Posts

Showing posts from 2025

மனக்கஷ்டமா இருக்கும்போது இந்த நூலை வாசிங்க.. : ரமேஷ் ராஜா

Image
குழந்தைகளோடு பேசுவதென்பது நம் மனதை இலகுவாக மாற்றிவிடும்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை கவனமாக கையாள வேண்டிய அழுத்தத்தை மீறி,அவர்களோடு உரையாடும் வாய்ப்பு அவர்களின் பணியின் சுவாரசியத்தை கூட்டிவிடுகிறது. அப்படியான ஒரு ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த 'ஓங்கூட்டு டூணா'. நூலின் ஆசிரியர் பெயர் தேனி சுந்தர். பள்ளி ஆசிரியர்,அறிவியல் மற்றும் கல்வி செயற்பாட்டாளர். 'டுஜக் டுஜக்- ஒரு அப்பாவின் டைரி ', ' சீமையில் இல்லாத புத்தகம் ' ஆகிய நூல்களின் ஆசிரியர். தன் வகுப்பறையில் மாணவர்களோடு நடந்த சுவாசியமான வகுப்பறை நிகழ்வுகளை நூலாக்கியிருக்கிறார்.குழந்தைகள் எதிர்பாராத நேரங்களில் நம்மை நமக்கு உணர்த்தி விடுவார்கள். அப்படியான நிகழ்வுகள் அதிகம் நடக்கிற இடம் பள்ளி.அதுவும் ஆரம்பப்பள்ளிகள் இவ்வாறான நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.மாணவர்களுக்கிடையான சண்டைகள்,ஆசிரியருடனான பிரச்சனை,ஆசிரியரின் பிரச்சனை, மாணவர்களின் வீட்டுப் பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றையும் போற போக்குல அடித்து விளாசிவிடுவார்கள் குழந்தைகள். நூலில் ஒவ்வொரு நிகழ்விற்கும் வரையப்பட்ட ஓவியங்கள் சிறப்பு.வரைந...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
  குழந்தைகளின் கண்களுக்கு ஊரையும் உலகத்தையும் காட்டுவதோடு இன்னொரு பக்கம் உள்ள உலகத்து ஜன்னலையும் திறந்து காட்டச் செய்கிறது இந்தப் புத்தகம். வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் ஏற்பட்ட உரையாடலையும் அனுபவங்களையும் தன் பாணியில் 25 தலைப்புகளில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். - கனவு ஆசிரியர் மாத இதழ் அக்டோபர், 2025

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!

Image
தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்! திட்டமிடாத வகுப்பறைகள்.. மாணவர் மனசு.. உங்க ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்.. தேனி சுந்தர் இதுவரை படைத்துள்ள நவரத்தினங்களில் மிகவும் முக்கியமான தொகுப்புகள் தற்போது வெளிவந்துள்ள மேலே சொன்ன மூன்று தொகுப்புகள். தேனி சுந்தர் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பண்பாட்டு தளத்தில் செயல்பாட்டாளர் (Teacher is a cultural activist) என்று பாவ்லோ ஃபிராயரே கூறுவர். ஆசிரியருக்கான இந்த வரையறை தேனி சுந்தருக்கு பொருந்தும். கெட்ட வார்த்தையா? கேட்ட வார்த்தையா? குற்றவாளி கூண்டில் நம் அனைவரையும் நிறுத்தும் "திட்டமிடாத வகுப்பறைகள்". இது போன்ற ஏராளமான கேள்விகளை "மாணவர் மனசு" மற்றும் "உங்கள் ஜட்ஜ்மெணட் ரொம்பத் தப்பு சார்" எழுப்புகிறது. தனது வகுப்பறை அனுபவத்தை பகிர்வதன் மூலம் தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்கிறார் தேனி சுந்தர். இதை படிப்பவர் ஒரு குழந்தையின் மனநிலையை உணர முடியும். உணர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் இதே போன்ற நாட்குறிப்பு எழுதப் பழகிக் கொண்டால், ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு பூந்தோட்டம்தான். ஒவ்வொரு மாணவரும் பட்டாம்பூச்சிதான்....

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
பள்ளி வகுப்பறைகள் எப்படி அமைந்தால் கற்கும் திறன் அதிகரிக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக அலசும் நூல். வகுப்பறையில் சிறுவர், சிறுமியரை பொம்மையாகப் பாவிக்கக் கூடாது என உறுதிபட தெரிவிக்கிறது. கற்பிக்கும்போது வகுப்பறையில் பெற்ற அனுபவத்தைச் சுவைபட எடுத்துரைக்கிறது. சுயமாக ஆர்வத்தை ஏற்படுத்துவதன் வழியாக ஏற்படும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. சிந்திப்பதில் சுதந்திர மனப்பான்மை உருவாக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. வகுப்பறையை புதிய கோணத்தில் அணுகி, கற்போருக்கு உகந்த இடமாக மாற்ற ஆலோசனைகள் தரும் நூல். - மதி - தினமலர் நாளிதழ் 05/10/2025  

மாணவர் மனசு நூல் குறித்து சீனி சந்திரசேகரன்

Image
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம். குழந்தைகள் மொழி, விளையாட்டு, வருத்தம், கொண்டாட்டம் என ஒவ்வொன்றையும் அருமையாக பதிவு செய்திருக்கும் கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். நூலிலிருந்து... ஆசிரியரை மழலைகள் பயமுறுத்த விளையாடும் விளையாட்டு நெஞ்சைகொள்ளை கொள்கிறது.. மன்னிப்பு கேட்காமலேயே மன்னிக்கிறவங்க மாமனிதர்கள். அந்த குணம் குழந்தைகளிடம் இருக்கிறது. ஆசிரியர் வீட்டை கண்டுபிடிப்பது ஆனந்தம் குழந்தைகளுக்கு.. குழந்தைக்கு வேறு சொத்துக்களெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எப்படியாவது அவனை நல்லா படிக்க வச்சிடுங்க சார். அதுபோதும் எனும் பெற்றோர்கள் வேண்டுகோள் கண்ணில் கண்ணீரை வர வரைக்கும். எப்பேர்ப்பட்ட ஆசிரியர் இருக்கும் வகுப்பறையாக இருந்தாலும் அவர் போட்ட கால அட்டவணைப்படி கற்றல் நிகழாது. ஆனால் நிகழும் கொஞ்சம் பிந்தி வாரதுகள நின்னு கூட்டிட்டு போகத்தான் இந்த பள்ளிகளுக்கு நேரமே இருப்பதில்லை.. பள்ளிக்கு வந்த அதிகாரி அந்த பதிவேடு எடுங்க இந்த பதிவேடு எடுங்க என ஆரம்பித்தார்.. வந்ததுக்கு ஏதாவது ஒன்றில் பிழை கண்டுபிடிப்பு கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து எங்களை அழகு பார்க்க வேண்டும் என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை...

திட்டமிடாத வகுப்பறைகள்.. நூல் குறித்து சீனி சந்திரசேகரன், செங்கல்பட்டு

Image
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம் : திட்டமிடாத வகுப்பறைகள்.. _ தேனி சுந்தர் வகுப்பறை குழந்தைகளுக்கானது என்பதையும், அங்கே என்ன நடக்க வேண்டும்? என்பதை குழந்தைகளே தீர்மானிக்கிறார்கள் என்பதையும், நூல் படிப்பது போன்று நாம் பாடத்தை நடத்த முடியாது என்பதையும், பல்வேறு வகுப்பறை நிகழ்வுகள் மூலம் சொல்லும் நூல் இது. நூலிலிருந்து... ரொம்ப சுத்தமா இருக்கணும். நீட்டா இருக்கணும். பள்ளிக்கூடம் போயிட்டு திரும்ப வர வரைக்கும் ஆடைகள் அழுக்காகாமல் இருக்கணும், என்ற கருத்து மாறணும். கறை நல்லது. அழுக்கு நல்லது. திறந்த வெளியில் கற்றல் ரொம்ப நல்லது. வருடம் எல்லாம் வகுப்பறையில் பொருத்தமற்ற போட்டிகளை வைத்து குழந்தைகளை நாம் தோற்கடிக்கிறோம். வருடத்தில் ஒரு நாள் அவனுக்காக போட்டி நடக்கும்போது அவன் வெற்றிவாகை சூடி கதாநாயகன் ஆகிறான். சிறந்த கல்வி, வருகை, விளையாட்டு, எல்லாம் முக்கியம்தான். அவை எல்லாவற்றையும் விட முக்கியம் ஒழுக்கம், பொது வெளியில் நேர்மையாக நடந்து கொள்வது. குழந்தைகளோடு பழகும் போது நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். முடியாதவர்கள், முயற்சி செய்யாதவர்கள், மூக்கு உடைபடுவது நிச்சயம். குழந்தை...

டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - வாசிப்பு அனுபவம் : இளையவன் சிவா

Image
மழலைச் சிறகில் மனம் பெறும் அனுபவங்கள்.. எல்லோருக்கும் குழந்தைச் செல்வங்கள் வரமெனக் கிடைத்து வாழ்வாங்கு வாழ்கின்ற வாழ்வை இல்லறம் ஏற்படுத்தித் தருகிறது. ஆனால் எல்லோருமே குழந்தைகளின் இயல்பை, குழந்தைத் தன்மையை விரும்பி ரசிக்கின்ற அதே நேரம் அதை ஆவணமாக பதிவாக நினைவுபடுத்தி வைப்பதில்லை. அப்படி ஒரு அப்பாவின் டைரியில் தனது பிள்ளைகளின் மழலைத்தனமான வினாக்களையும் அவர்களின் குறும்புகளையும் பதிவு செய்து பொதுவெளியில் உலவ விட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியின் பல அம்சங்களை குறித்து பொது அரங்குகளில் பல முக்கியமான விமர்சனங்களையும் விவாதங்களையும் நிகழ்த்தி வருபவர். கற்றல் கற்பித்தல் தொடர்பான அனுபவங்களை நூலாக எழுதியிருப்பவர் தேனி சுந்தர். சிறு குழந்தைகள் அப்பாவுடன் நடத்தும் உரையாடல் வழியே அவர்களுக்கு உரிய மழலைத்தனமும் எதையும் கேள்வி கேட்கும் தன்மையும் இயல்பாகவே அமைந்து விட்டு விடுதலையான சுதந்திரத்தனத்தில் பெரியவர்களின் வாழ்க்கை முறையையும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளின் வழியே வளரும் உரையாடலகளை கவிதைகளாக எழுதி தேனி சுந்தர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பொதுவாகவே எல்லோரது வீடுகளிலும் குழந்தைகள் தொடர்ந்...

திட்டமிடாத வகுப்பறைகள் : வாசிப்பு அனுபவம் - வாலண்டினா பிரான்சிஸ்

Image
மாணவர் மனசு என்ற புத்தகம்தான் நான் வாசித்த தேனி சுந்தர் அவர்களின் முதல் நூல். அந்நூலில் வகுப்பறையில் குழந்தைகளுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அப்படியே எழுதியிருந்தார். அந்நூலில் சில கட்டுரைகளை வாசிக்கும் போது சிரிப்பு அடக்கமுடியவில்லை. அந்த அனுபவம்தான் இந்நூலைப் படிக்கத் தூண்டியது. இந்நூலிலும் குழந்தைகளுக்கான வகுப்பறை எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் உள்ளது. குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதைவிட அவர்களுக்குப் பிடித்தமானதை செய்ய விடும்போதுதான் குழந்தைகள் இயல்பாகக் கற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தை ஒவ்வொரு அனுபவக் கட்டுரையிலும் பார்க்க முடிகிறது. இவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் டோட்டாசான் புத்தகத்தில் வரும் கோபயாக்ஷி என்ற தலைமை ஆசிரியர்தான் நினைவுக்கு வருகிறார்.! குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் அக்கறையும் ஒவ்வொரு கட்டுரை வாசிப்பிலும் அறிய முடிந்தது. சும்மா இரு.. என்பதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்காத விஷயம்.அவர்கள் விருப்பப்படி கற்றல் அமைந்துவிட்டால் கற்றல் ஒரு சுமையாக இர...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
இந்தச் சமூகம் அறியாத பருவத்தில் குழந்தைகள் மனதில் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் வலிந்து புகுத்தி விடுகிறது. இதனால் மதம், சாதி, சடங்கு, சம்பிரதாயம் போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் வாயிலாக அவர்களிடம் அது படிந்து விடுகிறது. அதைத் தவிர்த்து சுயம், சுயமரியாதை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நூல் வலியுறுத்திக் கூறுகிறது.  - கனவு ஆசிரியர் இதழ் செப்டம்பர், 2025

தேனி சுந்தரின் 'மாணவர் மனசு' வெளிப்படுத்தும் சிறார் உளவியல் : முனைவர் மு.செந்தில் குமார்

Image
புதியவன் செந்தில் அவர்களின் வாசிப்பு அனுபவம்     கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்த, விளையும் இலக்கியப் பயிர்களில் முக்கியமான, முதன்மையான பயிர் தேனி சுந்தர் அவர்கள். அப்பகுதியின் படைப்பாளர்கள் கதை, கவிதை, நாவல் என இயங்கும்போது இவர் மட்டும் குழந்தைகளுக்கான இலக்கியத்தைக் கையிலெடுத்து தொடர்ச்சியாகப் படைப்புகளைப் படைத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மையப் பொறுப்பு, த.மு.எ.க.ச, ஆசிரியர் இயக்கங்களில் முனைப்போடு பங்காற்றி வருகிறார். கல்வி, சிறார்கள் தொடர்பான இவரது கட்டுரைகள் நாளிதழ்கள் இலக்கிய, இதழ்களில் வெளிவந்துள்ளன. 2016 - மகாராஜாவின் புதிய ஆடை 2021 - டுஜக் டுஜன் அப்பாவின் டைரி 2022 - சீமையில் இல்லாத புத்தகம் 2023 - எதிர்பாராத பரிசு 2023 - ஓங்கூட்டு டூணா 2024 - மாணவர் மனசு 2025 - நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன 2025 - திட்டமிடாத வகுப்பறைகள் 2025 - உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் 2025 - நட்சத்திரக் குழந்தை மேற்கண்ட அவரது படை...

டுஜக் டுஜக் (ஒரு அப்பாவின் டைரி ) - வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
இந்நூல் நூறு பக்கங்களை கொண்டது. புதுக்கவிதை வடிவில் குழந்தையின் மழலை மொழியை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும் பொழுதும் நம் மனதில் ஒரு பிளாஷ் பேக் தோன்றும். நம் வீட்டுக் குழந்தைகளின் சிறுவயது நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். இந்த புத்தகத்தை வாசித்த பின் கண்ணில் காணும் குழந்தைகள் எல்லாம் (நடமாடும்) கவிதைகளாகவே தோன்றும். அவர்களின் ரசிகர்களாவோம் நாம்... அடுத்தவர்களின் டைரியை வாசிக்க கூடாது !ஆனால் இந்த அப்பாவின் டைரியை தைரியமாக வாசிக்கலாம்.. இது ஒரு அப்பாவின் டைரி அல்ல... அப்பாக்களின், அம்மாக்களின் டைரி... இந்த நூலை வாசிக்கும் பொழுது இப்படி ஒரு டைரி நாம் எழுதாமல் போனதுக்கான வருத்தம் தோன்றும்... புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் - இது அனைத்தும் கொரோனா காலம் Lock down எனும் களம் அமைத்து தந்த நேரத்தில் எழுதப்பட்டது. அய்யோ... மின்னல் வெட்டுது பாப்பா ... உள்ள ஓடி வந்துரு. ...! அது நிம்மல் இல்லப்பா... கெட்டுப்போன லைட்டு....! இப்ப பாரு அமந்து அமந்து எரியும் ..,.! ---------------------------------- "கொஞ்ச நாள் கிளி வேணும் கிளி வேண...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் விவாதக் கூட்டம் : பெரம்பலூர் மேக்நாட் அறிவியல் மன்றம்

Image
அனைவருக்கும் வணக்கம். பெரம்பலூர், மேக்நாட் அறிவியல் மன்றத்தின் 4வது நூல் விவாதம் 16.08.2025 அன்று நடைபெற்றது. தேனி சுந்தர் அவர்கள் எழுதிய 'திட்டமிடாத வகுப்பறைகள்' என்ற நூல் கூட்டு வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. நூல் உள்ளடக்கமும் விவாதமும் - கருத்துத் தொகுப்பு: இந்நூலின் ஆசிரியர், பள்ளி ஆசிரியராக தம் சொந்த வகுப்பறை அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலின் உள்ளடக்கமானது முன் தொடக்க கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான வகுப்பறை சூழலில் திட்டமிடாத செயல்பாட்டு அனுபவமே ஆனாலும் கூட அவ்வனுபவத்தின் வழியாக நாம் பெறும் கோட்பாட்டுத்தன்மையை விரிவாக மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வரை பயன்படுத்த முடியும். குழந்தைமை நிறைந்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மனிதத் தன்மையுடனும் அனுசரணையாகவும் நெருங்கிய நட்பினராகவும் நடந்துகொள்ள வேண்டும். வழக்கமான திட்டமிட்ட வகுப்பறை நோக்கில் அல்லாது திட்டமிடாத செயல்பாடுகளிலும் மாணவர்களின் அறிவை உள் தூண்டுதலுடன் மிகச் சிறந்த ...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து கனவு ஆசிரியர் மாத இதழில்..

Image
குழந்தைகள் உலகை மிக நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகவும் இருக்கிறது. குழந்தைகளைக் கண்டுபிடிக்க குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகம் உங்களது குழந்தைமை கால நினைவுகளைக் கொண்டுவந்து முன்னிறுத்தும். பள்ளி வகுப்பில் நிகழ்ந்த நினைவுத் தொகுப்புகளின் அனுபவப் பகிர்வே இந்நூல். - பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளிவரும் கனவு ஆசிரியர் மாத இதழ் ஆகஸ்ட், 2025

மாணவர் மனசு நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
மழலை அரும்புகளின் மனவோட்டம் அறிந்து போதிக்கும் முறையை அனுபவங்கள் வாயிலாக கற்பிக்கும் நுால். சுவையான அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ளது. மற்றவர்கள் பழி சுமத்தி, சேட்டையை கச்சிதமாக அரங்கேற்றும் சிறுவர்களின் குறும்பு, நகைச்சுவை தருகிறது. ஆசிரியர் வீட்டை மழலையர் துப்பறிந்து கண்டுபிடிப்பது வியப்பூட்டுகிறது. கதைகளை உல்டா செய்வது, போட்டியில், பாயசம் குடித்ததாகக் கூறி பயமுறுத்துவது போன்ற சுட்டித்தனம் மகிழ வைக்கிறது.போதையுடன் வந்த தந்தையை கண்டித்தபோது கூறிய காரணம் நெகிழ வைக்கிறது. கல்வி அதிகாரிகள் மனோபாவமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கற்றலில் இனிமையையும், எளிமையையும் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. மழலையர் பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நுால். –  புலவர் சு.மதியழகன் தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : நூல் வாசிப்பு அனுபவம் : ஆசிரியர் ஐ.சுமதி

Image
புத்தகத்தின் அட்டை படத்தையும் தலைப்பையும் பார்க்கும் போது உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..  நூல்   ரொம்ப polite மாதிரி தான் தெரியும்.. ஆனா அப்படி இல்ல... நம்முடைய அந்த ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு.. கட்டுரைகள்  எல்லாமே ரௌத்திரம்..! உனக்குரிய இடம் எங்கே?,  விடுங்க சார்.. திட்டாதீங்க சார்.. படிக்க வைக்கவா? எதார்த்தத்தை விவாதிக்க வைக்கவா?, மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும் ?,  கைய கட்டு ..வாய பொத்து ..,  கேள்வியா கேட்கிற கேள்வி?, எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு ? - இப்படியான இந்நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.  தலைப்புகளில் பல கேள்விகள்... இந்த கேள்விகளில் மாணவன் ஆசிரியரை நோக்கி கேட்கும் கேள்விகள் மட்டுமல்ல,  ஆசிரியர் அதிகாரியை நோக்கி கேட்கும் கேள்விகளும் அடங்கும்.. கணக்கும் இனிக்கும் என்ற கட்டுரையில் கணக்கு ஆசிரியர் என்றாலே " ஏன் கோபம்? சிடுசிடுப்பு? சிரிச்சா என்ன? (கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போய் பார்த்தால் நம் கணித ஆசிரியர் எல்லாருமே கொஞ்சம் உர்ன்னு தான் இருந்துருக்காங்க🤔) "சிரிக்கத் தெரியாத மனிதர்களைப் பார்த்தால் சிரிக்க தோன்றும் எனக்கு " என்கிற கவிஞர்...

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
ஆசிரியருடைய மொழி நடை சிறப்பாக பேசப்படும் அளவுக்கு நகைச்சுவை நிறைந்தது. 16 தலைப்புகளில் ஆசிரியரின் அனுபவங்களை இந்நூலில் தொகுத்துள்ளார். பால்வாடி பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் "குது குதுன்னு காய்ச்சல் அடிச்சு கம்பம் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டது... பால்வாடி சித்திக், "சார், அப்படியே ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு.. அப்படியே  விளையாடிட்டு.. சோறு சாப்பிட்டுட்டு... அப்படியே அம்மா வந்துடும்ல.. அப்படியே வீட்டுக்கு போய்டலாம்ல?” என்ற ஒரே கேள்வியை விடாமல் 5 நிமிடம் இடைவெளியில் மீண்டும் மீண்டும் கேட்பதும்,  ஒரு கட்டத்தில், “என்னால் முடியலடா சித்திக்... அப்புறம்  நா அழுதுருவேன்...!” என்று சார் சொல்வதும், “எங்க சார்.... கொஞ்சம் அழுங்க சார் ? எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போம்? ” என்று ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூறுவதும்...  பே....என்று கூறி ஆசிரியரை பயமுறுத்துவதும்.. ஹா ஹா ஹா ஹா என சத்தமா சிரிங்க சார் என்று கெஞ்சுவதும் (கொஞ்சுவதும்) அழகு. புதிய கழிவறை ஜன்னலை உடைத்து,  உள்ளே சென்று மலம் கழித்த மாணவர்களை கண்டுபிடிக்க பெயர் பட்டியல் தயாரிக்கவும்... வீடு வீடா...

திட்டமிடாத வகுப்பறைகள் வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
ஒரு வகுப்பறைக்குள் ஆசிரியர் எப்படி திட்டமிடாமல் செல்ல முடியும் ? பிளான் ஏ /பி/ சி என குறைந்தது மூன்றாவது இருந்தால் தான் ஒரு நாளை திறம்பட கொண்டு செல்ல முடியும். திட்டமிடாத வகுப்பறையை எப்படி திட்டமிடுவது? என்ற கேள்வியோடு வாசித்த புத்தகம். தேனி சுந்தர் எனும் இடைநிலை ஆசிரியரால் எழுதப்பட்ட புத்தகம். தேனினும்  இனிய வகுப்பறை செயல்பாடுகளால் (அனுபவங்களால்) நிரம்பி உள்ளது. திட்டமிடாத வகுப்பறையில் மாணவர்கள் விளையாடுகிறார்கள், விளையாட்டில் ஆசிரியரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் கற்றும் கொடுக்கிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது ஒட்டிக் கொள்ளும் புன்னகை... புத்தகத்தை முடிக்கும் வரை மறையாது அதிகரிக்கும்...!   புத்தகத்தில் வரும் மாணவர்கள் அனைவரும் கவிதைகளே ! களிமண் கொடுத்து உருவம் செய்து வரச் சொன்னால் அணுகுண்டு செய்து வந்த பால்வாடி மிதுன்...அந்த அணுகுண்டில் இரு இலைகளுடன் கூடிய ஒரு காம்பை செறுகி, அதை  குட்டி செடியாக்கிய மயூரி ... கலைத் திருவிழாவில் பல குரல் போட்டியில் எல்லோரும் நாய் பூனை ஆடு என குரல் எழுப்பும்போது, சதீஷ் என்றாலே சேட்டை என...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
 

மாணவர் மனசு நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்...

Image
வகுப்பறையில் மாணவர்களுடன் ஏற்படும் அனுபவங்களையும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் வித்தியாசமான முறைகளையும் சுவாரசியமான படைப்பாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நூலில் உள்ள கட்டுரைகள் சலிப்பைத் தராமல், கதையாகவே எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு ஆசிரியருமே இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனத் தோன்ற வைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மழலை மொழியை மழலையாகவே உணர்ந்து எழுதியிருப்பது நூலுக்கு வலுச் சேர்க்கிறது. - பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளிவரும் “ கனவு ஆசிரியர்”  மாத இதழ்,   ஜூன் 202 5

ஒரு புதிய ஆசிரியனின் எழுத்து: "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." நூல் குறித்து எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன்

Image
சுந்தரின் பத்தாவது நூலை வாசிக்கிறேன். வழக்கம் போல தலைப்பிலேயே ஜொலிக்கிறார் சுந்தர். "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." பேச்சு வாக்கில் இருக்கிறது தலைப்பு. சின்னப் பையன் ரேப்பரில் சிலேட்டோடு நிற்கிறான். அவன் முழியே அர்த்தம் சேர்க்கிறது. அவன் கேள்வி கேட்கும் பையன்; பகடி செய்யும் பையன். வாத்தியாரை, பள்ளிக் கூடத்தை, அதிகாரத்தை, சமூகத்தை, அரசை என யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியொரு பையனாகவும் ஆசிரியராகவும் அமைப்பாளராகவும் இருந்து வந்த சுந்தர் எழுதிய நூல் இது. இதுவரையிலான சுந்தரின் புத்தகங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வீடு- மகன், மகளோடு ஒரு அப்பாவாக சுந்தர் உரையாடியவை. இரண்டாவது பள்ளிக்கூடம் - மாணவர்களோடு ஒரு ஆசிரியராக சுந்தரின் அனுபவங்கள். இந்த நூலும் இரண்டாம் வகைதான். ஆனால் வகுப்பறையோடு நிற்கவில்லை. அதற்கு வெளியிலும் இயங்குகிறது. ஒரு கலவையான அனுபவத்தைத் தருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்தை களமாகக் கொண்டு சில கட்டுரைகள் இருக்கின்றன. இதுவரை நான் எழுத்தில் வாசிக்காத பகுதியிது. பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி வந்து நிற்கும் ஓர் ஆசிரியரை போய் சாகச் சொல்கிறா...