.. “சரிப்பா...

கொஞ்சம் விளையாட்டு... கொஞ்சம் அரசியல்... கொஞ்சம் அறிவியல்....

Image
கிரிக்கெட் கிறுக்கு:  கிரிக்கெட்.... கிரிக்கெட்.... கிரிக்கெட்.... நம் நாட்டில் முளைச்சது, நரைச்சது என அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விளையாட்டாக உருவாக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் மட்டுமே..... கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, வீரட் கோலி பெரும்பாலான இந்திய மக்களுக்குத் தெரிந்த விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்.... இவர்களின் மீது விழுந்த வெளிச்சத்தின் சிறுபகுதி கூட நமது நாட்டின் பிற விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்ததில்லை... யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்கைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு ஹாக்கி வீரர்கள் சர்தார் சிங், தரம்வீர் சிங்கைத் தெரியும்? இந்தியக் கால்பந்து ஹீரோ பூட்டியாவைத் தெரியும்? விஸ்வநாதன் ஆனந்தை விதிவிலக்காகச் சொல்லலாம். நம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவி கெடுதல் விளைவிக்கும் பார்த்தீனியம் போல ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளை அழித்தொழித்த பெருமை இந்த கிரிக்கெட்டுக்கு உண்டு... கொட்டோகொட்டெனப் பொழியும் பணமழையில் நனைய விரும்பி கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்புக்கு மல்லுக்கட்டும் அரசியல்வாதிகளையும் பெரு முதலாளிகளையும் நாம் அறிவோம்... அரசியல், பொர...

படம் எழுப்பும் கேள்வி

துவக்க வகுப்பில் மன்னர்மன்னன் என்றொரு பாடம். மன்னர் தனது வாரிசுக்கு முடிசூட்டுவிழா நடத்த தீர்மானிக்கிறார். விழா நாளன்று இளவரசரின் நண்பர்களான முடிதிருத்தும் தொழிலாளி, துப்புரவுத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி போன்றோரின் குழந்தைகள் செல்கிறார்கள்.. வாயிற்காவலன் தடுத்து நிறுத்துகிறான்... தகவலறிந்த இளவரசன் நேரடியாகத் தலையிட்டு இவர்களெல்லாம் எனது நண்பர்கள்.. எனக்குச் சிகையலங்காரம் செய்தவர்கள் இவர்கள்.. எமது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தவர்கள்.. ஊரைச் சுத்தம் செய்பவர்கள் இவர்கள்... இவர்களின்றி நாமில்லை (யாமில்லை).. பாகுபாடு காட்டக் கூடாது என முடிகிறது. அட பரவாயில்லையே என முதலில் தோன்றினாலும் பாடத்திற்கு வரையப்பட்டுள்ள படம் வேறொரு கேள்வியை எழுப்புகிறது. படத்தில் துடைப்பம் மட்டுமே சொத்தாகக் கொண்ட துப்புரவுத் தொழிலாளிதான் கரடி.. பின்னணியில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கும் மேலான அரண்மனை அரசனுக்குச் சொந்தமாக..! இதுபோன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை மறைமுகமாக நியாயப்படுத்தும் படங்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெறுவது நியாயமா? பாடத்தில் சிங்கம், புலி, யானை போன்ற வலுவான விலங்குகள் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவைய...

அன்றொரு நாள்

நானும் எனது நான்காம் வகுப்பு மாணவர்களும் சமூக அறிவியலில் தேசியச் சின்னங்கள் குறித்துக் கலந்துரையாடினோம்.. நமது கொடி மூவர்ணக் கொடி என்று அழைக்கப்படுகிறது. அது பற்றி பாடப்புத்தகத்தில் உள்ள விளக்கத்தைக் கூறிவிட்டு வேறொரு கருத்தையும் முன்வைத்தேன். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாதி, மதம் பிடித்திருக்கிறது இல்லையா என்றேன்.. யானைக்கெல்லாம் மதம் பிடிக்கிறது மாதிரி இல்லையா சார் என்றாள் கிருத்திகா.. (எங்கள் வகுப்பின் அதிரடி பேட்ஸ் உமன் இவள். விட்டு விளாசுவதில் கில்லாடி). மதம்னா என்னாங்க சார் என்று குறுக்கே புகுந்தாள் மதுமிதா. இந்தியாவில் உள்ள மதங்களைப் பற்றி எடுத்துக்கூறி. இந்தப் பிரிவினைகள் எல்லாம் இருக்கின்றன என்பதைப் பறைசாற்றும் விதமாகத்தான் இந்துக்களின் காவியும், கிறித்தவர்களின் வெண்மையும், இஸ்லாமியர்களின் பச்சையும் புத்தமதத்தின் அசோகச் சக்கரமும் தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ளதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... என விளக்கமளித்தேன்.. தேசியக் கொடியை ஏற்றும் போது பூக்களை வைப்பது ஏன் என்று தெரியுமா? வெள்ளையர்களுக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட...

இந்த நிலை மாற வேண்டும் தானே..?

1953 ல் சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எனது ஆய்வுகளுக்கு இந்திய அரசு ஊக்கமளிக்கவில்லை என்பதைப் பகிரங்கமாகவே அறிவித்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் முன்னிலையிலேயே தனது ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளைப் போட்டு நொறுக்கினாராம் நமது ஜி.டி.நாயுடு... அன்றிலிருந்து 60 ஆண்டுகள் கடந்தபின்னும் நிலைமை மாறியுள்ளதா? சர்வதேச அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நமது நாட்டில் இருந்து ஒன்று கூட இடம்பெறவில்லை.. தரத்தை மேம்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டும்.. இந்த நிலை மாற வேண்டுமென தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பில் கலந்துகொண்ட நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி... (குடியரசுத் தலைவர் பேசி சில மாதங்கள் கழித்து அந்தப் பட்டியல் குறித்த செய்திகள் நமது நாளிதழ்களில் வெளிவந்தன... எப்படியாவது இடம் பிடித்துவிடவேண்டும் சிறந்த 100, சிறந்த 200 என நீட்டிக்கொண்டே போனதில் சிறந்த 500ல் 4ம் 800ல் 20ம் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்தனவாம்... இந்த நிலை மாற வேண்டும் தானே..? ) இந்திய அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்து கொ...