Posts

படிக்க வை.. எழுத வை..

Image
கடந்த மாத இதழில் நான் மாற்றுப்பணிக்காக சென்ற பள்ளியில் ஏற்பட்ட அனுபவத்தைப் புதிய ஆசிரியன் இதழில் பகிர்ந்திருந்தேன்.. அதன் தொடர்ச்சி தான் இதுவும்..  அந்தப் பள்ளியில் வெறும் ஆறு குழந்தைகள் தான்.. வகுப்பு துவங்கும் முன்பு மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. பள்ளி திறந்த சில வாரங்களுக்கு அவர்களுடைய உரையாடலில் சட்டமன்றத் தேர்தல் செய்திகள் நிரம்பியிருந்தன.. ஜெயலலிதா எங்க அப்பத்தா சார்.. கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எங்க தாத்தா சார் என்பான் கோகுல்.. தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் குறித்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. வாக்குச்சாவடிக்காக ஒட்டியிருந்த போஸ்டர்களைக் கிழித்தேன்.. சார் சார்.. ரெட்டலையக் கிழிச்சுடாதீங்க என்பான்.. கல்வி வளர்ச்சி நாளில் காமராசர் தான் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவருன்னு சொல்லிமுடிக்கும் முன்பே சார் அதை எங்கப்பத்தா தான் அஞ்சு முட்டை கொடுக்கணும்னு மாத்துணாங்க என்பான்.. கலைஞரைக் கண்டபடி நக்கலடிப்பான்..  பத்துக்கும் கீழே குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததால் இப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த சத்துணவுப் பணியாள...

வகுப்பறை என்பது பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் இடமாக மாற வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு நேர்காணல்

Image
2017ஆம் ஆண்டினை சாவித்ரிபா பூலே அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் துவங்கியிருக்கிறீர்களே..? ஜோதிபா பூலே மற்றும் அவருடைய இணையரான சாவித்ரிபா பூலே இருவருமே சனாதானக் கொள்கைகளுக்கு எதிராக, பிராமணீய, வேத சமய கட்டுப்பாடுகளுக்கு எதிரான மிகப் பெரியபோராட்டங்களை நடத்தியவர்கள்.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், அவர்கள் இருவரும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து தங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சொன்னது.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், ஒரு பிராமண விதவைப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேற்றப் பட்டபோது அடைக்கலம் கொடுத்ததும் அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாகவே வளர்த்தெடுத்ததும் கூட.. பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்ன காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிக்கூடங்களைத்திறந்தார்கள்.. ஆதிசூத்திரர்களும் சூத்திரர்களும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் பொதுப் பள்ளிகளை நிறுவினார்கள்.. மனுவாதத்திற்கும் வணிகமயத்திற்கும் எதிராக எழுந்தபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க்குரல்கள் தான் ஜோதிபா பூலே...

விடுங்க சார்... திட்டாதீங்க சார்...

Image
கடந்த மே மாதம் கடைசி நாளில்.. ஆஹா நாளைலேருந்து பள்ளிக்கூடமேன்னு பசங்களப் போலவே தயாராவதற்கு நமக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.. அதில் கூடுதல் கஷ்டம் என்னன்னா? நாளை முதல் வேறொரு பள்ளிக்கு மாற்றுப் பணியில் செல்ல வேண்டும் என 31ஆம் தேதி இரவு 9 மணிக்குச் சொன்னார் எங்க தலைமை ஆசிரியர்.... அதுவும் இணை இயக்குநர் உத்தரவாம்... மறுநாள் கொஞ்சம் குழப்பத்தோடும் மனவருத்தத்தோடும் தான் சென்றேன்.. அந்தப் பள்ளியில் மொத்தமே ஆறு குழந்தைகள் தான்.. கோகுல், அனிஸ், ஹரிணி, பவித்ரா மற்றும் இரு பெண் குழந்தைகள்.. கடந்த மாத இறுதியில் எனது பள்ளிக்கு திரும்பிவிட்டேன்.. போன இடத்தில் பல நல்ல அனுபவங்களைத் தந்து அனுப்பினர் அந்தக் குழந்தைகள்.. ஒரு நாள் மூன்றாம் வகுப்பு ஹரிணி மட்டும் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.. சொன்ன எழுத்துப் பணிகள் பலவும் முடிக்காமலே இருந்தது... ஏம்ப்பா, சொல் பேச்சு கேட்க மாட்டியா? ஒரு தடவை சொன்னா புரியாதா?ன்னு ஆசிரியருக்கே உரிய கடும் முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.. மீதி ஐந்து மாணவர்களும் மொத்தமாக வந்தார்கள்.. கோகுல் முதலில் வந்தான்.. நான் என்ன என்று கேட்பதற்குள்ளாகவே.. திட்டா...

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களைப் பாதுகாப்பது எப்படி?

மெட்ரிக் ஆசிரியர்களின் விடுதலை பற்றி டிசம்பர் இதழில் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் எழுதியிருந்தார்கள்.. மெட்ரிக் ஆசிரியர்கள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடம் வழங்கிப் பாதுகாத்திட வேண்டும். இங்கு பணிவாய்ப்பு இல்லாத காரணத்தினால்தான் அவர்கள் அங்கு அடிமைச் சேவகம் செய்கின்றனர்.. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் விடுப்பு விதிகளும் பணிப் பாதுகாப்பும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க நாம் வலியுறுத்துவோமாயின் அவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தானே முறைப்படி நியமனம் செய்யமுடியும்? தற்போது வழங்கி வரும் ஊதியத்தை விட பலமடங்கு கூடுதலான ஊதியத்தை மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நிச்சயம் வழங்க முன்வரப் போவதில்லை.. தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேகம் குறைந்துள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்று பல இலட்சங்களைக் கொடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருக்க பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. எனவே வருமானம் இல்லை என்பதால் அரசு உதவி பெறும் பள்ள...

அறிவியல் கலாச்சாரம் மேலோங்கி இருந்தால் சமகால ஜனநாயக சீரழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருந்திருக்காது- பேரா.நா.மணி நேர்காணல்

Image
பொருளாதார பேராசிரியர் மணி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? தற்போது பொருளாதாரத் துறைப் பேராசிரியர் என்ற பொறுப்பை செம்மையாக செய்ய இயலாதவனாகவே உள்ளேன். நான் பணியாற்றும் துறையில் 10 பேர். ஏழு பேர் பணி ஓய்வு பெற்றும் ஒருவர் முதல்வராக பணி உயர்வும் பெற்று சென்ற நிலையில் ஏழு பணியிடங்கள் காலி. முதலில் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டும் பின்னர் புதிதாக பணி அமர்த்தப் பட்டவர்களை ஒருங்கிணைப்பது ஊக்கமளிப்பது. புதிய துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவது என துறைசார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், ஒரு பொருளாதார பேராசிரியராக சமகால பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதன் மீது பங்களிப்பு செலுத்துதல் என்ற பகுதியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் மாநாடு ஒன்றை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறீர்கள்.. அதென்ன திடீரென வல்லுநர்கள் மாநாடு? கருப்புப் பணம், கள்ளப் பணம் குறித்து விவாதிக்கப்பட்டதா?? தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் சங்கம் (Association of Economists of Tamilnadu) என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரப்...

அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளை விடவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது +2 பொதுத் தேர்வு முடிவுகள்.. எத்தனை பேர் முதலிடம், எத்தனை பேர் இரண்டாவது இடம்.. மூன்றாவது இடம்.. எந்தெந்தப் பாடங்களில் எத்தனை பேர் 200/200? மாணவர்களின், பள்ளி நிர்வாகிகளின் பேட்டிகளால் பத்திரிகைகள் நிரம்பி வழிந்தன.. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிலர் வங்கி, கூட்டுறவுத்துறையில் மேலாளர்கள், சிலர் தனியார் நிறுவன மேலாளர், ஆடிட்டர்.. அதே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப்பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. அவரது தாயார் நிர்மலா ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் வாழ்கிறது.. மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்ற கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசுப் பள்ளி மாணவி சத்யாவின் ( 1178 மதிப்பெண்கள் ) தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி.. அம்மா, அப்பா இருவரும் பள்ளிக்கூடமே போகாதவர்கள்.. மூன்றாவது இடம் பெற்ற காஞ்சிப...

அனைவருக்கும் வேண்டும் தரமான கல்வி....!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழகக் கல்வித்தர மேம்பாட்டிற்கான கோரிக்கைகள் தொகுக்கப்பட்டன.. அக்கோரிக்கைகள் அடங்கிய பிரசுரம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ள வேண்டியல் பட்டியல்.. இதோ உங்கள் முன்..:   தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழாவைச் சந்திக்க இருக்கும் சூழல்.. அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது...   தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து முற்றிலும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான பொதுப் பள்ளி முறையை, உண்மையான சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்..  அரசுப்பள்ளியில், தாய்மொழிவழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கே அரசு உயர்கல்வி நி...