Posts

அன்றொரு நாள்

நானும் எனது நான்காம் வகுப்பு மாணவர்களும் சமூக அறிவியலில் தேசியச் சின்னங்கள் குறித்துக் கலந்துரையாடினோம்.. நமது கொடி மூவர்ணக் கொடி என்று அழைக்கப்படுகிறது. அது பற்றி பாடப்புத்தகத்தில் உள்ள விளக்கத்தைக் கூறிவிட்டு வேறொரு கருத்தையும் முன்வைத்தேன். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாதி, மதம் பிடித்திருக்கிறது இல்லையா என்றேன்.. யானைக்கெல்லாம் மதம் பிடிக்கிறது மாதிரி இல்லையா சார் என்றாள் கிருத்திகா.. (எங்கள் வகுப்பின் அதிரடி பேட்ஸ் உமன் இவள். விட்டு விளாசுவதில் கில்லாடி). மதம்னா என்னாங்க சார் என்று குறுக்கே புகுந்தாள் மதுமிதா. இந்தியாவில் உள்ள மதங்களைப் பற்றி எடுத்துக்கூறி. இந்தப் பிரிவினைகள் எல்லாம் இருக்கின்றன என்பதைப் பறைசாற்றும் விதமாகத்தான் இந்துக்களின் காவியும், கிறித்தவர்களின் வெண்மையும், இஸ்லாமியர்களின் பச்சையும் புத்தமதத்தின் அசோகச் சக்கரமும் தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ளதாகவும் எடுத்துக் கொள்ளலாம்... என விளக்கமளித்தேன்.. தேசியக் கொடியை ஏற்றும் போது பூக்களை வைப்பது ஏன் என்று தெரியுமா? வெள்ளையர்களுக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட...

இந்த நிலை மாற வேண்டும் தானே..?

1953 ல் சென்னையில் நடந்த ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எனது ஆய்வுகளுக்கு இந்திய அரசு ஊக்கமளிக்கவில்லை என்பதைப் பகிரங்கமாகவே அறிவித்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் முன்னிலையிலேயே தனது ரேடியோ உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளைப் போட்டு நொறுக்கினாராம் நமது ஜி.டி.நாயுடு... அன்றிலிருந்து 60 ஆண்டுகள் கடந்தபின்னும் நிலைமை மாறியுள்ளதா? சர்வதேச அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் நமது நாட்டில் இருந்து ஒன்று கூட இடம்பெறவில்லை.. தரத்தை மேம்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டும்.. இந்த நிலை மாற வேண்டுமென தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பில் கலந்துகொண்ட நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி... (குடியரசுத் தலைவர் பேசி சில மாதங்கள் கழித்து அந்தப் பட்டியல் குறித்த செய்திகள் நமது நாளிதழ்களில் வெளிவந்தன... எப்படியாவது இடம் பிடித்துவிடவேண்டும் சிறந்த 100, சிறந்த 200 என நீட்டிக்கொண்டே போனதில் சிறந்த 500ல் 4ம் 800ல் 20ம் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்தனவாம்... இந்த நிலை மாற வேண்டும் தானே..? ) இந்திய அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்து கொ...

இதயங்களில் வாழும் இதயகீதன்

Image
”பெற்றோர் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்” என்பதற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்தவர் எங்கள் இதயகீதன்.. அவர் தேனி அருகே நவம்பர் 7 வியாழன்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.. பேசுவதில், எழுதுவதில், நிதி திரட்டுவதில், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில், புதியவர்களைக் கண்டறிந்து அணுகுவதில், அவர்களை அமைப்பாகக் கட்டுவதில், விமர்சனங்களை சம்பந்தப்பட்டவர் மனம் எவ்விதத்திலும் காயப்படுத்திவிடாத வகையில் கவனமாக எடுத்துச் சொல்லும் வித்தையில், முற்போக்கு முயற்சிகள், நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளாய் முன்வந்து பாராட்டுவதில், பங்குபெறுவதில், எவ்வளவு பெரிய செயல்திட்டத்தை முன்வைத்தாலும் அதை எளிதாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் அரும்பும் வகையில் அழகாகத் திட்டமிட்டுக் கொடுப்பதில் என எல்லாவிதங்களிலும் எங்களுக்குள் ஆழமாய்த் தாக்கத்தை ஏற்படுத்திய முற்போக்கு ஆளுமைதான் இதயகீதன்.. பழைய சோறும் பாதாம் கீரும், என்றென்றும் வாழும் ஜீவா, வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். அக்னிக்குஞ்சு இதழாச...

என்னமோ நடக்குது?

Image
நண்பர்களே... முதலில் கல்விப்பணியில் மகத்தான பங்களிப்பைச் செய்து வரும் நமது இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கும் ஆசிரியர் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! கல்வியில் நாம்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக கல்விச்சூழலில் ஆகச்சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறது. தமிழக கல்விச்சூழலில் ஏற்பட்டுள்ள முற்போக்கான சில மாற்றங்களைப் பேச முனைகின்ற நடுநிலையாளர்கள் / நண்பர்கள் எவரும் அறிவியல் இயக்கத்தைக் குறிப்பிடாமல் பேச முடியாது. கல்வி, சுகாதார விழிப்புணர்வுக்காக ஆரம்பகாலத்தில் நாடு தழுவிய அளவிலான கலைப்பயணங்களில் நமது பங்களிப்பாக இருந்தாலும், அரசின் திட்டமாக இருந்தாலும் மக்கள் இயக்கமாக நாம் மாற்றிக்காட்டிய அறிவொளிப் பணியாக இருந்தாலும் சரி, கற்றலில் இனிமை, கற்பது கற்கண்டே, சிட்டுக்கள் மையம், இரவுப்பள்ளி என நீளும் நமது இயக்கத்தின் முன்முயற்சிகளின் நெடும்பட்டியலாக இருந்தாலும் சரி... நிகழ்காலத்தில் செயல்வழிக்கற்றல், பொதுப்பாடத்திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஆகியவற்றில் நமது ஆய்வுகளும் அரசுக்கு நாம் வைத்த முன்மொழிவுகளும் நமது ஆழமான தலையீட்டிற்கு ...

தாய்ப்பால் வாரம்:ஆகஸ்ட் 1-7

Image
தாய்ப்பால் அவசியம்:   WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக பல பணிகளைச் செய்து வருகின்றன. இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல் இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது.  தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலக...

கணக்கும் இனிக்கும்

Image
தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை... கணக்கு! பிடிக்காத பாடம்... கணக்கு! பிடிக்காத வாத்தியார் கணக்கு வாத்தியார்! கணித ஆண்டு என்று சொன்னதுமே எனக்குச் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பகிர்வு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு டீச்சர் கணக்கில் வடிவியல் பாடம் நடத்துனாங்க. கையிலே வடிவியல் நோட்டு, காம்பஸ் எல்லாம் எடுத்தாச்சு.. வரையுறேன்.. வரையுறேன்.. தப்புத்தப்பா வருது. கடைசி வரைக்கும் வட்டம் மட்டும் வரவேயில்லை. நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்... டீச்சர் போட்டாங்க பாருங்க முதுகுல.. அன்னைக்குத் தொடங்கியது தான் பகை! ஒரு கட்டத்துல கணக்குப் பாடத்துக்குப் பயந்தே எட்டாம் வகுப்பிற்குப் பிறகு நான் படிக்கவில்லை, திராட்சைத் தோட்டத்திற்கு காக்கா விரட்டப் போறேன்னு தெருத்தெருவாக நான் ஓட... எங்கப்பா சைக்கிளை எடுத்துக்கிட்டுத் தேட.. அது ஒரு சில வாரங்கள்...  ஒரு வழியாகப் பக்கத்து ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தேன். அங்கு ஒரு கணக்கு வாத்தியார்... இன்னிக்கும் கூட சுருளிமுத்து வாத்தியார்னா சில பேர...

உனக்குரிய இடம் எங்கே?

காமய கவுண்டன் பட்டியில் நாங்க பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் நல்லா படிப்பேன்.. நான் என்ன சொன்னாலும் பாராட்டுதான்.. அந்த அளவிற்கு ஆசிரியர்களுக்கு என்மேல் நம்பிக்கை.. ஆனால் சில நண்பர்கள் எந்த விதத்திலும் தன்னை ஆசிரியர் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை.. சில நேரங்களில் சரியான விடையையே சொல்லிவிட்டாலும் எங்க வாத்தியார் என்ன செய்யமாட்டார்.. பாராட்டவே மாட்டார். திட்டு மட்டுமே அவர்களுக்கு பரிசு. அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவன் தான் சரவணன்.. அவன் கெட்டிக்காரனுமில்லை.. அதே நேரத்தில் அவனால் வகுப்பறைக்கு ஒரு பிரச்சனையுமில்லை.. யாரோடும் அவ்வளவாக பேசுவதுகூட இல்லை. அவன் எந்தவிதத்திலும் எங்களைப் பாதித்ததே இல்லை. ஒருநாள் தமிழாசிரியர் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எங்க பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு பாட்டை தன் வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டிருந்தான்.. யாருக்கும் கேட்டு தன்னை கிண்டல் செய்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருந்தான்.. சில சேட்டைக்கார நண்பர்கள், ஐயா, சரவணன் பாட்டுப்பாட போற...